Wednesday, May 29, 2013



பறவை விடு தூது










காலைக்கூட கையாகப்பயன் படுத்தும் அழகைப்பாருங்கள்.
கீ....கீ...எனக்கத்தித்திரியும் பச்சைக்கிளியை சுந்தரமூர்த்தி சுவாமிகள், தேவாரத்தில் சிவ பெருமானுக்கு தூது விடுகிறார். காலம் 9-ம் நூற்றாண்டு.

பறவை விடு தூது
பறக்குமெங் கிள்ளைகாள் பாடுமெம் பூவைகாள்
அறக்கண்என் னத்தகும் அடிகளா ரூரரை
மறக்ககில் லாமையும் வளைகள்நில் லாமையும்
உறக்கமில் லாமையும் உணர்த்தவல்லீர்களே
 
                                    பொருள்
                                    பறக்கின்ற கிளிகளே! பாடும்  இளம் பெண்களே!
                                    அறத்தைக்கண்ணாகக் கொண்டுள்ள ஆரூரை
                                    மறக்கமுடியாமல், உணவருந்த முடியவில்லை
                                    உறக்கமில்லாமல் இருக்கிறேன்! இதை அவருக்கு சொல்வீர்களா?



                            Conserve Birds
பாதைகளை விரிவு செய்து
மரத்தை வெட்டியதன் பலன்

                                                  சிரிக்கலாமே Bird watch Jokes

                   மனைவிஉங்க தம்பிமனையடி சாஸ்திரப்படி சமையலறை                
                                    இங்கிருக்கக்கூடாதுங்கறாரு.

                  Bird watcher (கணவர்) அவங்கிடக்கறான்காக்கைக்கும் குருவிக்கும் வித்தியாசம்            
                                         தெரியாத பயல்.


                 முக்குளிப்பான்(Little Grebe) ரயில் விடும் அழகை ரசித்திருக்கிறீர்களா? இதோ!









































கால் விரல்களுக்கிடையே ஜவ்வு இருந்தால் இப்படி நீர்ப்பரப்பின் மீது தட,தடவென  ஓடிப்பறக்கத்துவங்கும். ரயில் விடும் பறவைகள் நீர்காகம், நாமக்கோழி, கடற்காகம் முறையே
Cormorant, Coot and Gull.

Thanks to my associate friend  Radhakrishnan.N for beautiful  photographs

Answers Blog dated May 9th  ---- Recogize = Red Whiskered Bulbul/ செம்மீசைக்கொண்டைக்குருவி
                         12th ----Identify me = Blue Rock Thrush (Female)/நீலப்பூங்குருவி (பெண்)
                          21st---- Who am I = White Browed Bulbul/ வெண்புருவ சின்னான்


Monday, May 27, 2013

Amur falcon  நாகா! உண்ண உணவா இல்லை ?

