Thursday, September 15, 2016


பொங்கலூர் காட்டூர் புதூர் மர வளர்ப்பு

மன்னிக்கவும் ராஜேஸ் குமார் அவர்களே! தங்கள் சாதனைக்கு பாராட்டுகளைத்
தெரிவித்தே ஆக வேண்டும்.
செறிவறிந்து சீர்மை பயக்கும் அறிவறிந்                                                                       தாற்றின் அடங்கப்பெறின்.
அடக்கமே அறிவுடைமை என்பதை அறிந்து நடப்பவரின் நற்பண்பு, நல்லவர்களால் அறியப்பட்டு அவருக்குப்பெருமையை உண்டாக்கும். இந்த திருக்குறல் ஒன்றே தங்களைப்பற்றி என்னை எழுதத்தூண்டியது.
கெங்கநாயக்கன் பாளையத்தில் வாழும் இளைஞர் திரு. ராஜேஸ்குமார் S.R.S. Japanese Quail Products எனும் நிறுவனத்தை இதே கிராமத்தில் நடத்தி, கிராம மக்களுக்கு வேலை வாய்ப்பை ஏற்படுத்தியிருக்கிறார். இவர் வனம் இந்தியா பவுண்டேசனின் அறங்காவலராக உள்ளார். இவர் விளம்பரத்தை விரும்ப வில்லையாயினும் நாம் இவரைப்பற்றிச்சொல்லத்தான் வேண்டும். ராஜேஸ் குமார் அவர்கள் பொருத்துக்கொள்ளவேண்டும். உங்கள் சாதனையைச்சொல்லும் போது நாட்டு மக்களுக்கு உத்வேகம் பிறந்து, மேலும் லட்சக்கணக்கான மரங்கள் வளர்ந்து நின்று வான் மழையைப் பொழிவிக்கும்.
4.07.2016- செவ்வாய்கிழமை, பல்லடத்தில் வனம் இந்தியா பவுண்டேசன் வாரக்கூட்டம் முடிந்ததும், வடுகபாளையம் மரநடுவிழாவில் கலந்து கொண்டோம். இந்த விழாவினை இனிதே முடித்துக்கொண்டு நானும், செந்தில் ஆறுமுகமும் ஸ்கூட்டரில் பொங்கலூரிலிருந்து தொலைவில் உள்ள கெங்கநாயக்கன் பாளையம் கிளம்பிப்போனோம். ராஜேஸ் குமார் அவர்களின் அலைபேசி எண்கூட எங்களிடம் இல்லை. அவரைச்சந்திக்க முடியுமா என்றும் தெரியவில்லை. பல்லடத்திலிருந்து 40 கி.மீட்டராவது இருக்கும், தொலை தூரம் தான். மரங்கள் எங்களை காந்தம் போல ஈர்த்து விட்டபிறகு தவிர்க்க முடியவில்லை. இதற்கு முன்பு கெங்கநாயக்கன் பாளையம் சென்றதுமில்லை. ஏனிந்த ஆவல் அவரைப்பார்க்க என, கேள்வி கேட்பதற்குள் சொல்லி விடுகிறேன்.
சுத்துப்ட்டு பதினொரு கிராமங்களில் காட்டூர் புதூர், செம்பட்டப்பாளையம், கெங்கநாயக்கன் பாளையம், சின்னக்காட்டூர், சோளியப்பக்கவுண்டன் புதூர், சந்தநாயக்கன் பாளையம், திருமலைநாயக்கன் பாளையம் ஆகிய கிராமக்குளம், குட்டைகளில் 2300 மரக்கன்றுகள் நட்டிருக்கிறார் இந்த இளைஞர். இந்த நல்ல உள்ளத்தைப்பாராட்ட வேண்டாமா? அவரது மரப்பிள்ளைகளைக்கண்டு மகிழ்ச்சி கொள்ள வேண்டாமா? அது தான் இவ்வளவு தொலைவுப்பயணம். அதுவும் ஸ்கூட்டரில்….. போகும் வழி தெரியாது விசாரித்து, விசாரித்து சக்கரங்கள் உருண்டன. இருமருங்கும் பச்சை பசேலென காட்சிகள். பிஏபி கால்வாய் மலைப்பாம்பு போல அங்கும் இங்கும் நீரற்றுநெளிந்தன. பேரமைதியில் வழுக்கிப்போன பாதையோ அகலமான தார்சாலை. போகும் வழிநெடுக கண்ணுக்கு விருந்து. மனதுக்கும், தேகத்துக்கும் காட்சிகள் சந்தனம் பூசின.
