Monday, December 30, 2013


      மாரிக்குருவி-மழைகுருவி


நீர் மேனியைக்கிள்ளிப்போகும் மாரிக்கருவி

மாரிக்குருவிகள் எவ்வளவு இருக்கும்? எனது வீட்டு முன்பு மாநாடு

Common Swallow
(Hirundo rustica)
மாரிக்குருவி
            
     இமயத்திலிருந்து வரும் இந்த குருவி பரிமாண, மாரிக்குருவிகளுக்கு மழையென்றால் பிடித்தமானது. தரையொட்டியும், வானத்து நீலவெளியிடையும் இவை அனாயசமாக பறந்தும், திரும்பியும், நம் மீது மோதவந்தது போல வந்து கடைசி நிமிஷத்தில் வளைந்தும் போகும் குறும்பு ரசிக்கக்கூடியதாகவும் இருக்கும். இவை காஷ்மீரத்து கருப்பு ரோஜாக்கள் என்பேன். பறவை பிதாமகர் சலிம் அலிக்கு ஊதாத்தேன்சிட்டு (Purple Sunbird) பிடிக்குமெனில் என் குருநாதருக்கு மாங்குயில் (Golden Oriole) பிடிக்குமெனில் எனக்கு மாரிக்கருவி பிடிக்கும். ஏனெனில் இதன் குறும்புத்தனம். பறந்தவாறே இருக்கும். என்னே! சுறுசுறுப்பு! ஏரி நீர் பரப்பின் மேல் பறந்துவாறு நீர்மேனியைக்கிள்ளுவதும், தரையை மோப்பம் பிடித்தவாறு பறந்து கொசு பிடிப்பதும், நீல வானில் பறக்கும் சிறு பூச்சிகளை லாவகமாக வேட்டையாடுவதும் அட!அட! என்ன குதியாட்டம்! இந்த பறவைகள் பறப்பதில் ஒரு கம்பீரம், ஒரு நளினம், ஒரு தன்னம்பிக்கை இருக்கும்.
            
       மாரிக்குருவிகள் காஷ்மீர், மற்றும் இமயக்குளிரின் 3000 அடிக்கு மேல் தான் காதலும் பிறகு குஞ்சுகளும் பெற்றுக்கொள்ளும். மக்கள் இங்கு உலவித்திரியும் மாரிக்கருவிகளை ஒரு வகை சிட்டுக்குருவி என் நினைத்துக்கொள்வர். இவை எப்படி திடீரென ஆகஸ்ட் மாதம் நம் பகுதிக்கு வந்தன என்ற எண்ணமற்ற மக்கள் காசு தேடி ஓட்டமா ஓட்டம். மாரிக்குருவிக்கு சுறுசுறுப்பு பிடிக்கும், எனக்கும் தான். அவைக்கு மழைத்தூறலும், குளிரும் பிடிக்கும், எனக்கும் தான். அவற்றிற்கு குறும்புத்தனம் பிடிக்கும், எனக்கும் தான். மாரிக்குருவி என எனது வலைப்பூவிற்கு பெயர் வைக்க நினைத்து, ஆங்கத்தில் சிக்கலென பிறகு மழைகுருவி என நண்பர்களிடை கலந்து முடிவாயிற்று. இப்பறவைகள் ஏரிப்பரப்பு கன்னத்தை கிள்ளுவதை புகைப்படமெடுக்க பள்ளபாளையம் குளத்தில்  50 படமெடுத்தும் சரியாகவரவில்லை. புகைப்படக்கலைஞர் யாராவது இதை முயன்று பார்க்கலாமே! அப்படிக்கிடைத்தால் எனது e-mail: sukubird@gmail.comஅனுப்பலாம். அவருக்கு Rs. 10000 பரிசு பெற்றஇமயவலம்என்ற Trekking- நூல் பரிசாக வழங்குவேன்.
            
      மாரிக்கருவிக்கு தாம்பாடி, தகைவிலான், தலையில்லாக்குருவி, அடைக்கலான், தைலான் என்பதோடு நான் செல்லமாக வைத்த பெயர் மழைகுருவி. அதுவே எனது வலைப்பூவின் பெயர். இந்த துறுதுறுப்பறவைகள் அந்தி கருக்க, நீர் சூழ்ந்த முள் மரங்களில் குழுவாகத்தங்கும். அப்போதெல்லாம் என் இல்லம் அலாதியாயிருக்கும், இப்போது மாதிரி வீடுகள் இல்லை. மழைகுருவிகள் தொலைபேசிக்கம்பிகளில் மாநாடு நடத்தும். இப்போது அரிதாகிவிட்டது. ஒவ்வொரு வலசைப்பருவத்திலும் நான் முதன் முதலில் பார்க்கும் மாரிக்குருவியை  எங்கு? எப்படிஎந்தத்தேதி, மாதம், வருஷம்? யாருடன்? எந்த நேரம்? என என் டைரியில் பதிவு செய்வேன். வலசை எப்போது வந்தன எனத்தெரிந்து விடும். ஒன்று கூட தென்படவில்லையாயின் மீண்டும் இமயத்திற்கு திரும்பு பயணம் என உணர்ந்து டைரியில் பதிவு செய்வேன். இதை சென்ற வலசைப்பருவத்தில் மாரிக்குருவி எப்போது வந்தது? எப்போது திருப்பியது? என புள்ளிவிபரம் தெரியும். தனது டைரியில் பார்த்த பறவைகளைப் பதிவு செய்து life list வைப்பவர் மட்டுமே Sincere Bird Watcher. அவரிடமிருந்து சில உபயோகமான விபரங்கள் கிடைக்கும். உதாரணத்துக்கு மாரிக்குருவி இந்த வலசைப்பருவத்தில் அதிகமாக வரவில்லை! தாமதாக வந்தது. ஏன் தாமதம்? சும்மாவாவது லட்சங்கள் செலவு செய்த காமெராவில் படம் எடுத்து FB –ல் இடுபவர் Like-ல் அவர் Like. இவர்களெல்லாம் Photographers. நல்ல புகைப்டக்கலைஞராக வாழ்த்துகள்.
மாரிக்குருவிகளின் வரவு சென்ற வலசைப்பருவம் போலில்லை. ஏன்?