அழகுப்பறவை














வலசைப்பாதை
Conservation
Amur Falcon
(Falco amurensis)
செங்கால் லகுடு

          செங்கால் லகுடு வட சீனா, மற்றும் வட கிழக்கு சைபீரியாவில் வாழும் பறவை. பார்க்க புறா போல் உள்ள அழகான பறவை. வாழும் பகுதியில் பனிப்பொழிவு ஆரம்பித்தவுடன் வலசை தொடங்கும். நவம்பர்-டிசம்பர் பொழுது தென்ஆப்ரிக்காவில் இருக்கும். பிறகு மே மாதம் திரும்பு பயணம். வரும் போதும், திரும்பும் போதும் கொஞ்சம் மார்க்கம் மாறுபட்டாலும் இந்தியாவில் நாகாலாந்து, வங்கம், ஒடிசா, மத்யபிரதேசம், குஜராத் வழியாக பறக்கின்றன. 3000 கி.மி கடல் மார்க்கமாகப்பறப்பதாகவும், நீண்ட தொலைதூரம் வலசை போகும் லகுடு இனம் இது தான் என கண்டறியப்பட்டுள்ளது. எங்கும் தங்காமல் மூன்று நாட்கள் கூட பறந்து செல்லும் ஆற்றல் உடையது. இதற்குப்பூச்சிதான் முக்கிய உணவு. இத்தகைய பறவைகளை நாகாலாந்து மக்கள் காட்டுமிராண்டித்தனமாக வேட்டையாடி விற்பது வேதனையை அளிக்கிறது. உண்ண எவ்வளவோ இருக்கும் போது நாகரிகம் வந்தும் மனதளவில் நாகரிகமற்ற இந்த நாகா மக்கள் ஏன் தான் இப்படி இருக்கிறார்கள்? இதற்கு அந்த மாநிலம் செழிப்பு மிக்கது. விளைச்சல் உள்ளது. இவர்கள் இருவாச்சி, செங்கால் லகுடுகளைக்கொன்று தின்றுவிட்டு வீராதி வீரன் போல அவற்றின் இறகுகளை தலையில் சூடிக்கொள்வது இன்னும் நாகரிகமடையாத ஒழுங்கீனத்தைக்காட்டுகிறது. உண்ண எவ்வளவோ கிடைக்கும் போது இந்த கொடூரபுத்தி அவசியமில்லாதது. பட்டினியாகிடக்கிறாய்? வலசை போகும் போதும், திரும்பும் போதும் லட்சத்தில் வலையில் பிடிப்பதும், அதை இறகு உரித்து விற்று பணம் சம்பாதிப்பதும் மனிதன் திருந்தவே மாட்டானா என ஆதங்கம் வருகிறது. பறவைப்பாதுகாப்பு சட்டப்படி அவர்களை தண்டிக்க வேண்டும். ஒருசில பாதுகாப்பு நடவடிக்கைளும் எடுக்கப்பட்டுள்ளது. போதாது. வேட்டை உணர்வை மனிதன் தன்னிலிருந்து முற்றிலுமாக அழிக்கவேண்டும். பறவைகளுக்கு மனிதன் பாதுகாவலனாக இருக்கவேண்டும். வலைப்பூ படங்கள் பிரசுரிக்கப்படுவது மக்கள் மனதில் பரிதாப உணர்வை தட்டி எழுப்பி, மனிதன் குரூர புத்தியை கண்ணாடியில் பார்ப்பது போல பார்த்து, பறவை பாதுகாப்பில் தங்களை ஈடுபடுத்திக்கொள்ளத்தான்.

# Thank you very much to various web and blog site runners. The stills downloaded from various web sources are used here to involve Blog visitors for conservation of Birds.

Thursday, May 23, 2013




வாரம் ஒரு முறையாவது ஆந்தை நண்பனைக்கல்லுக்குழியில் பார்த்ததால், நானும் கொம்பனும் பழக்கமாகிவிட்டோம். கடைசியாகப்பார்த்தபோது,  எடுத்த புகைப்படம் இது. அப்போது நான் ஆந்தை கண்களில் உணர்ந்தது யாதெனில், 'என்னைக்காப்பாற்றுவாயா?  அல்லால் இதுவே நமது கடைசி சந்திப்பாக இருக்கும் நண்பா!. குட்பை!'



இனி இந்த ஏகாந்த இடம் இல்லை
காப்பாற்றுவாயா?
Conservation
இந்தியப்பெரியகொம்பன் ஆந்தையை விரட்டியடித்த கதை

