Monday, December 30, 2013


      மாரிக்குருவி-மழைகுருவி


நீர் மேனியைக்கிள்ளிப்போகும் மாரிக்கருவி

மாரிக்குருவிகள் எவ்வளவு இருக்கும்? எனது வீட்டு முன்பு மாநாடு

Common Swallow
(Hirundo rustica)
மாரிக்குருவி
            
     இமயத்திலிருந்து வரும் இந்த குருவி பரிமாண, மாரிக்குருவிகளுக்கு மழையென்றால் பிடித்தமானது. தரையொட்டியும், வானத்து நீலவெளியிடையும் இவை அனாயசமாக பறந்தும், திரும்பியும், நம் மீது மோதவந்தது போல வந்து கடைசி நிமிஷத்தில் வளைந்தும் போகும் குறும்பு ரசிக்கக்கூடியதாகவும் இருக்கும். இவை காஷ்மீரத்து கருப்பு ரோஜாக்கள் என்பேன். பறவை பிதாமகர் சலிம் அலிக்கு ஊதாத்தேன்சிட்டு (Purple Sunbird) பிடிக்குமெனில் என் குருநாதருக்கு மாங்குயில் (Golden Oriole) பிடிக்குமெனில் எனக்கு மாரிக்கருவி பிடிக்கும். ஏனெனில் இதன் குறும்புத்தனம். பறந்தவாறே இருக்கும். என்னே! சுறுசுறுப்பு! ஏரி நீர் பரப்பின் மேல் பறந்துவாறு நீர்மேனியைக்கிள்ளுவதும், தரையை மோப்பம் பிடித்தவாறு பறந்து கொசு பிடிப்பதும், நீல வானில் பறக்கும் சிறு பூச்சிகளை லாவகமாக வேட்டையாடுவதும் அட!அட! என்ன குதியாட்டம்! இந்த பறவைகள் பறப்பதில் ஒரு கம்பீரம், ஒரு நளினம், ஒரு தன்னம்பிக்கை இருக்கும்.
            
       மாரிக்குருவிகள் காஷ்மீர், மற்றும் இமயக்குளிரின் 3000 அடிக்கு மேல் தான் காதலும் பிறகு குஞ்சுகளும் பெற்றுக்கொள்ளும். மக்கள் இங்கு உலவித்திரியும் மாரிக்கருவிகளை ஒரு வகை சிட்டுக்குருவி என் நினைத்துக்கொள்வர். இவை எப்படி திடீரென ஆகஸ்ட் மாதம் நம் பகுதிக்கு வந்தன என்ற எண்ணமற்ற மக்கள் காசு தேடி ஓட்டமா ஓட்டம். மாரிக்குருவிக்கு சுறுசுறுப்பு பிடிக்கும், எனக்கும் தான். அவைக்கு மழைத்தூறலும், குளிரும் பிடிக்கும், எனக்கும் தான். அவற்றிற்கு குறும்புத்தனம் பிடிக்கும், எனக்கும் தான். மாரிக்குருவி என எனது வலைப்பூவிற்கு பெயர் வைக்க நினைத்து, ஆங்கத்தில் சிக்கலென பிறகு மழைகுருவி என நண்பர்களிடை கலந்து முடிவாயிற்று. இப்பறவைகள் ஏரிப்பரப்பு கன்னத்தை கிள்ளுவதை புகைப்படமெடுக்க பள்ளபாளையம் குளத்தில்  50 படமெடுத்தும் சரியாகவரவில்லை. புகைப்படக்கலைஞர் யாராவது இதை முயன்று பார்க்கலாமே! அப்படிக்கிடைத்தால் எனது e-mail: sukubird@gmail.comஅனுப்பலாம். அவருக்கு Rs. 10000 பரிசு பெற்றஇமயவலம்என்ற Trekking- நூல் பரிசாக வழங்குவேன்.
            
      மாரிக்கருவிக்கு தாம்பாடி, தகைவிலான், தலையில்லாக்குருவி, அடைக்கலான், தைலான் என்பதோடு நான் செல்லமாக வைத்த பெயர் மழைகுருவி. அதுவே எனது வலைப்பூவின் பெயர். இந்த துறுதுறுப்பறவைகள் அந்தி கருக்க, நீர் சூழ்ந்த முள் மரங்களில் குழுவாகத்தங்கும். அப்போதெல்லாம் என் இல்லம் அலாதியாயிருக்கும், இப்போது மாதிரி வீடுகள் இல்லை. மழைகுருவிகள் தொலைபேசிக்கம்பிகளில் மாநாடு நடத்தும். இப்போது அரிதாகிவிட்டது. ஒவ்வொரு வலசைப்பருவத்திலும் நான் முதன் முதலில் பார்க்கும் மாரிக்குருவியை  எங்கு? எப்படிஎந்தத்தேதி, மாதம், வருஷம்? யாருடன்? எந்த நேரம்? என என் டைரியில் பதிவு செய்வேன். வலசை எப்போது வந்தன எனத்தெரிந்து விடும். ஒன்று கூட தென்படவில்லையாயின் மீண்டும் இமயத்திற்கு திரும்பு பயணம் என உணர்ந்து டைரியில் பதிவு செய்வேன். இதை சென்ற வலசைப்பருவத்தில் மாரிக்குருவி எப்போது வந்தது? எப்போது திருப்பியது? என புள்ளிவிபரம் தெரியும். தனது டைரியில் பார்த்த பறவைகளைப் பதிவு செய்து life list வைப்பவர் மட்டுமே Sincere Bird Watcher. அவரிடமிருந்து சில உபயோகமான விபரங்கள் கிடைக்கும். உதாரணத்துக்கு மாரிக்குருவி இந்த வலசைப்பருவத்தில் அதிகமாக வரவில்லை! தாமதாக வந்தது. ஏன் தாமதம்? சும்மாவாவது லட்சங்கள் செலவு செய்த காமெராவில் படம் எடுத்து FB –ல் இடுபவர் Like-ல் அவர் Like. இவர்களெல்லாம் Photographers. நல்ல புகைப்டக்கலைஞராக வாழ்த்துகள்.
மாரிக்குருவிகளின் வரவு சென்ற வலசைப்பருவம் போலில்லை. ஏன்?

பருவநிலை மாற்றம் (Climate change)

Roosting-க்கு நீர்சூழ்ந்த முள்மரங்களை, பேராசை மக்கள் வெட்டி விட்டனர்.

     வேறு காரணம் இருக்கலாம். என்னுடன் கலந்துரையாடுங்கள். வலைப்பூ வந்து படித்துவிட்டுப்போனால் மட்டும் போதாது. ஒரு வலசைபருவத்தில், சிறுவர் சிலர், ஒயரில் அமர்ந்த மாரிக்குருவிகளை உண்டிவில்லால் சிலவற்றை வீழ்த்தி விட்டனர். இதை வழியில் வந்தவன் பார்த்து, அவர்களுக்கு போதனை வகுப்பு நடத்தினேன். இது போல பல பறவைகளைக்காப்பாற்றிய சம்பவங்கள்  Bird Rescue’  எனும், எனது நூலில் வெளிவரும்.


3 comments:

  1. மலை குருவி வளர்ப்பு உலகெங்கிலும் வளர்ந்து வரும் ஒரு தொழில் துறையாக மாறி வருகிறது மலேசிய முதலிடத்தில் இருக்கிறது இலங்கையிலும் சட்ட விரோதமாக நடைபெறுகிறது இத்து தொடர்பாக எழுதலாமே

    ReplyDelete