பருவநிலை மாற்றம் (Climate change)

Roosting-க்கு நீர்சூழ்ந்த முள்மரங்களை, பேராசை மக்கள் வெட்டி விட்டனர்.

     வேறு காரணம் இருக்கலாம். என்னுடன் கலந்துரையாடுங்கள். வலைப்பூ வந்து படித்துவிட்டுப்போனால் மட்டும் போதாது. ஒரு வலசைபருவத்தில், சிறுவர் சிலர், ஒயரில் அமர்ந்த மாரிக்குருவிகளை உண்டிவில்லால் சிலவற்றை வீழ்த்தி விட்டனர். இதை வழியில் வந்தவன் பார்த்து, அவர்களுக்கு போதனை வகுப்பு நடத்தினேன். இது போல பல பறவைகளைக்காப்பாற்றிய சம்பவங்கள்  Bird Rescue’  எனும், எனது நூலில் வெளிவரும்.


Monday, December 23, 2013

சோளக்குருவி
Rose-coloured Starling (Sturnus roseus)

            
         இப் பறவைக்குப் பெயர் தமிழில் ரோசா மைனா, சூரைக்குருவி, சோளக்குருவி என நாமகரணம் செய்துள்ளனர். சூரைக்கருவி என்று ஏன் பெயர் வந்தது? இவை 500 – க்கு மேற்பட்ட பறவைகள் கூட மேகம் மாதிரி சோளக்காட்டின் மேல் பறந்து வந்து சோளக்கதிர்களைச் சூரையாடுவதால், நம் விவசாயிகள் இப் பெயர் வைத்திருப்பார்களோ! அத்தோடு லோகஸ்ட் (Locust) களை அழித்து விவசாயிக்கு நன்மையும் செய்கின்றன, என்பதை மறந்துவிடக்கூடாது. இவை கிழக்கு ஐரோப்பாவிலும், மேற்கு மற்றும் மத்திய ஆசியாவிலிருந்து, நமது நாட்டுக்கு வரும் பறவைகளில் முதலில் வலசை வரும் பறவைகள் என சலிம் அலி தனது The Book of Indian Birds-ல் One of our earliest winter visitors. Begins arriving July-August, depart by mid April-என்று பதிவு செய்துள்ளதை நினைவு கூறுகிறேன்.
            சோளக்குருவிகள் கோவைப்பகுதிக்கு இன்னும் வரவில்லை. இதை பல பறவை கண்காணிப்பாளர்கள் ஆமோதிக்கின்றனர். டிசம்பர் முடியப்போகிறது, அவை இன்னும் ஏன் வரவில்லை? நான் இப்பறவைகளை அரக்கோணத்தில் பட்டிமேடு குளத்தோர மின் கம்பி மற்றும் முட் செடிகளில் பத்து எண்ணிக்கையில் கண்டு தினத்தந்தியில் செய்தி கொடுத்தேன். ரயிலில் கோவை திரும்புகையில் ஊத்துக்குளி வரும் முன்னரே சோளக்காட்டுக்கு மேலே செல்லும் மின்கம்பிகளில் சொற்ப அளவில் பார்த்தேன்.
            சென்ற வலசைப்பருவங்களில் சூலூர் ஊர்வேலன்காடு, குளத்தில்(Roosting) இரவுத்தங்கல், சின்னக்குளப்பகுதி கிழக்கு குப்பை மேடு, குனியமுத்தூர் மேற்குப்புற குளம் என நிறைய சோளக்குருவிகளக்கண்டு களிப்புற்றேன். ஒரு பருவத்தில் எனது வீட்டு மதில் ஓரமிருந்த முள்முரங்கை(Erithrina indica) மரத்தில் மலர்ந்திருந்த கிரிம்சன் நிற மலர்களில் தேனுறிஞ்ச ஒரு கூட்டம் அமர்ந்தது.எனக்கு மகிழ்ச்சி கரைபுரண்டோடியது. அவைகள் நம்மூர் மைனாக்கள் துரத்தும் வரை இருந்து ஊர்வேலன்காடு நோக்கிப்பறந்தன. எத்தனைப்புகைப்படங்கள் எடுத்திருப்பேன்! கருமேகம் மாதிரி, ஒரு மாஜிக் கம்பளம் போல் ஆயிரக்கணக்கில் பறந்து வந்து சூலூர் குள நடு நீர்க்கருவேலமரங்களில், அந்தி சாயும் வேளையில் ஒருசேர அமரும். ஆதவன் மலைக்குள் மறைய, என்னால் நல்ல புகைப்படங்கள் எடுக்க முடியாமல் தவிப்பேன். ஏப்ரல் மத்தியில் சோளக்குருவிகள் ஐரோப்பா செல்ல ஆயத்தம். கொஞ்சம் கொஞ்சமாகக்  சோளக்கருவிகள் குறைய, நான் வழியனுப்பி குட்லக்சொன்ன நாட்களவை.
            இப்போது மருந்துக்குக்கூட சோளக்குருவி கோவைப்பகுதியில் இல்லை. யாருக்கு என்ன நஷ்டம்? அவை இங்கு வருகை புரியாததற்குக் காரணம், என் அறிவுக்கு எட்டியவை;-

     

சூறைக்காற்றோ!

இரவுத்தங்கல்

மாஜிக்கம்பளமோ! சூலூர் குளத்துக்கு இரவு தங்குலுக்காக வருகை

அரக்கோணம், வேலூர் மற்றும் சித்தூர் தினத்தந்தி செய்தி
1.    இருந்த சோளக்காடுகள் வீட்டுமனைப்பிரிவுகளாகிவிட்டன.
2.    எனது குருநாதர் ரத்னத்தை அலைபேசியில் தொடர்பு கொண்டபோது அவர் இப்படிச்சொன்னார்; ‘வடகிழக்குப்பருவ மழை குறிப்பிட்ட நேரத்தில் வந்தாலும், கோவைப்பகுதிகளில் தாமத மழை அதனால் சோளம் விதைப்பு தாமதமானது. சோளக்குருவி களும் இன்னும் வரக்காணோம்.’
3.    சோளக்குருவிகள் தங்க முள்மரங்கள் இல்லாதபடி மக்கள், மீன்பிடிப்பவர் குளத்துக்குள்ளிருந்ததை, வெட்டி தண்ணீர் காயவைத்து உடம்புக்கு ஊற்றிவிட்டனர். இதை பஞ்சாயித்து, கார்பரேசன், பொதுப்பணித்துறை என்ற அரசு இயந்திரம் எதுவும் தடுக்கவில்லை. சோளக்குருவி பாதுகாப்பாகத்தங்க நீர் சூழ்ந்த வேலமரங்களை விரும்புகின்றன.

