Monday, March 3, 2014



நிழற்படக்கவிதை

                                               காலைப்புலர்வு


                                                                                      சின்ன சாத்தன்

இதோ! இந்த சுகந்த ஓவியம் ரசிப்பீர்!
ஒரு வினாடியில் அழிக்கப்பட்டுவிடும்
அள்ளி அள்ளிக் கண்களில் பருகிவீர்
இரவும் புலர்வும் சந்தித்த வேளை
இந்த ஓவியம் நாளைய சந்திப்பிலிருக்காது
மாறுபட்ட ஓவியங்கள் தீட்டப்படும்
புலர்வு அந்தியை நோக்கி நகரும்
அந்தி புலர்வை விரும்பிச் செல்லும்
இறப்பும் பிறப்புமாகச் சுழன்றோம்
ஓவியம் வானமெனும் தூரிகையில் தீட்டியது
அதைப் பிரதி பலிக்கும் கண்கள் ஒரு இரட்டைத்தடாகம்
நேற்றைய புலர்வைப் போல நாளையிருக்காது
அது எப்போதுமே புதுமை விரும்பி
விநாடிகள் ஒவ்வொன்றும் புத்தம் புதுசு
நாம் தான் இறந்த காலத்தில் வாழ்கிறோம்.

No comments:

Post a Comment