ஒரு மணிப் பொழுதுக்கு மேலாக பயணித்து, இறைவன் புண்ணியத்தில் ராஜேஸ் குமார் மேஜை எதிரில் இருந்த இருக்கையில் அமர்ந்திருந்தோம். தேனீர் வரவழைத்தார். அவரது இலக்கு 5000 மரங்கள், இந்தப்பகுதியில் வைப்பது என தனது குறிக்கோலைப்பகிர்ந்து கொண்டார். இதில் பாதி நெருங்கியே விட்டார். மழையின்மையும், கிணற்றில் நீர் குறைவாக இருப்பதாலும் தற்சமயம் தமது சீரிய பணியை நிறுத்தி வைத்துள்ளார். எங்கெங்கு மர நாற்றுகள் நடப்பட்டுள்ளது எனத்தெரிவிக்க, நேரில் பார்த்து பரவசப்பட தமது ஊழியர் ரவியை எங்களுடன் அனுப்பி வைத்தார். இளைஞர் ரவி மோட்டார் சைக்கிளில் முன்னே செல்ல நாங்கள் பின் தொடர்ந்தோம். இவரை சம்பளத்துக்கு நியமித்துள்ளார். இவரது வேலை மரநாற்றுகளை பார்த்துக்கொள்வது, ஆடு, மாடு கடிக்காமல் பாதுகாப்பது. சொட்டுநீர் கச்சிதமாக சொட்டுகிறதா, இரும்புக்கூண்டுகள் ஒழுங்காக நிற்கின்றனவா என்பது போன்ற கண்காணிப்புப்பணிக்கு அமர்த்தியுள்ளது, அறங்காவலரின் அக்கரையையும், மரத்தின் மீது உள்ள அன்பையும் காட்டுகிறது.
 குட்டைகளின் உட்புறம், ஏரி மேடு கீழ்புறம், நீர் அளவாக நிற்கும் பகுதி ஓரங்கள், தடுப்பு அணை வழிந்து நீர் போகும் தடங்கள், எனமரக்கன்றுகள் வைத்து அசத்தியுள்ளார். கூண்டுகள் அவசியமென உள்ள மரக்கன்றுகளுக்கு இரும்புக்கூண்டுகள் வைத்துள்ளதுள்ளதோடு ஆடிக்காற்று அசைக்க முடியாத படி மரப்பாத்திக்குள் சொருகியுள்ளது அருமை. சொட்டுநீர் சிறுகருப்புக்குழாய்கள் குறுக்கும் நெடுக்குமாகப்போய் எப்படியும் மரம் வளர்த்தி தலை சிலும்ப மழை வருவிப்போம் என உறுதி கூறிப்போயின. இதில் கவனிக்க வேண்டியது என்னவெனில் தனது தென்னந் தோப்புக்கு நீர் தட்டுப்பாடாக இருப்பினும், அருகிலுள்ள குளம் குட்டை மரநாற்றுகளுக்கு விடுவது, மழை அருகிவரும் காலக்கட்டாயம் என உணர்ந்து, நீர் தரும் விவசாயிகளை நினைத்து நாங்கள் இதயம் நெகிழ்ந்து போனோம். கிராமம் ஒவ்வோன்றாகப்போகும் போது வழியில் பார்த்த மாடு மேய்ப்பவளிடம் இது உங்களுக்காக செலவு செய்து வளர்க்கும் மரங்கள். மாடுகளை மேயவிட்டுவிடாதீர்கள், என்றேன். நிழலில் கூடிக்கிடந்த கிராமியர்களிடம், இது உங்களுக்காக, மழைக்காக, நீருக்காக, நிழலுக்காக நீங்கள் பாதுகாக்க வேண்டும் என்றேன்.
திரு. ராஜேஸ் குமார் இந்த இளம் வயதில் தனது சீரிய பணியை வெளிக்காட்டாமல் தன்னடக்கத்துடன் இருப்பது நினைத்து நெகிழ்து போகாமல் என் செய்வது தோழரே! இவர் பாணி தனிப்பாணி! பாதையோரம் மரக்கன்றுகளை வைப்பதை விட குளம், குட்டை, தடுப்பு அணைவழிந்தோடும் பாதை, ஏரி மேடு சுற்றிலும் வைத்திருப்பது, காலத்துக்கும் இவர் பெயரைச்சொல்லி மரங்கள் தலையாட்டி நிற்கும். கோயிலில் ஒரு ட்யுப் லைட் கொடுத்தாலே வெளிச்சம் வெளியில் கசியவிடாமல், உபயம் என தன்பெயர் பொரிக்கும் காலகட்டத்தில், இவர் தனது பெயரை மரக்கூண்டில் பிணைக்க வேண்டாம் என்று சொன்னதும் வியப்பில் ஆழ்ந்தோம். அவரது அவா என்னவெனில் வனம் இந்தியா பவுண்டேசன் ஸ்டிக்கர் இட்டால், கூட காட்டூர் கிராமப்பொது மக்கள் என பெயர் பொரிக்கலாம் என்கிறார். இவரது மனசு விரிந்து, பரந்தது. வாழ்க! இத்தகைய நல்ல உள்ளங்களுக்காகவாவது பெண்கள் கூடி கும்பியடிப்பது போல கருமேகங்கள்  கூடி மழை பொழிய வருணபகவானை வேண்டுவோமாக!.
பயணித்ததும், எழுத்தும்
 ஆ. சுகுமார் (சின்ன சாத்தன்)
4, எசு.வி.எல். நகர்
சூலூர். 641 402