வேறு காரணம் எதாவது இருந்தால் நீவிர்  எனது வலைப்பூவில் சொல்லலாம்.

First three snaps used from other co-bloggers for environmental education purpose. Thanks for them.

Wednesday, December 18, 2013


Brood parasitic Bird






Nidicolous Koels
                Nidicolous means young ones look like the adults but still beg their parents for food with bills wide open while flying with them.
                இரண்டு வார காலமாக எனது இல்லத்தைச்சுற்றி நிடிக்கோலஸ் குயில்களைப்பார்த்து ரசிக்க முடிகிறது. இரண்டு மூன்று, அந்தவிதமான குயில்கள் step mother-ஆன காகத்திடம் உணவுக்காக துரத்தித், துரத்தி கர்ர்ரு……கர்ர்ரு……என வாயைப்பிளந்தவாறு தேக்கு, வேம்பு மரங்களின் கிளைகளில் தாவுகின்றன. இவை ‘சட்’ டெனப்பார்த்தாலே நமக்குத்தெரியும் குயில் தாமென்று….. அதுவும் ஆண்குயில்கள், வெளிர் பச்சை மூக்கு, கருத்த மேனி மற்றும் க்ரிம்சன் கண்கள். பெண்குயில்கள் பொரி உடல். அப்படியிருக்க, நல்ல காகம் பறவைகளிலேயே அறிவானது. குயிலென அதற்குத்தெரியாமலாயிருக்கும். அப்படியிருந்தும் சில வாரங்களாகவே நிடிக்கோலஸ் ஆண்குயில்களுக்கு உணவு ஊட்டிக்கொண்டிருக்கின்றன.
குயிலின் முக்கிய உணவு பழம், பெர்ரி, அத்தி, சில சமயம் மட்டும் புழு, பூச்சி உண்ணும். step mother காகத்தின் உணவு, கிடைக்கும் எதுவும் உண்ணும்.(Omnivorous)  அப்படியிருக்க, நிடிகோலஸ் குயில்களுக்கு நிச்சயமாக காகம் பழவர்க்கங்களைத்தேடிப்பிடித்து, வந்து ஊட்டாது. கிடைக்கும் எதுவும் ஊட்டும், குயில்களும் அதை வாங்கி பசியாற்றுகிறது. நிடிக்கோலஸ் பறவைகள் சோம்பேரிகள். அவை இரைதேடிக்கற்றுக்கொள்ளத்தயக்கம் காட்டுகின்றன.
காகத்தைப்போல கள்ளம், தைரியம்,எச்சரிக்கை உணர்வு எந்தப்பறவைக்கும் வராது. அப்படியிருக்க, குயில் எனத்தெரிந்தும் காகம் ஊட்டுகிறது எனில் இயற்கையை வியந்துதான்ஆக வேண்டும் தோழா! சிலம்பன்கள்(Babblers) சுடலைக்குயில்(Pied crested Cuckoo) களுக்கு உணவு ஊட்டுகின்றன. அதாவது ஐந்தறிவுக்குள்ளிருக்கும் ஜீவன்கள் எந்த இனமாகயிருந்தாலும் மற்றயின ஜிவன்களைக்கூட பேணிப்பாதுகாத்து உணவு அளிக்கின்றன. மானுக்கு பசுமாடு பால் ஊட்டுகிறது. கோழி, மயில் குஞ்சுகளை கூட்டிக்கொண்டு இரைதேடுகிறது. சிங்கம், புலி மான்குட்டி, காட்டெருமைக்குட்டி, குரங்குக்குட்டியோடு விளையாடித்திளைக்கின்றன,
ஆனால் ஆறு அறிவு படைத்த தாய் தன்குழந்தையை குப்பைத்தொட்டியில் போடுவாள். தந்தை தன் குழந்தைகளைக்கைவிட்டு இன்னொரு பெண்ணோடு ஓடிவிடுவான். ஏன் இப்படிதோழி?
House Crow snap: Courtesy to my chum N. Radhakrishnan
$ You all knew koel is a Brood-parasitic Bird.

Saturday, December 14, 2013

Habitat Loss


Large grey Babbler          பெரிய சிலம்பன்
(Turdoides malcolmi)
           
         நான் பத்து வருஷங்களுக்கு முன்பு சுற்றிவந்த ஊர்வேலன்காடு வேறு, இப்போது இருக்கும் காடு வேறு. அப்போது முழுவதுமாக தில்லி முட்காடு (Jhand). காட்டை நெருங்க, நெருங்க பெரிய சிலம்பன்களின் கேகே….கேகேஎன்ற ஒலி கேட்கும். இவை அந்தக்காட்டின் வசிப்புப் பறவையினம் (Resident bird). இவை தில்லி முள் மரத்தில் முட்களில் கோப்பை போல, வரண்ட முட்களில் கூடு 8 அடி உயரத்தில் வைக்கும். மிருதுவாக இருக்க நடுவில் கொஞ்சம் காய்ந்த புற்களை வைக்கும். மஞ்சள் மூக்கு சிலம்பன் (Yellow billed Babbler) போல நீல நிறத்தில் முட்டைகளை வைக்கும். அற்பமான தில்லி முட்காடு(!) இடைஇடையே புன்செய் பயிர் நடக்கும். நான் என் கண்களையே நம்பாமல், இங்கு கல்குருவிகளைக்(Indian Coursers) கூடப்பார்த்த நாளுண்டு. வானம்பாடிக்குருவிகள் ( Lark sp.) எனக்கு மேடையில்லாமல் பாடிக்காட்டி, என் கைதட்டலை வாங்கிய காலமது. ஒரு முறை 30 சிலம்பன்கள் ஒன்றாகச்சேர்ந்து, தரைக்கு 4 அடி உயரத்தில் கேகே….கேஎன சப்தித்தவாறு சுழன்று, சுழன்று அரை ஏக்கர் அளவு முழுவதும் சுற்றி, சுற்றி வந்தது இன்றும் என் மனதில் சுழலும் நினைவு. அதைப்பற்றி ஒரு கவிதை 1.1.2000-ல் எழுதினேன்.
ஆஹா அதென்ன கருமேகமா
பறந்து போகும் கம்பளமா
விசிறி வந்த தூசிப்புயலா
துள்ளிக் குதித்த மீன் கூட்டமா
எழுந்து வந்த கடலலையா
ஊர் தாண்டி ஊர்வேலன்காடு
யாருமற்ற அநாதைக்காட்டில்
கெக்கேயேன பெரும் சபதம்
நடந்தவன் துள்ளித்திரும்பினேன்.
கண்கள் கொள்ளாத காட்சி
நினைவில் நீங்கா நீளஅலைகள்
மனதையெடுத்துப் பறந்தோடின.