கொம்பன் ஆந்தை பற்றி ஏற்கனவே நமது மழைகுருவி வலைதளத்தில் அளவளாவி மகிழ்ந்தோம். சூலூர், ஊர்வேலங்காடு அத்துவானமுட்காட்டில் ஒரு ஜோ,டி 2 அடி உயர கொம்பன் ஆந்தைகள் மகிழ்ந்திருப்பதற்கு மனிதன் பங்கம் விளைவித்து விட்டான். அவனைத்தவிர யார் காணுயுர்களுக்கு தொந்தரவு தருவார்? சுயநலக்காரனாயிற்றே! மேலும் பணப்பித்து பிடித்தவனாயிற்றே. பித்து பிடித்தவனிடம் பேசினால் நாம் சொல்வது ஏறாது. ஊர்வேலங்காட்டில் ஒரு கற்குழி, (Ravine) டைனமைட் வைத்து கருங்கல்லுக்காக பூமியைத்தகர்க்க உருவாகிப்போக, அதில் காட்டில் பெய்த மழை தேங்கியது. டைனமைட் ஒலி எங்கள் வீட்டுக்குக்கேட்கும். ‘தொம், தொம்என பூமி உதை வாங்கிக்கொள்ளும். பூமி அடுக்கு சீர்குழைவு, அதை ஒட்டி பூமி அதிர்வு வந்தாலும் பரவாயில்லை, கோடிகோடியாக சம்பாதிக்கணுமே, கருங்கற்கள் வீடுகட்ட வேணுமே, என அடித்த அடியில் வசீகரிக்கும் கற்குழி உருவாகிப்போனது. அடடே! மனைவி, குழந்தைகளோடு அமர்ந்து பேசும் வண்ணம் ஏகாந்த வனப்பில் அந்த இடம் உருவாகிப்போனது. உள்ளிருந்து பேசினால் எதிரொலிக்கும்.
ஏகாந்தம் என்றால் என்ன? ஏகாந்தம் எனில் ஈ, காகா கூட இராது இயற்கையோடு தனித்திருப்பது. மக்கள் குறைந்தபட்சம் ஒரு நாய், அல்லது டிவி அல்லது டெடிபியரோடாவது இருப்பார்கள். தனிமை ஒரு பயம். அவர்கள் மனத்தோடு அவர்கள் இருக்கவே பயம்.
ஆச்சர்யத்திலும் ஆச்சர்யமாக கொம்பன் ஆந்தை வந்து குடியேறியது எனது அதிஷ்டம் என நினைத்தேன். காட்டுத்தண்ணீர், மழை பெய்தால் பெரிய கற்குழியானதால் அதிகம் தேங்கிப்போக கற்குழி முதலாளி டைனமைட் வைத்து அடித்து தூள் பறத்த முடியவில்லை. பம்ப் வைத்து கொஞ்ச நாள் செய்து பார்த்தார். சரிப்பட்டுவரவில்லை. சரி! அந்த கற்குழியை மூடுவிழா செய்தால் அந்த இடத்தை பிளாட் போட்டு விற்றுவிடலாம் என தீர்மானமாகி, இப்போது முத்துக்கவுண்டன்புதூரிலிருக்கும் பவுண்டரியலிருந்துகாஸ்டிங்கழிவுகளை இட்டு நிரப்ப கொஞ்சம் கொஞ்சமாக லாரிகளில் கொண்டுவரப்பட்டு கொட்டப்படுகிறது. இந்த பவுண்டரிக்கழிவுகள் கொட்டப்படும் பேரொலியால் பயந்து அதிர்ந்து போய் கொம்பன் ஆந்தைகள் எத்திசை ஏகியதோ என் வலைதளநண்பர்களே! தெரியலையே!
இந்த காஸ்டிங் கழிவில் வேதியல் சமாச்சாரங்கள் உள்ளன, அதைக்கொண்டு இந்த கற்குழி நிரப்பப்பட்டால்உங்கள் ஆழ்குழாய் கிணற்றுநீர் மாசு அடையும் என அந்தப்பகுதி மக்களுக்கு சொல்லிப்பார்த்தேன். காதில் வாங்கிக்கொள்ளவில்லை. ஆந்தையைப்பற்றிப்பேசினால் ஆச்சர்யமாகக்கேட்கிறார்களே ஒழிய அதைக்காணவோ, அதை பாதுகாக்கவோ மக்களுக்கு ஆர்வமில்லாமல் பணத்தில் மட்டுமே ஆர்வம் காட்டுகிறார்கள். கற்குழி நாளை வீட்டுமனையாகும். அரசுகூட சிங்காநல்லூர் கற்குழி மேல் சிங்கை பேருந்து நிலையமே கட்டிவிட்டதே! குளங்களெல்லாம் பேருந்து டிப்போக்கள், மின்நிலையங்கள் ஆக்கிவிட்ட அரசு எவ்வழியோ மக்களும் அவ்வழியே!