Saturday, September 3, 2016

கல்வெட்டு
அனுப்பபட்டி கல்வெட்டு
கூலித்தொழிலாளி





புளியமரங்கள்

ஆசிரியர் (ஓய்வு)
 அனுப்பபட்டி தர்ம சிந்தனையாளர்          

       அனுப்பபட்டி கிராமம் அப்போது செழிப்பான கிராமமாக இருந்திருக்க வேண்டும். இந்த கிராமத்தில் தான் பிரசித்தி பெற்ற விஞ்ஞானி ஜி.டி. நாயுடு பிறந்தார்.
1947-ல் சுதந்திரமடைந்த ஆண்டில் ஒரு கல்வெட்டு அனுப்பபட்டி பெரிய தனக்காரர்  (லேட்)திருவாளர் நா. வெங்கிடுசாமி நாயுடுவால் நிறுவப்பட்டு கிராமத்து மையப்பகுதியில் கல்தூண் ஒன்று நடப்பட்டுள்ளது. அதில் கண்டுள்ள வாசகம் பின்வருமாறு;-
1947 வந்தே மாதரம் சுதந்திரோதய சர்வ ஜித்துக்கு கா.நெ.மா. 200-ம் 18  7 1/A 5  80 11 ஜெய்ஹிந்த். நாவே அனுப்பபட்டி , இவ்வூரில் ஹரிஜனர் முதலிய ஏழைகளின் கல்வி வசதிக்காக   56 புளிய மரங்கள் வளர்க்கப்பட்டிருக்கின்றன.
கல்வெட்டுப்படி 1947-லேயே 56 புளிய மரங்கள் வளர்க்கப்பட்டு பலனுக்கு வந்து விட்டன. இந்தப்புளியமரங்களெல்லாம் அனுப்பபட்டிஏரியைச்சுற்றிய மேட்டு பன்டு-களில் இன்றும் ஆண்டுக்கொரு முறை  பலன் தந்து நிழல் பரப்பி வருகின்றன.
நா. வெங்கிடுசாமி நாயுடுவின் தர்ம சிந்தனையை எண்ணி வியப்பதோடு நிற்காமல், எந்தக்காலத்திலும் எல்லோராலும் மனமார போற்றக்கூடிய செயலாகக்கருதப்படுகிறது. அவர் புதல்வர்  திரு. அப்பாசாமி நாயுடு, பேரன் திரு. தாமோதரசாமி நாயுடு, கொள்ளுப்பேரன் திரு. ராமமூர்த்தி என வம்ச வழித்தோன்றல்களுக்கு  இந்த தர்ம காரியத்தால் காலத்துக்கும் புண்ணியமும், போற்றலும் தொடரும். கொள்ளுப்பேரன் மட்டுமே தற்போது உள்ளார்.
திரு. ராமமூர்த்தி தற்போது காரணம்பேட்டையில் வசிக்கிறார். 56 புளிய மரங்களின் காய்களால் வரும் பலனை நிர்வகிக்கும் உரிமை, அதாவது புளியங்காய்களில் வரும் வருமானத்தை நிர்வகித்து ஹரிஜன் முதலான ஏழைக்குழந்தைகளுக்கு ஆண்டு தோறும் கல்விக்கு செலவிடும் பொறுப்பு, எப்படியோ திரு. நா. வெங்கிடுசாமி நாயுடு வம்சத்திடமிருந்து, வருவாய்துறையினர் கைக்குப்போக, (1.8.76-க்கு முன்பு) நா. வெங்கடுசாமி நாயுடுவின் தர்ம காரியம் தொடராமல் போனது வருத்தத்திற்குரியது. அவரது குறிக்கோள், அவா நிறைவேறவில்லை. 56 புளிய மரத்தின் ஆண்டு பலன் ரூ. 50000 (சுமார்) ஏழைக்குழந்தைகளின் கல்விச்செலவுக்குப்போகாமல், தடம் மாறி ப்போனது வருத்தப்படக்கூடிய விஷயம்.