            தற்போது அவை பிழைக்க வழி தெரியவில்லை. ஏனெனில் ஊர்வேலன்காடு இப்போது Real Estate எனும் பூமி விற்பவர்கள், தில்லி முட்காடுளை கண்ணுக்கு எட்டியதூரம் JCB –எனும் அரக்கன்கள் உதவியோடு அழித்து ஊர்வேலன்காடு காணாமல் போனது. கல் நாட்டி வேலி இட்டு விட்டனர்.பெரிய சிலம்பன்கள் இப்போது இடம் பெயரவேண்டிய கட்டாயம். இவற்றின் கேகே.. ஒலி தற்போது மாலை தேரம் எனது வீட்டருகில் கேட்கிறது. நான் வைத்து, வளர்த்த விதவிதமான மரங்கள் 70 இருக்கையில், பெரிய சிலம்பன்கள் இங்கு தினம் மாலையில் வந்து இரவில் சவண்டால் மரம் மற்றும் வில்வ மரங்களில் அடைகின்றன். (Roosting) அடைவதற்கு முன்பு நான் பராமரிக்கும் அரை ஏக்கர் கோயில் வளாகத்தின் தரையில் இறங்கி, இரை பொறுக்கிய பிறகு 7 பெரிய சிலம்பன்கள் சவண்டால் மரத்தில் தங்கின. மற்றொரு குழு பறந்து போய் வில்வமரங்களில் தங்கின.
பெரிய சிலம்பன்களுக்கு இந்த வாழிடம் (Habitation) அன்னியமானது. இவை முட்காட்டிலும், ஊடே புன்செய் பயிர் இருக்கும் வரண்ட காடே விரும்பும். ஆனால் எனது இல்லமருகு மக்கள் வசிப்பிடம். நல்ல காகங்கள் இவற்றைத் துரத்துகின்றன(mobbing). மேலும் Yellow billed Babblers விரும்பி ஏற்றுக்கொண்டு, பலகாலம் இங்கு வசிக்கின்றன. எனது இல்லத்தின் தேக்கு மரத்தில் கூட இவை கூடு வைத்தது. மஞ்சள் மூக்கு சிலம்பன்களும் ,காகம் போதாது என இவையும், பெரிய சிலம்பன்களை குழுவாக சப்தித்துத் துரத்துகின்றன. ஆக, பெரிய சிலம்பன்கள் பஞ்சம் பிழைக்க வந்த அகதிகள் போல எங்கள் பகுதியில் ஒண்டியிருக்கின்றன.இவற்றோடு சேர்ந்து கிட்டத்தட்ட 20 வகையான பறவையினம் இடம் பெயர்ந்தாக வேண்டிய நிர்பந்தம். வற்றிற்க்குரிய வாழிடம் முட்காடு. பேராசை பிடித்த மனிதன் கபளிகரம் செய்ய, வேறு போக்கிடம் இன்றி, தனது வாழிடம் மரப்பூங்காவாக மாற்றும் பரிதாபகரமான நிலை உருவாகியுள்ளது. இவை எங்கு கூடு வைக்கும்? அதிக தூரம் பறந்து செல்ல இவைக்கு திறன் இல்லை. அதிகாலையில் எஞ்சியுள்ள ஊர்வேலன் காடுக்கு  ஒரேதம்மில்பறக்கமுடியாமல் பறந்து செல்லும். எங்கு வேண்டுமானாலும் Real Estate இடலாமா? இதையேன், அரசு வரையறுக்கக்கூடாது? நான் உங்களுடன் பகிர்வது போல ஏகமாக தமிழகத்தில் நடந்தேறுகிறது என்பது மிகையல்ல. மனிதர்களாகிய நாம் தான் மாற வேண்டும். அரசு, அடுத்துவருவதும் தமது ஆட்சியாக இருக்க, என்ன செய்யவேண்டுமோ அதை மட்டும் செய்யும். Am I correct?





Sunday, November 24, 2013

காந்தள் மலர்--- Water snow flat வண்ணத்துப்பூச்சி 


Photo courtesy my dear friend Mr. Ramachandramurthy


காந்தள் மலர்--- Water snow flat
(Gloriosa superba) (Tagiades litigiosa Moschler)
                வண்ணத்துப்பூச்சிகளுக்கு தமிழ் பெயர் வைக்க யாராவது முன் வந்தால் நான் உதவத் தயார். கோவையைச்சுற்றி அதாவது சிறுவாணி, வாளையார் பகுதியில் மட்டுமே நூறு விதமான வண்ணத்துப்பூச்சிகள் உள்ளன . அதை பதிவு செய்துள்ளேன் என்று மூத்த நண்பர் ராமச்சந்திர மூர்த்தி என்னிடம் சொன்னார். Butter flies of Coimbatore surroundings பற்றி யாராவது அடையாள நூல் தமிழில் எழுதி வெளிட்டு தங்கள் பெயரை மனித சரித்திரத்தில்  பதிவு செய்யலாமே! வெறுமனே புகைப்படம் எடுத்து Like வாங்கி முகநூல் ஸ்டோர் அறையில் பூட்டி வைத்து யாது பயன்?வரும் சந்ததி பயனடையுமா? இயற்கையை நோக்கி அவர்களை திருப்புதல் எங்ஙனம், தோழர்களே? சரி! விஷயத்திற்கு வருக!
             