Tuesday, May 21, 2013
















Bulbul hillocks
மஞ்சள் கழுத்து சின்னான்               
Yellowthroated Bulbul
(Pycnonotus xantholaemus)

            இந்தப்பறவை சின்னானை இது வரை சந்தித்ததில்லை. ஆனால் மனிதச்சின்னானை சந்தித்திருக்கிறேன். இந்தப்பறவையை மூன்று முட்காட்டுமலைகளில் சந்தித்தாயிற்று. கொண்டைக்குருவிகளும் சின்னான்களும் (Bulbuls) கோவையைச்சுற்றிய பொன்னூத்து, தர்மலிங்கர்மலை, அனுவாவி எனும் மூன்று மலைகளிலும் காணக்கிடைக்கின்றன.மருதமலையில் இருக்கும், ஆயின் கண்ணிலாடவில்லை. Redvented Bulbul, Redwhiskered Bulbul, Whitebrowed Bulbul, Yellowthroated Bulbul இவை நான்கும் உலாவித்திரிவதை ரசிக்கலாம். ‘மேரி புல்புல்எனக்கொஞ்சலாம். முதலில் சொன்ன மூன்று பறவைகள் பார்த்து ரசித்தவை. மஞ்சள் கழுத்து சின்னான் இத்தனை நாள் கண்ணில் பாடாததால் கொஞ்ச முடியவில்லை. இது நாணம் கொண்டதால் பார்க்கமுடியவில்லை போலும். R- Resident-பறவை. பெர்ரிப்பழங்கள், பூச்சிகள் உணவாயிப்போயின. Dr.சலிம் அலி பதிவுப்படி இந்தப்பகுதியில் இல்லாததை வெளிக்கொணர்ந்த CNS, கோவைக்கு பாராட்டுகள்.
            அவர்கள் சொன்ன பொன்னூத்தம்மன் குன்றில் மட்டுமல்ல, அனுவாவி, தர்மலிங்கர் மலையிலும் உலவித்திரிகின்றன. இது இத்தனை நாள் காட்சிகொடுக்காததுஏனென்று பார்த்தால் இவை உள் வலசைப்பறவையாக இருக்கலாம். Dispersal, Irruption என்ற காரணத்தால் கூட இந்தப்பிராந்தியத்திற்கு வந்திருக்கலாம். இப்போது இந்த முட்காட்டுமலைக்கு வந்திருப்பதால் தென்மேற்குப்பருவமழை ஒட்டி கூடு வைக்கக்கூடும். Dr. சலிம்அலி சொல்கிறார், ‘ A confirmed skulker shy and restless”
என்னைப்பார்த்து என்ன வெட்கம் மேரி புல்புல்?


பறவை நோக்கர் தமாஷ்

மகன்; அப்பா எங்கம்மா?

அம்மா;  பைனாகுலர் ரிப்பேர் ஆயிடுத்து. கோழிக்கடைக்குப்போயிருக்கார்.

மகன்;  அங்கல்லாம்  போலாமோன்னோ  நாம?

அம்மா;  அங்க, காடை, கவுதாரி கூண்டுல இருக்குமோன்னோ அத பேர்ட்வாட்ச்பண்ணிட்டு வருவார்.

மைனாக்களை வரைந்தது நணபர் முழுமதி
கொக்கிறகர்   
 யார்? 
Who am I ? 

Sunday, May 19, 2013

Singer Mr. Magpie Robin

என்ன அழகு!
மனிதன் எனக்குத்தந்த நீரைப்பாரீர்
 இரை தேட கத்துக்காம எங்க வடக்க போறே!












மணியோசை














சரிகமபதநிச- ஆரோகனம்--சநிதபமகரிச-அவரோகனம்


Wednesday, May 15, 2013

பயணம் முடிந்த கதை

Swarm of Passenger Pigeon 
Passenger Pigeon









Nesting
              Migration day   
       
                                
Cemetery
          11.05.2013

Passenger Pigeon (Ectopistes migratorius)