                      இதை ஈடு செய்யும் விதமாக1.8.1976- அன்று பேரன் தாமோதரசாமி நாயுடுவும், சுப்பே கவுண்டரும், (வெங்கிட்டாபுரம்) ஒரு ஜாய்ன்ட் அக்கவுண்ட் கூட்டுறவு விவசாய வங்கி, அனுப்பபட்டியில் ரூ 1619 /- வைப்புத்தொகையாக வைத்து, அதில் ஆண்டு ஒன்றுக்கு வரும் சொற்ப வட்டியை ஏழைக்குழந்தைகளுக்கு சுதந்திரதினத்தன்று சாக்லெட் வாங்கத்தான் பயன் படுத்தக்கூடியதாக உள்ளது.
இந்த தடம் மாறிப்போன புளியங்காய்ஆண்டுப்பலன் மீட்டெடுக்க, ஹரிஜனம் முதலான ஏழைகள் முயற்சியில் ஈடுபட, அவர்களுக்குள் ஒற்றுமையில்லை. அவர்களில் படித்து நல்ல உத்தியோகத்தில் இருப்பவர்கள், வெளியூரில் தங்கினாலும், தங்கள் சமூக முன்னேற்றத்தில் அக்கறையில்லாமலும், பிறந்த கிராமத்தை நினைத்துப்பார்க்காமலும் இருப்பது இன்னும் வருத்தமளிக்கறது என அனுப்பபட்டியில் வேலை பார்த்து ஓய்வு பெற்ற எண்பது வயது தாண்டிய திரு. மாசிலாமணி சொல்கிறார். இதையே வெங்கிட்டாபுரம் கூலித்தொழிலாளி திரு. குமாரசாமி  உண்மையென ஆமோதிக்கிறார்.
மேலும் திரு நா. வெங்கிடுசாமி நாயுடுவின் கொள்ளுப்பேரன் திரு ராமமூர்த்தி கல்வெட்டு தர்ம சாசனப்படி தனது சந்ததியின் உரிமையை நிலை நாட்ட நீதிமன்றம் செல்வது குறித்து அந்தக்குடும்பத்திற்கும் அக்கறை இல்லை. இதனால் அனுப்பபட்டி ஹரிஜன் உள்ளிட்ட ஏழைக்குடும்பக்குழந்தைகள் கல்விச்செலவுக்கான இந்த சலுகையை இழந்து நிற்கின்றனர்.
திரு. நா. வெங்கிடுசாமி நாயுடுவின் கல்வெட்டு சாசனத்துக்கும், அவருடைய நல்லதொரு சமூக சிந்தனைக்கும்  புறம்பாக  வருவாய்த்துறையினர் எப்படி செயல் படலாம் என்பது தான் நம் முன் நிற்கும் மில்லியன் டாலர் கேள்வி.
காலஞ்சென்ற திரு நா. வெங்கிடுசாமி நாயுடுவின் தர்மசிந்தனையை புளியமரங்களின் பலன் மூலமாக ஏழை, எளிய குழந்தைகளின் கல்விக்கு உதவ எண்ணிய சீரிய சிந்தனையை நாம் பாராட்டாமல் இருக்க முடியாது. தற்போது இந்த தர்ம சிந்தனை வேறு கிராமங்களில், ஊர்களில் தொடருகிறதா எனத் தேடிப்பார்க்க வேண்டும்.
சின்ன சாத்தன்

23.08.2016