Water snow flat
இந்தப் புகைப்படம் நண்பர் ராமச்சந்திர மூர்த்தி வாளையாறில் எடுத்தது. 2000 metre உயரம் வரையுள்ள மலைப்பிரதேசங்களில் இந்த அழகான வண்ணத்துப்பூச்சியைப்பார்க்கலாம். Skippers குடும்பத்தைச்சார்ந்தது. ஸ்கிப்பர் என்றாலே வேகமாகவும், குதித்தும் பறப்பது என அர்த்தம். அதனால் இப்பெயர் வந்தது. Moth அல்லது இது வண்ணைப்பூச்சியா எனும் அளவு குழப்பத்தை ஏற்படுத்தும் வண்ணத்துப்பூச்சி இனம். இது இறகுகளை கிடை மட்டத்திலும், சில உயரவாக்கிலும் வைத்து அமரக்கூடியது. சூர்ய குளியல் இலைக்கு அடியில் அமர்ந்து எடுக்கும். அதிகமாக பறவை எச்சத்தில் அமரும். மலருக்கும், ஈரமான பகுதிக்கும் வருகை புரியும்.. தனக்கென ஒரு பிரதேசத்தை வைத்துக்கொள்ளும். சின்ன உலா போய் மீண்டும் அதே இடம் அமரும். ஒரு சில பருவத்தில் இமயத்தில் பறந்து உலவும்.

காந்தள் மலர்

          Water snow flat வண்ணத்துப்பூச்சி அமர்ந்திருப்பது, சங்க இலக்கியங்களில் பெருமளவு பாடல் பெற்ற அழகான செங்காந்தள் மலர்.  இதன் வண்ணம் மயக்குவதாக உள்ளது. இதற்கு வாசனையில்லை. ஆனால் அதன் சிகப்பு நிறமும், திசைக்கொன்றான மகரந்தக்கேசரங்களும் மிக அழகு. இந்த மலரை முதன்முதலாக கரிமுட்டி, காடம்பாறை மலைமக்கள் வாழிடப்பகுதி, அதாவது வாண்டல் அணை Trekking (பார்க்க; வெளியிட இருக்கும் மலைமுகடு(Trekking) நூலில்)செல்கையில் கைக்கு எட்டியதைப்பறித்தேன். கொடியில் பூக்கும்.  எனது தோழி செங்காந்தள் மலரைப்பறித்து தன் கூந்தலில் சூடிக்கொண்டது வினோதமாக இருந்தது. இந்த மலரை பெண்ணின் விரலுக்கு உவமை கூறும் சங்க காலத்திய செய்யுள்கள் ஏராளம்.(சங்க காலம்; கி.மு-லிருந்து 3-ம் நூற்றாண்டு வரை) பிறகு இந்த மலர் கோவை ஆச்சான் குள ஏரிமேட்டில் கண்ணில் பட்டது. புகைப்படம் எடுத்தேன். இதன் விதை ஏற்றுமதி செய்கிறார்களாம். கண்ணுக்கு நல்லது என கிராம மக்கள் சொல்கின்றனர்.ஏற்றுமதி செய்த விதைகளிலிருந்து கண்சொட்டு மருந்து தயாராகி வருகிறதாம். இதை இந்தியாவில் யாராவது முயற்சித்தார்களா!

 காந்தள் மலருக்கே ஒரு நூலைப்படைக்கலாம். அப்படி பாராட்டுகள் வாங்கும் மலர். இதோ;-
‘செழுங்குலைக் காந்தள் கைவிரல் பூப்பவும்’ – சிறுபாணாற்றுப்படை
வளமையான கொத்துகளாக, பெண்ணின் கை விரல்களாகவே பூத்தன.

ஒண்செங்காந்தள்’- குறிஞ்சிப்பாட்டு
இயற்கை அழகோடு கூடிய செங்காந்தல் மலர்.

முளிதளிர் பிசைந்த காந்தள் மெல்விரல்’- குறுந்தொகை
மிருது தோய்ந்த அழுத்திய காந்தள் மலர், அழகான பெண்ணின் கை விரல்கள்.

 Migration of Birds talk delivered with power point presentation before Royals Rotarians, Pollachi Bharathiya vidhya mandhir School.

Sukumar(Chinna Sathan) Author of Diary on the nesting behaviour of Indian Birds receiving bouquet from Mr. Senthil Kumar Kalingarayan, BVB School Correspondence, Chartered Engineer, Mr. Karthikeyan, Bank Manager, Dhanalakhsmi Bank and Mr. Sivakumar, GM Sakthi Soyas were looking on. Mr. K.P. Dhanabalakrishnan, President of Club, Civil Engg., HOD, Eswar College has arranged this function.  










           

            

Monday, November 18, 2013

Giant wood Spider                   Wonders in Nature
(Nephila- family)

            

Dress made up of Giant wood Spider web filaments- exhibited in London Victoria museum 