பயணிப்புறாக்கள் மரித்த கதை

நான் பிறப்பதற்கு முன்னமே இந்த பயணிப்புறாக்களை ஒரே அடியாக மனிதன் தின்று தீர்த்து விட்டான். லட்சக்கணக்காக ஒரு பேரலை போல் வலசை போகும் போது சகட்டுமேனிக்கு வேட்டையாடி தின்றும், விற்றும் ஏப்பம் விட்டு விட்டான். செப்-1-1914 மார்த்தி என செல்லப்பெயர் வைத்த கடைசி பயணிப்புறா சின்சினாட்டி மிருகக்காட்சி சாலையில் உயிர் விட்டது. இது வட அமெரிக்கப்பறவை. இது வட அமெரிக்காவின் தென்கிழக்குப்பகுதி முழுதும் வலசையிலேயே இருக்கும். இதன் அபரிமிதமான எண்ணிக்கையாலேயே இதன் சந்ததி சுவடு தெரியாமல் போய்விட்டது. அழகான பறவை. இது ஒரு வலசையின் போது, 1886 –ல் தெற்கு ஒன்டோரியாவை அந்த புறா பெரும் கும்பல்(வெள்ளம்!) கடக்க 14 மணி நேரம் ஆயிற்றாம். 1.5 km அகலம் 500 km நீளம் என்றால் நினைத்துப்பாருங்கள்! அடேங்கப்பா! நமது பேராசை மக்கள் கண்ணைமூடிக்கொண்டு நாட்டுத்துப்பாக்கி, கல், வலை, தடி எனப்பயன்படுத்தி லட்சக்கணக்கில் வீழ்த்தி உள்நாட்டு வியாபாரம், ஏற்றுமதி என்று வியாபார நிறுவனங்கள் அமைத்து இந்த இனத்தையே பூண்டோடு அழித்து விட்டனர். இதன் விஞ்ஞானப்பெயரில் migratorius இருப்பதும், பொதுப்பெயரில் passenger என்று இருப்பதும் இது பயணித்துக்கொண்டே இருக்கும் பறவை என புலப்படுகிறது.
            இது மணிக்கு 100 கிமி வேகத்தில் பறந்து செல்லும். Nomadic. தனக்கு என்று ஒரு இடத்தில் இல்லாது இரவுத்தங்கல், கூடு வைக்கும் இடம், என எதுவும் இடம் மாறிக்கொண்டிருக்கும்.உயர் மரங்களில்ஒன்றின் மேல் ஒன்றாகக்கூட தங்க, சிலசமயம் பெரிய கிளைகூட உடைந்துவிடும். அலகை மார்பில் புதைத்துக்கொண்டு தூங்கும். கால்கள் மறைத்துக்கொள்ளும். ஒரு இரவு தங்கிய மகா கும்பலின் புறாக்களுக்குக்கீழே ஒரு அடிக்கு மேல் அதன் கழிவுகள்(Excreta) குவிந்திருக்கும். இந்தப்புறா 15 வயது வரை வாழும். ஆனால் மார்த்தா இறக்கும் போது 17 இருக்கும். இவை ஆக்ரான், வெள்ளை ஓக்குகளைத்தின்று வடஅமெரிக்காவில் காடுகளைப்பரப்பி இருக்கிறது.இரை தேடி ஒரு நாளைக்கு 160 கிமி கூடப்போகும். Phtilopterid louse, Columbicola extinctus, என்ற இரு பறவைகள் தங்கள் முட்டைகளுக்குகூடு கட்டாமல் பயணிப்புறாவை நம்பியிருக்க, இவைகளும் பயணிப்புறாவோடு அழிந்து பட்டன. அந்தோ!
            வரதட்சனைக்காக 4000 பயணிப்புறாக்கள் கொல்லப்பட்டு அதன் இறகுகளால் ஆன மெத்தை, தலையணை கல்யாணத்தம்பதிக்கு பரிசளிப்பு நடத்தினர். தலைவலி, வயிற்றுப்போக்கு, வயிற்று வலி, கண்கோளாறு ஆகியவற்றிற்கு பயணிப்புறாக்களின் குருதியையும், சதையையும் குடித்தும், தின்றும் இருந்த மக்களை என்னவென்பது? அப்போதிருந்த காட்டுமிராண்டித்தனத்தை நினைத்து மிரள வேண்டியுள்ளது. கூடுகளைக்கூட விட்டுவைக்காமல், உயரமான கூடுகளை பெரிய தடி கொண்டு தட்டிக்களைத்தும், மரத்துக்கே தீவைத்தும், மரத்தையே வெட்டியும், அம்பில் எய்தும் கூடுகளிலிருந்து குஞ்சுகளை தீயில் வாட்டித்தின்றிருக்கின்றனர். பொம்மை பயணிப்புறா, கந்தகப்புகை, உப்பு, சாராயம்கலந்த தானியம் என பயணிப்புறாக்களை ஏமாற்றி வதை செய்திருக்கிறார்கள். தாளப்பறக்கும் ஆயிரக்கணக்கான பறவைகளை தடியாலும், கற்களாலும் சம்ஹாரம் செய்திருக்கின்றனர். ஒரு குகை போன்று போகும் வலையில் 3500 பயணிப்புறாக்களைக்கூட பிடித்து விட்ட பராக்கிரமசாலிகள். துப்பாக்கிகள்பேசின. குழிகளில் நிரப்பப்பட்ட தானியம் புறாக்களுக்கு புதைகுழியாகிப்போனது. ஒரு வேட்டைக்காரன் தனது வாழ்நாளில் 3 மில்லியன் புறாக்களை கிழக்கு நாடுகளுக்கு வாணிபம் செய்து பெரும் செல்வந்தர் ஆகிவிட்டானாம். சிறுவர்களுக்கு புறாவேட்டை விளையாட்டும், காசுமாகிப்போனது. ஒரு டஜன் புறா 31to56 சென்ட் விலையானது. வியாபாரம் செழிக்க, பயணப்புறாக்கள் கோடிக்கணக்கில் மரித்தன.வை உலகைவிட்டே மறைந்தொழிந்தன. மனிதனை மாதிரி குரூரம் இவ்வுலகில் வேறு எந்த ஜீவனிலும் இல்லை. பயணிப்புறாவைப்பற்றி எழுதியிருக்கின்றனர். படியுங்கள். இனிமேல் இது தவிர்க்கப்பட வேண்டும் என முடிவெடுங்கள்.

