Wednesday, August 29, 2012

வனவலம் (Trekking)


குளவிக் கூடு
பெருமாள்முடி கோவை, தொணடாமுத்தூருக்கு அப்பால் உள்ளது. அந்த வனத்துக்குள் பாஸ்கர், குணா என்ற தோழர்களோடு வனவலம் சென்ற போது பார்த்த பிரமாண்ட குளவிக்கூட்டை நீங்கள் இப்போது பார்க்கிறீர்கள். கூடு, மரக்கூழ் மற்றும் மண் சேர்த்துக்கட்டும்.ராணிக்குளவி முட்டைகளிட்டபின் அவை பிறகு புழுக்களாகும். மூன்றாவது அவதாரமெடுத்து, நூற்றுக்கணக்கில் குளவிகள் வெளிவரும். நல்லவேளை! நாங்கள் அந்த பிரமாண்ட கூட்டைக்கடக்கும்போது கொடுக்கோடு அவதரிக்கும் குளவிகள் கூட்டை உடைத்துக்கொண்டு வெளியேறி எங்களைத் துரத்தவில்லை. அப்படித் துரத்திஇருந்தால் அதோகதி தான். அருகில் குளம், அல்லது ஆறு இருந்தால் தப்பிக்கலாம். இயற்கை அவைகளை மலர்களின் மகரந்த சேர்க்கைக்கும், பூச்சிகளைக் கட்டுப்படுத்தவும் படைத்துள்ளது.

No comments:

Post a Comment