male Spider less than 5 cm seen on 4" female Spider

      இந்த சிலந்தியை நான் ஆனைகட்டி தாண்டி, உள்ள ஜல்லிப்பாறையில் பாதையோரமாக, வலையில் சிலவற்றைப்பார்த்தேன். முந்திய இரவு மழை பெய்த ஈரம் இருந்தது. மறுநாள் காலை அடர்த்தியான வெண்பனி போலார் கரடிகள் போல மலைப்பள்ளத்தாக்குகளில் நகர்ந்து போய்க்கொண்டிருந்தன. ஜில் காற்று, விரல்களை பாண்ட் பாக்கெட்டுக்குள் திணிக்கச்சொன்னது. இந்த மாதிரி சிலந்தி பலவற்றை இப்போது சந்தித்ததை உங்களோடு பகிர்ந்து கொள்ள விருப்பம் ஏனெனில் இதன் பரிமாணம். வலை முழு வட்டமே 2 மீ இருக்கும். நடுவில் 4 அங்குலம் அளவிலான பல வண்ண நிறத்தில் ஒரு சிலந்தி அமர்ந்திருந்தது. அதன் வலை கெட்டியாக இருந்தது. அளவான காற்றிலும், மழையிலும் தாங்கும். வலை நின்ற வண்ணத்தில் அருகிலிருந்த மரத்தில் ஒட்டிச்சுற்றியிருந்தது. (verticle and elliptical) இது பறந்து வரும் வண்ணத்துப்பூச்சி, பறக்கும் மற்றும் துள்ளித்தாண்டும் பூச்சிகள் அதன் வலைவிரித்த பாதையில் வந்தால் சிறைபட்டு சிலந்திக்கு உணவாக வேண்டியது தான். சின்னப்பறவை அறியாமல் பறந்து வந்து மோதினால்  வலையை கலைத்துத்தப்பிவிடும். வலை ஆரத்துக்குள் ஒருசில இறந்து  பட்ட ஜிவன் கழிவு, வண்ணத்துப்பூச்சியின் சிறகை விட்டுவைப்பது, சின்னப்பறவைக்குவலையிருக்கு பாத்து வாப்பாஎன சிலந்தி எச்சரிக்கை செய்கிறது.
இன்னொரு அதிசயம், என்னை வியக்க வைத்தது போல உங்களையும் வியக்க வைக்கவேண்டுமென்றே, இதைப்பகிர்ந்து கொள்ளவிருப்பம். ஆண் சிலந்தி 5 செ.மி.க்கு மேல் இல்லை. பெண் 4 அங்குலம் ஆனால் ஆண் 5 செ.மீ. நெட்டை மனுஷியும் சித்க்குள்ளனுக்கும் ஜோடி வைத்த இறைவன் ஒரு தீராதவிளையாட்டுப்பிள்ளை தான். 2 மீ வலைப்பரப்பில் ஆண் 1 () 4 () 5 இருக்கலாம். இவை  பெண் பிடித்த இரையைத்திருடி, மிச்ச மீதியைத்திண்ணும். தனது கெட்டநேரத்தில், விபத்தாக மாட்டிய உயிரியின்  உடலில் Neurotoxin ஏற்றி அதை செயலிழக்கச்செய்யும். பெண் சிலந்தி உணவு உண்ணும் போது, ஆண் சிலந்தி பின்புறமாகச்சென்று முதுகில் ஏறி அமர்ந்து பாலுணர்வைத்தூண்டும். பெண் சிலந்தி கருத்தரித்து, பிறகு மண்ணில் துளையிட்டு முட்டையிடும். குட்டி சிலந்திகள் பிறந்ததும், சகோதர, சகோதரி சிலந்திகள் தங்களுக்குள் சண்டையிட்டு தின்பதற்குள் குட்டிகள் வெளியேறப்பார்க்கும். இந்த சிலந்தி நம்மைக்கடித்துவிட்டால் விஷமில்லை….என்ன..ஒரு நாளைக்கு வலிக்கும். இன்னொரு வினோதம் என்னவென்றால்  மூன்று நூற்றாண்டுக்கு முன்பு இந்த வகை சிலந்தி வலையில் நெய்த பளபளக்கும் கண்ணைக்கவரும் மஞ்சள் நிற உடை விக்டோரியா, லண்டன், மற்றும் ஆல்பர்ட் அருங்காட்சியகத்தில் உள்ளது. இறைவன் படைத்த லோகத்தில் என்னென்ன விந்தை!                          
 இளைஞர்கள் நிழற்படம் மட்டும் எடுத்து Like வாங்கி என்ன பயன்? அதைப்பற்றி ஆராய்ச்சி செய்யாவிட்டாலும், குறைந்த பட்சம் இணையங்களுக்குப்போய்,() நூல்களைப்படித்துத்தெரிந்து கொள்ளவாவது செய்யாலாமே…….. இது பற்றி விபரத்தோடு பிற இளம் மாணவர்களோடு பகிர்ந்து கொள்ளும் போது அவர்களுக்கு இயற்கையின் பால் ஈர்ப்பு வரும். இயற்கையைப் பேணுதலுக்கு பலர் முன் வருவர். சிலர் ஆராய்ச்சியில் இறங்கி, சில புது கண்டுபிடிப்புகள் வரவாய்ப்பு உண்டு. படியுங்கள்-பிறகு சிந்தியுங்கள். அழகான நிழற்படம் மட்டுமே போதாது.

Thanks to various websites/bloggers-Reproduced for education purpose



Tuesday, November 12, 2013


சிட்டுக்குருவி தொலைத்த மனிதர்கள்

சிட்டுக்குருவி...சிட்டுக்குருவி செய்தி தெரியுமா?

கண்ணுக்கு விருந்து

சிட்டுக்குருவி
(Passer domesticus)

சிட்டுக்குருவி பற்றிய பதிவு சங்க கால இலக்கியத்தில் உள்ளதாவென நானும் என் பறவை குருநாதர் முனைவர் ரத்னம் அவர்களும் ஆராய்ந்த போது எட்டுத்தொகையில் அடங்கும் குறுந்தொகையில் இரண்டு செய்யுள்கள் கிடைக்கப்பெற்றன. சிட்டுக்குருவி ஐரோப்பா, மத்திய கிழக்கு நாடுகள், மற்றும் ஆசியாவிலிருந்து உலகம் முழுதும் மனிதனால் கப்பலில் பிரயாணித்தும், மற்றும் உணவுக்காக இயற்கையாகவும் பரவியிருக்கும். சங்க காலம்; கி.மு- வலிருந்து 3-ம் நூற்றாண்டு. சங்க காலத்திலேயே நம்மோடு வசித்த பறவையைத்தொலைத்துக்கொண்டிருக்கிறோம். வேதனையளிக்கும்விதம் என்னவென்று  சொல்வது? மனிதன் தன் சுகபோகத்திற்காக எதையும் செய்வான். சிட்டுக்கருவியைப்பார்ப்பதற்கென்றே நான் என் ஊரில் வெள்ளிக்கிழமை கூடும் சந்தைக்கு ஒன்றும் வாங்கவில்லையாயினும் போவேன். சிட்டுக்குருவி சிந்தும் தானியங்களுக்காக அங்கு வரும்.  என் இல்லத்தின் அண்டைப்புறம் இருக்கும் ஊர்வேலன் காட்டில் இருக்கும் ஒரேஒரு குழு சிட்டுக்குருவிகள் கூட்டமாக ஒரு தில்லி முள்மரத்தில் அமர்ந்திருப்பதையும், திடீரென ஒருசேர மாயக்கம்பளம் போல பறப்பதையும் பார்க்க பனிக்காலையில் போவேன்.
அண்டைவீட்டு சுவர் பிளவில் பத்து வருஷத்திற்கு முன்பு கூடு வைத்திருந்தது. நான் குருவி உண்ண குருணை அரிசியை மதில் சுவற்றில் தூவுவேன். அவை தத்தித்தத்தி தானியம் பொறுக்குதைப்பார்த்து, என்மனம் பறந்து போகும். ஒருமுறை ஆண்குருவி மாடி சாளரம் வழி அறைக்குள் புகுந்து வெளியில் செல்லத்திணறிய போது அதன் ஜோடிபெண்குருவி சாளரத்துக்கு வெளியே பார்த்து தவித்த தவிப்பிருக்கே! நம்மைப்போல தான் குருவியினமும்….. இப்போது தண்ணீர் பாத்திரம் வைத்து, தானியம் தூவியுள்ளேன். கூடுப்பெட்டி உப்பரிகையில் தொங்கவிட்டுள்ளேன். குருவி வரக்காணோம்.