ஜான் ஹெரால்ட் ஒரு பாடலை மார்த்தாவுக்கு சமர்ப்பித்து முராரி பாடியுள்ளார். அதற்கு மார்த்தா-கடைசி பயணிப்புறாக்கள்எனப்பெயர். Lyrics to "Martha (Last of the Passenger Pigeons)"

 TThan *      
 
 
Oh high above the trees and the reeds like rainbows
they landed soft as moon glow
in greens and reds they fluttered past the windows
ah but nobody cared or saw
 
till the hungry came in crowds
with their guns and dozers
and soon the peace was over
God what were they thinking of?
 
   Oh on and on till dreams come true
   you know a piece of us all goes with you
 
Oh the birds went down
they fell and they faded to the dozens
Till in a Cincinnati Zoo was the last one
 
Yes all that remained was the last
with a name of Martha
Very proud, very sad, but very wise
 
Oh as the lines filed by there were few who cared
or could be bothered
how could anyone have treated you harder
and it was all for a dollar or more
 
   Oh on and on till dreams come true
   you know a piece of us all goes with you
 
Oh and surrounded there by some of whom wept around her
in a corner of the cage they found her
she went as soft as she came so shy till the last song
oh the passenger pigeon was gone...


Thanks to those who are provide information to my blog thro' Net. It is not used for any commercial purpose and intention is to induce blog visitors to conserve Birds in near future.

