Saturday, March 8, 2014

Purplerumped Sunbird - Male 

Female- Purplerumped Sunbird
dedicated to all women in the world on the eve of World women day

Purplerumped Sunbird- Female photo selected for '9'0 Clock Somewhere' Magazine (South Africa)


இயற்கையில் லயப்பு
விஜயவிநாயகர் வளாகத்தில் முப்பது மரங்கள் இருக்கும். கருப்பண்ணத்தேவர் அவர்கள் வளர்த்தார். பிறகு, நானும் சேர்ந்து கொண்டேன். வேறு எந்த குடியிருப்பு மக்களும் மரங்களின் மீது லயப்பு இல்லை. அவர்கள் லயப்பு காசு, பணம் சேர்ப்பதில் தான்.
பொன்னிறப்புற்கள் வளர்ந்து புதர் மண்டிக்கிடக்க இரண்டு சாரைப்பாம்புகள் வலம் வர, ஆங்கிருந்த குழந்தைகள் பூங்காவில் குழந்தைகளும் விளையாடின. சுத்தம் செய்யலாமென தீ வைக்க கரிச்சான் ஜோடி பூச்சி பிடிக்க வந்து விட்டது. பாச்சான் பால் வேலி மரத்தின் அடவிய 25 அடி உயரத்தில் சிலம்பன்கள் கூடு வைத்து அடைகாத்துக்கொண்டிருந்தது. ஒரு வெண்மார்பு மீன்கொத்தி கேபிள் வொயரில் அமர்ந்து தரையில் புழுப்பூச்சி நெளிகிறதாவெனப் பார்த்துக்கொண்டிருந்தது. அது அதிகாலையில் கெக்கப்பிக்கெஎனக் கத்தி அருகில் வேறொரு மரத்துக்குப்போகும். அது இங்கு வசிக்கிறது.
வடபுலத்திலிருந்து வந்த மாங்குயில் மஞ்சள் சேலையில் அவ்வப்போது மர உச்சியில் மயங்கவைத்தது. குட்டிப்பூனை ஒன்று சிறுவர் கையில் கிடைக்க அதற்கு ஓரமாகக்கிடந்த செங்கற்களில் சிறிய வீடமைத்து அதற்குள் தேங்காய்த்தொட்டியில் பால் ஊற்றி அடைத்து விட்டனர். அது ம்யாவ் ம்யாவ்எனக்கத்திக்கொண்டே இருந்தது. நான் அதன் கதறல் தாளாமல் வெளியில் விட்டேன்.
ஆகாயத்தில் வில் போல மலை உழவாரன் ஒன்று பறந்தது. நல்ல காகம் துப்பறிந்து, சிலம்பன் கூடிருந்த பாச்சான் அமர்ந்திருந்ததோ இல்லையோ உடனே நான்கு சிலம்பன்கள் எங்கிருந்தோ வந்து பாச்சான் கிளைகளில் அமர்ந்து இறகை விரித்து, விரித்து’ ‘கிளிங்,கிளிங்என சப்தித்து காகத்தை விரட்டின. பூனைக்குட்டி! அந்தோ! அதை கொத்தி விழுங்க புள்ளி ஆந்தை வந்து புளிய மரத்தில் அமர்ந்தது. அத்தோடு ஒரு அண்டங்காகம் போட்டியாக அமர்ந்திருந்தது. மூன்று அணில்கள் ஒன்றையொன்று துரத்திப்பிடித்து விளையாடிக்கொண்டிருந்தன.

நெருப்பு வைத்ததும், கரிச்சான் வருவதும், பூனைக்குட்டியை கபளிகரம் செய்ய புள்ளி ஆந்தை எங்கிருந்தோ வருவதும், கூடருகே வந்த காகத்தை விரட்ட கோஷ்டியாக சிலம்பன்கள் வந்ததும், இவையெல்லாம் இறைவனின் பிரபஞ்ச விளையாட்டு. நாம் இயற்கைக்கு தலை வணங்கும் விதமாக மரங்கள் வைத்து வளர்த்தால் மரங்கள் நம்மீது பூச்சொரிவதோடு இத்தகைய மனதுக்கினிய காட்சிகளைக்கொண்டு வரும். நாமும் மனஇறுக்கம் கொள்ளாமல் ஆரோக்யமாக வாழலாம்

No comments:

Post a Comment