பழையதிரைப்படப்பாடல் ஒன்று;-

சிட்டுக்குருவி சிட்டுக்குருவி சேதி தெரியுமா
என்னை விட்டுப்பிரிந்து போன கணவன் வீடு திரும்பலே

சிட்டுக்குருவியே! நீ பிரிந்து போனதை யாரிடம் சொல்லிப்பாடுவேன்.

பாரதியார் குருவியைப்பற்றி மெச்சிப் பாடி, மனிதனைச்சாடியுள்ளார்.

கேளடா மானிடவா எம்மில் கீழோர் மேலோர் இல்லை
சிறியதோர் வயிற்றினுக்காய்-நாங்கள் ஜன்மமெல்லாம் வீணாய்
            மறிகள் இருப்பதுபோல்-பிறர் வசந்தனில் உழல்வதில்லை

சுவைக்க குருவி பற்றிய சங்க காலத்திய ஒரு குறுந்தொகைப்பாடல் மட்டும் இதோ;-

மாமிலாடன் இயற்றியது

ஆம்பற் பூவின் சாம்பல் அன்ன
கூம்பிய சிறகர் மனை உறை குரீஇ                                     
முன்றில் உணங்கல் மாந்தி, மன்றத்து
எருவின் நுண்தாது குடைவன ஆடி,
இல்இறைப் பள்ளித் தம் பிள்ளையொரு வதியும்
புன்கண் மாலையும், புலம்பும்,
இன்று கொல்-தோழி-அவர் சென்ற நாட்டே?’  46. மருதம்

குரீஇ= சிட்டுக்கருவி
முன்றில்= முற்றம்
மனைஉறை= இல்லம்வசிக்கும்
உணங்கல்= காய்ந்த தானியம்
மாந்தி= உண்டு
மன்றம்= கொல்லைப்புறம்
பள்ளி=தங்குதல்

பொருள்;
ஆம்பல்பூப் போல சாம்பல் நிறச்சிறகில் இல்லத்தில் வசிக்கும் குருவிகள், முற்றத்தில் சிந்தியிருக்கும் காய்ந்த தானியங்களை உண்டு, கொல்லைப்புறத்திலிருக்கும் எருக்குவியலின் நுண் உயிரிகளைபிடித்து உண்ட களைப்பில் குருவிகள் இரவு வந்ததும் தங்கப்போய்விட்டன. ஆனால் என் கணவர் சென்ற நாட்டிலிருந்து இன்னும் வீடு திரும்பலையே எனத் தோழியிடம் தலைவி புலம்புகிறாள்.

கணவன் பிரிவு சொல்லி தோழியிடம் புலம்பியது போல குருவி தொலைந்த பிரிவை யாரிடம் சொல்லிப்பாடுவேன்.



Saturday, November 9, 2013




Green lynx spider
(Peucetia Viridana)

பச்சை சிலந்தி

நிழற்ப்படத்தில் அழகு காட்டும் பச்சை சிலந்தியை நான் ஒரு விபத்தாக கோவை சிங்காநல்லூர் குளக்கரையில் சந்தித்தேன். என்ன அழகு! உடனே என் நிழற்படபெட்டிக்குள் அடைத்தேன். இவை இரண்டு வகை. அமெரிக்காவில் ஒரு இனம்.அடுத்து இந்தியா மற்றும் மயன்மாரில் உள்ளது. நம் நாட்டுச்சிலந்தியை கரை ஓரம் அடவியிருந்த உயரக் குறைவான செடிகளில் கண்டேன். உடல் இரு பாகங்களாகப்பிரிந்து வெளிர் பச்சையாக உள்ளது. எட்டுக்கால்கள் வெகு நீளமாகஊடுருவிய வெள்ளை, அத்துடன் சிறிய கருப்பு முடிகள் உள்ளன. உடலின் முன் பாகத்தில் அங்கொன்றும் இங்கொன்றுமான கருப்புப்புள்ளிகள், இரண்டாவது பாகத்தில் இலை நரம்புகள் போல வெள்ளையாக இருப்பது காணமுடிகிறது. இதில் ஒரு சிலந்தி தன்னைவிட உருவத்தில் பெரியதான கரப்பான்பூச்சியைப்பிடித்து கபளிகரம் செய்வது ஆச்சர்யத்தை வரவழைத்தது.

சட்டெனப்பார்த்தால் இவை புலப்படுவதில்லை. இலைகளில் அமர்ந்திருப்பதால் பச்சைக்குப்பச்சை ஒன்றிப்போகிறது.இதன் cousin brother (Peucetia viridan) அமெரிக்கப்பிரஜை. இது பற்றி தகவல்கள் நிறைய வலைதளத்தில் கிடைக்கும் போது நமது பிரஜை viridana பற்றி படமும் உருவத்தைபற்றிய விபரமும் தவிர ஒன்றுமில்லை. விரிடான் கடித்தால் வலிக்கும். ஆனால் விஷமில்லை.விரிடானா நம்மைக்கடித்தால் வலிக்குமா?, அத்தோடு விஷம் ஏறுமா? என்பது தெரியவில்லை. விரிடான் விவசாயத்துக்கு தீங்கு விளைவிக்கும் பூச்சிகளை பிடித்து உண்ணுவதால் விவசாயிக்கு பயன் விளைகிறது. அதே சமயம் அமெரிக்கர் இது தேனீயைப்பிடித்து உண்பதையும் பார்த்துவிட்டனர். ஆக இது பூச்சிகள் எது கிடைத்தாலும் விடுவதாக இல்லை. நமது நாட்டு பிரஜை விரிடானா கிட்டத்தட்ட ஒன்றுவிட்ட சகோதரன் விரிடான் போல தான் வாழ்க்கை இருக்கும் என நினைக்கிறேன். விரிடான் இனப்பெருக்கம் உட்பட வாழ்க்கை மிக ஸ்வராஸ்யமாக உள்ளது.வலைதளத்தில் படித்து வியப்படையுங்கள். இயற்கையின் படைப்புகளை கண்டு வியப்பது, அதன் மேல் ஒரு மரியாதை, அதை பாதுகாக்க வேண்டும் என்பது ஆன்மிகத்தின், முதல் படி. விரிடானா பற்றி ஆராயுங்கள் அல்லது அது பற்றி நூல்களில்ஏற்கனவே பதிவாகியிருந்தால் என் வலைதளத்துக்கு(comment) வந்து இது பற்றி பதிவு செய்யவும். Wikipedia விரிடானா பற்றிய விபரங்களை பதிவு செய்ய உங்களை வரவேற்கிறது





