Sunday, August 19, 2012

அன்பின் பகிர்வில் பிற ஜீவன்கள்

எச்சில் பூச்சி (Spit Bug )
புல்வெளிகளில் உலவும் போது சில இடங்களில் புல்லின் மேல் நீங்கள் வெள்ளை நுரைகளைப்பார்த்திருப்பீர்கள். நீங்கள் அதை, யாரோ எச்சில் துப்பிப்போயிருக்கிறார்கள் என்று நினைத்திருப்பீர்கள். ஆனால் நடந்தது வேறு.  புகைப்படத்தில் காணும் எச்சில் பூச்சி தன்னைச்சுற்றி ‘வழுவழு எச்சிலைத்துப்பி(Mucus) உள்ளே சந்தோசமாக அமர்ந்து விடுகிறது. காரணம்;-
(1) வெய்யிலுக்கு குளிர்ச்சியாக இருக்க (2) எதிரிகளிடமிருந்து பாதுகாப்பு.

ஆச்சர்யமாக உள்ளதா? இன்னொரு ஆச்சர்யம் என்னவெனில் இதைப்பற்றி ஒரு சித்தர் அந்தக்காலத்திலேயே பாடியுள்ளார். இதோ;-

‘புல்லினுள் இருக்கும்பூச்சி பொருந்த வெண்ணுரையுண்டாக்கி
மெல்லிய தண்ணீர் வீட்டில் வெயிற்படாதிருக்குமாபோல்
சொல்லிலே நாகை நாதர் தோய்ந்திடச்சூட்சங் கண்டாற்
கல்லிலே தெய்வமில்லைக் கருத்திலே தெய்வம் நெஞ்சே.

                                                -கணபதி தாசர்
                                            நெஞ்சறி விளக்கம்

4 comments:

  1. அறியவேண்டிய செய்தி. வாழ்த்துக்கள் ஐயா.

    வீ முருகேசன், பம்பாய், இந்தியா. +91 9833776818.

    ReplyDelete
    Replies

    1. Thank you, please keep visit my blog to know nature wonders.

      Delete
  2. பகிர்வுக்கு நன்றி.. நல்ல செய்தி..

    ReplyDelete
    Replies

    1. Thank you Madam,

      Please keep visit my blog to share my experience on Nature.

      Delete