Wednesday, May 29, 2013



பறவை விடு தூது










காலைக்கூட கையாகப்பயன் படுத்தும் அழகைப்பாருங்கள்.
கீ....கீ...எனக்கத்தித்திரியும் பச்சைக்கிளியை சுந்தரமூர்த்தி சுவாமிகள், தேவாரத்தில் சிவ பெருமானுக்கு தூது விடுகிறார். காலம் 9-ம் நூற்றாண்டு.

பறவை விடு தூது
பறக்குமெங் கிள்ளைகாள் பாடுமெம் பூவைகாள்
அறக்கண்என் னத்தகும் அடிகளா ரூரரை
மறக்ககில் லாமையும் வளைகள்நில் லாமையும்
உறக்கமில் லாமையும் உணர்த்தவல்லீர்களே
 
                                    பொருள்
                                    பறக்கின்ற கிளிகளே! பாடும்  இளம் பெண்களே!
                                    அறத்தைக்கண்ணாகக் கொண்டுள்ள ஆரூரை
                                    மறக்கமுடியாமல், உணவருந்த முடியவில்லை
                                    உறக்கமில்லாமல் இருக்கிறேன்! இதை அவருக்கு சொல்வீர்களா?



                            Conserve Birds
பாதைகளை விரிவு செய்து
மரத்தை வெட்டியதன் பலன்

                                                  சிரிக்கலாமே Bird watch Jokes

                   மனைவிஉங்க தம்பிமனையடி சாஸ்திரப்படி சமையலறை                
                                    இங்கிருக்கக்கூடாதுங்கறாரு.

                  Bird watcher (கணவர்) அவங்கிடக்கறான்காக்கைக்கும் குருவிக்கும் வித்தியாசம்            
                                         தெரியாத பயல்.


                 முக்குளிப்பான்(Little Grebe) ரயில் விடும் அழகை ரசித்திருக்கிறீர்களா? இதோ!









































கால் விரல்களுக்கிடையே ஜவ்வு இருந்தால் இப்படி நீர்ப்பரப்பின் மீது தட,தடவென  ஓடிப்பறக்கத்துவங்கும். ரயில் விடும் பறவைகள் நீர்காகம், நாமக்கோழி, கடற்காகம் முறையே
Cormorant, Coot and Gull.

Thanks to my associate friend  Radhakrishnan.N for beautiful  photographs

Answers Blog dated May 9th  ---- Recogize = Red Whiskered Bulbul/ செம்மீசைக்கொண்டைக்குருவி
                         12th ----Identify me = Blue Rock Thrush (Female)/நீலப்பூங்குருவி (பெண்)
                          21st---- Who am I = White Browed Bulbul/ வெண்புருவ சின்னான்


No comments:

Post a Comment