Sunday, May 12, 2013


Soaring
பறவைகள் வெப்ப தாளியில் உயரே மிதத்தல்


Soaring of SpottedBilled Pelican

          Soaring என்றால்வெப்பத்தில் மேலே தாளி போல் கிளம்பும் காற்றில்உயர, உயரே வானில் கிட்டத்தட்ட வட்ட மாக குழுவாகபறவைகள் மிதத்தல்.உஷ்…அப்பாடா! ஒரு ஆங்கில சொல்லைப்புரிய வைக்க இவ்வளவு சொற்களைப்பிரயோகிக்க வேண்டியது உள்ளது. தமிழில் இதற்கு சரியான சொல் இருந்தால் தெரிவிக்கலாம். இதில் செவ்வரி நாரைகள்(Painted Stork), கூழைக்கடாக்கள்(Grey Pelican),கரும்பருந்துகள் (Black kite) குழுவாகப்பறக்கும். இது காலையிலிருந்து மாலைக்குள் நிகழுகிறது. பார்க்கக்கண்கொள்ளாத காட்சியாக இருக்கும். கூழைக்கடாக்கள், செவ்வரி நாரைகள் இரண்டும் காலை 9 மணிக்கு மேல் மாலை 5 மணிக்குள வேய்யில் நேரத்தில் காற்று லேசாகி மேலே செல்லும் போது இப்பறவைகள் காற்றைப்பயன்படுத்தி உயர உயரப்போய் வெப்பத்தாளியில் மிதந்தவாறு வட்டமடிக்கின்றன.  உண்ட (கிலோகணக்கில்)மீன்கள் செரிக்க இப்படிச்செய்கிறதா? நீல வானில் இப்படி Tunnel வடிவில் மிதப்பதுஎதற்காம்? தாள்வாக Gliding செய்யும் பறவைகள் முதலில் இறக்கை அசைத்து, மேலிருந்து தாளவந்து மிதப்பது இரைக்காக எனலாம். Gliding செய்தால் பறவை தாள வந்து மிதக்கும். ‘சோரிங்’ செய்வது இரைபிடிக்க அல்ல. ‘சோரிங்’ –கில் மேலே மேலே வெப்ப தாளியின் ஒவ்வொரு மிண்ணனுவிலும் பறவைகள் ஏறி சுவர்க்கத்தில் புள்ளிகளாகி விடுகின்றன, என Dr.சலிம்அலி வியக்கிறார். ‘சோரிங்செய்வது இறக்கைக்கு பலம் சேர்க்கிறதா?. குறும்புத்தன விளையாட்டா? மாடப்புறாக்கள் காலையில் குழுவாக வேகமாகப்பறப்பதுஒரு வகை warm up. அப்படிப்பறக்கும் போது வரும் ஒலியை ரசித்திருக்கிறீர்களா? அந்தப்பறத்தல் இரைதேடி அல்ல.’சோரிங்’ வெய்யில் பொழுது லேசான காற்றை தனக்கு சாதகமாகப்பயன்படுத்தி மிதப்பதை இயற்கை கற்றுக்கொடுத்துள்ளது.

          கரும்பருந்து பெரும்பாலும் மழைவருமோ என நினைக்கவைக்கும் வானம், கருமையாக இருக்கும் போது, கூட்டமாகசோரிங்செய்கிறது. இதை எத்தனை நாட்கள் ஐந்தாவது மாடி அலுவலகத்திலிருந்து ரசித்திருக்கிறேன்? மழைவருமோ எனும் போதில் காற்று லேசாகாது. காற்று கணக்கும். இதில் கூட கரும்பருந்துகள் சோரிங் செய்கின்றன. கூந்தகுளம், சிங்கை குளம் இவற்றின் ஏரிமேட்டில் நின்று செவ்வரி நாரைகள், கூழைக்கடாக்கள்’சோரிங்’ செய்யும் அழகை ரசித்தும்பிரம்மித்தும் இருக்கிறேன்.அதெப்படி விழாவில்  கலந்து கொள்வது போல பறவைகள் சோரிங்கில் சேர்கின்றன? பறவைகளின் அடிப்பகுதி தெரிய புதிய கோணத்தில் பார்ப்பது வனப்போ வனப்பு! வெப்ப நாடாக இருத்தல் வேண்டும். கடலுக்கு மேல் இந்த சோரிங் சாத்தியமில்லை. ஏனெனில் வெப்பதாளி அதன் மேல் உருவாகாது. சோரிங் செய்ய பறவைகளுக்கு பரந்த, வட்டமான,சதுரமான, இறகு ஓரங்களில் விரல்கள் போல அமைப்பு தேவை.


பச்சோந்தி பற்றி விரைவில்

Identify me?