Sunday, November 3, 2013



 Blyth's Reed Warbler
 {Acrocephalus dumetorum)



பிளித் நாணல் குருவி

Blyth’s Reed Warbler

பகல் பொழுது மயங்கிக்கொண்டிருந்தது. அதாவது மேற்கே ஆதவன் வேற்று பிரதேசம் பிரவேசிக்கப்போய்க்கொண்டிருந்தான். நான் கொல்லைப்புறம் முகம் கழுவப்போனபோது மருதாணிப்புதர்ச்செடியில் ஒரு சிறுபறவை புதர் கிளைகளில்தாவிக்கொண்டிருந்ததைப்பார்த்தேன். இது கதிர்க்குருவி (Warbler)இனம் எனப்புரிதல்  என் மூளையில் நிகழ்ந்தது.இந்தப்பறவை என் பூந்தோட்டத்தில் என்றைக்கும் இல்லாத திருநாளாய் வருகைபுரிந்திருந்தது எனக்கு மகிழ்ச்சி, ஆரவாரமாக இருந்தது. மேலும் அந்த, குருவி பருமன் பறவை என் இல்ல தோட்டத்தில் இன்று இரவு தங்குவது பெரும் மனக்கிளர்ச்சியை உண்டு பண்ணியது. தனித்து அனாதையாக வந்திருந்தது. ‘துறுதுறுவென கிளைகளில் தாவிக்கொண்டிருந்தது. வால் பிளவு பட்டதாக இல்லை. ஆலிவ் பளுப்பு மேலுடம்பும், அடிபாகம் மங்கிய வெள்ளையாகவும், கண்ணுக்கு மேற்புறம் பாதிக்கண் வரை சன்னமான வெண்கோடு மற்றும் கழுத்து வெண்மையாக இருந்தது.
Identification of Warbler is difficult because they never be perched patiently in a branch. There is small variation on body features. They are look alike .So habitat area helps to identify them.
Birds Habitation clew opens identification
Paddyfield warbler – விளைநிலங்களில் காணலாம்
Booted warbler      -  முட்காடுகள்
Large Billed Leaf Warbler  -  பசுமைமாறாக்காடுகள் மற்றும் இலையுதிர் காடுகள்
Dull Green Leaf Warbler   -   பூந்தோட்டம் மற்றும் மரங்கள் அடர்ந்த பகுதி காம்பவுண்டு
Indian Great Reed Warbler – நீருள்ள புதர்ப்பகுதி
Blith’s Reed Warbler       - புதர், பூந்தோட்டம் மற்றும் மரங்கள் உள்ள பகுதி
இதில் மேலே குறிப்பிட்ட கதிர் குருவிகளின்(warblers)வாழிடம்  வைத்துப்பார்க்கும் போது எனது இல்ல வருகையாளர் Blith’s Reed Warbler,மற்றும் Dull green warbler,இவ்விரண்டிலும் எது? எனது இல்லம் மருதாணிப்புதர்ச்செடியும், வேம்பு மரங்ளும் அடர்ந்து இருக்கும் தோட்டப்பகுதி. Dull Green Leaf Warbler இமயமலை அடிவாரத்திலிருந்து பல வருடங்களாக என் இல்லம் வருவது. அதை எனக்கு நன்கு அறிமுகம் இருக்கிறது. இதன் மேல் உடம்பு வெகு மங்கிய பச்சை மற்றும் கண்ணுக்கு மேலே வெளிர் வெள்ளைக்கோடு. மேலும் Blith’s Reed Warbler- விட உருவத்தில் சிறியது.
Food search Habit reveals identification.

DullgreenLeafWarblerகாய்ந்தஇலை,தலைகளுக்கிடை பூச்சிகைப்பிடிக்கத்தாவிக்கொண்டிருக்கும்.
ஆனால் பிளித் நாணல் குருவி புதர் சிமுறுகளுக்கிடையே தாவித்தாவி பூச்சி பிடிக்கக்கூடியது. இரை தேடும் முறையும் இந்த கதிர் குருவி தான் எனக்காட்டிக்கொடுக்கிறது. ஆக உருவம், மட்டுமல்ல வாழிடம், உணவு முறை என்பனவும் பறவை அடையாளத்துக்கு உதவுகின்றன. எனவே என் இல்லம் வந்தது, நிச்சயமாக பிளித் நாணல் குருவி(Blith’s Reed Warbler) தான். இது ஆயிரக்கணக்கான மைல்கள் பாகிஸ்தானிலிருந்து அல்லது குவாட்டா நாட்டிலிருந்து பயணித்து என் இல்ல தோட்டத்துக்கு வந்தது மெய்சிலிர்க்க வைத்தது. இதன் பயணவழி குஜராத், மகாராஷ்ட்ரா, கர்நாடகாஎன பறந்து கோயம்புத்தூர், சூலூர் வந்தது அதன் வலிமை, தைரியம், வழி காணும் நுட்ப அறிவு ஆகியவற்றைக்கண்டு வியந்தேன்.
            அடையாளம்(Identification)-கண்டுபிடிப்பதில் வல்லவர் ஆக மேலும் ஒரு முறை இதைப்படித்து, Dr. Salim Ali-யின் Warbler பகுதி- The Book of Indian Birds ஊன்றிப்படியுங்கள்.