Recognize  சென்ற Blog கேள்விக்கு விடை;         
Redwhiskered BulBul

Bird watch Jokes

தோழி;  உன் கணவர் தூங்கறதுக்கு முதல்ல புத்தகம் படிச்சா தூக்கம் வருமா? TV பாத்தா வருமா?
 கீதா;    அவருக்கு பறவை சப்தத்தை CD-ல கேட்டாத்தான் தூக்கம் வரும். அவர்  Bird watcher-
                        



Thursday, May 9, 2013









Recognize?
(Answer in next Blog)


சோகப்பாடகன்
Indian Plaintive Cuckoo
(Cacomantis passerines)



குக்கு இனப்பறவைகள் பெறும்பாலும் பாடக்கூடியவை. அதனால் இவைகளைத்தமிழில் பெயர்  வைக்கும் போது குயில் என்றே வழங்குகிறோம். Pied crested cuckoo-ற்கு சுடலைக்குயில் என்கிறோம். இது நமது பகுதிக்கு வந்து பாடினால் சில நாட்களில் மழை வரும் என்கின்றனர். இதற்கு மேடையும் ஒலிபெருக்கியும் அமைத்துக்கொடுக்கலாமா? Indian Plaintive Cuckoo-வை சிறுகுயில் எனச்சொல்கின்றனர். அதுவும் சோகப்பாட்டு! அதன் பெயரிலேயே தெரியுது சோகம்.இது பி-பி-பிப்பி-பிப்பீ-பிப்பி-பிப்பீ ஏன நமக்கு கேட்கும்படி தெரியும் மரத்தின் உயரக்கிளையில் அமர்ந்து பாடும். இது கூடுகட்ட சோம்பேரித்தனப்பட்டு கதிர்குருவி (Warbler) இனப்பறவைகளை செவிலித்தாய்களாக்கி, அவற்றின் கூட்டில் முட்டைகளை கள்ளத்தனமாக இட்டு விட்டு, ‘எனக்கொரு மகன் பிறப்பான், அவன் கதிர்குருவி வளர்த்தாலும், என்னைப்போலவே இருப்பான்எனப்பாடித்திரியும் போலிருக்கிறது.
           
இதனை முதலில் Blue Rock Thrush என நினைத்து ஏமாந்தேன். பறவைகளை இனம் காண்பது மூளைக்கு வேலை. அது ஒரு மர்மத்தினை விடுவிப்பது. ரகசியத்தை வெளிக்கொணர்வது. ‘த்ரில்ஆனது. பறவையிடம் போய் ID please? என்றால் அது சொல்லுமா? நாம் தான் நமது வசதிக்காக பிரித்து வைத்துள்ளோம். அதனால் நாம் தான் கண்டுபிடிக்கவேண்டும். இப்பறவையின் நீல நிறம், பார்த்த இடம் மலை அடிவார பாறை இடம், மேலும் வாலில் வெண்தீற்றல், கோடுகள் இல்லாததால், இது Blue Rock Thrush(நீலப்பூங்குருவி) என எண்ணவைத்தது. அதற்குப்பிறகு, கண்கள் சிவந்துள்ளது, வாலும் அடி வயிறும் சேறும் (vent)  இடம் வெள்ளை. வாலில் மெலிதாகத்தோன்றும் வெள்ளைப்புள்ளிகள் zoom செய்து பார்த்ததில் அதுவும் சன்னமாகத்தெரிகிறது.பாடும் போது நாம் கை அசைப்பது போல இது இறக்கையையும், வாலையும் தளர்வாகத்தொங்க விடும். அது பழக்க தோசத்தால் நாங்கள் பார்த்த போது, அதாவது பாடாத போதும் அப்படி அமர்ந்தது. (வலது படத்தில் காண்க.) மேலும் குக்கு இனப்பறவைகளுக்கு கண்களை சிகப்பாக்கி அந்த கள்ளத்தனத்தை இயற்கை வெளிக்காட்டுகிறது. Eg: Coucal, Koel, Sirkeer Cuckoo,  etc. திருடன் கண்கள் போல் குக்கு இனப்பறவைகளின் கண்கள் வித்தியாசமாகத்தெரிகின்றன. Cuckoo- பற்றி பல நூல்கள் வெளிவந்துள்ளன. Identification of Birds is an interesting art and if we solve that mystery, we will get immense joy atleast for another few days.  

Left side still taken by my friend R. Vijayakumar 

Joke
 கணவன்;(மனைவியடம்) Bird watch போயிட்டு வர்ரேன்.

மனைவி; cooling glass வேணுமா?

NB: Blog visitors are requested to spread our Blog ID to your chums.