Saturday, August 18, 2012

பறவை மீட்பு




முக்குளிப்பான் மிட்பு   Little Crebe (Tachybaptus ruficollis)

ஒரு காலைப் பொழுது பறவை நோக்கலுக்கு போனபோது ஏரி மேட்டில் ஒரு எட்டு வயது சிறுவனும், சிறுமியும் நின்றிருந்தனர் சிறுவன் பெயர் மணி கண்டன் என அவனைவிட்டுப் பிரியும் போது தெரிந்து கொண்டேன். அவன் ஒரு திசையை நோக்கி சிறுகற்களை ஏரி மேட்டில் பொறுக்கிப்பொறுக்கி வீசிக்கொண்டிருந்தான். அவன் வீசிய திசையைப் பார்த்தால், அங்கு ஒரு முக்குளிப்பான் மிதந்து கொண்டிருந்தது.

‘டேய்! ஏண்டா! கல் வீசறே? பறவைக்கு காயம் ஆயிடுமே!

‘அது வலைல மாட்டிருச்சு, தப்பிக்க கல் வீசறே.

‘வலைல மாட்டின பிறகு கல் வீசனா தப்பிக்குமா? பரிசல்ல மீன் பிடிக்கறவங்க இருக்காங்களா?

‘எங்க மாமா இப்படிப்போயிருக்காரு, வருவாரு.ஏரிமேட்டின் மேற்ப்பகுதியைக்காட்டினான.

மீனகளைப்பிடிக்க வேலி போட்டமாதிரி 4 அடி ஆழத்துக்கு நீருக்குள் வலையிருக்கும். வலை குளப்பரப்பில் தெரியவும் மிதக்கவும்  வெள்ளைத்தெர்மக்கோல் துண்டங்களை மிதக்க விடுவர். அந்த நாடகளில் படகு அல்லது பரிசலில் சென்று வலையை வீசி மீன் பிடிப்பர். தற்போது வேலி வலை ஓரமாக பரிசலில் சென்று வலையைத்தூக்கி சிக்கியிருக்கும மீனகளை ஒவ்வொன்றாகப்பிடித்து பரிசலில் போடுவர்.

முக்குளிப்பான் தன்னை விடுவிக்க முயறசி பண்ணிக்கொண்டிருந்தது. நீருக்குள் மூழகியும் மேலே வந்தும் முயறசிக்க, வலையில் மேலும் அதிகமாக மாட்டிக்கொண்டது.

நாற்பது வயதினரான பரிசல்காரர் வந்தார். விபரிதம் என்னவென்று சொன்னேன். அவர் பெயர் செந்தில்.

காலை 07.30 இருக்கும். இளம் சூரியன் வந்து விட்ட வேளை தான். பரிசலில் ஏறிக்கொண்டோம். நீரில் சின்னத் துடுப்பை வலித்துக்கொண்டு, பறவை சிக்குண்ட திசை நோக்கி பரிசலை நீரில் நகர்த்திச்சென்றார். வலையில் சிக்குண்ட முக்குளிப்பானை சமீபித்தோம. பரிசலோட்டி கீழே குனிந்து, பறவையை இடது கையிலெடுத்து வலது கை விரல்களால் நைலான் வலைச்சிக்குகளை பொறுமையாக எடுத்தார்.  எடுத்ததும், நான் பறவையை வாங்கிக்கொண்டேன். பரிசலை கரையை நோக்கிச்செலுத்தினார்.

மணிகண்டனும், அவனது தங்கையும் ஆவலுடன கரையில் நின்று கொண்டிருந்தனர். பரிசல் கரையைத்தொட்டதும, எல்லோர்முகத்திலும் குதூகலம். நான பரிசலிலிருந்து இறஙகினேன். பரிசல்காரர் மீண்டும மீன பிடிக்கச்செல்ல எத்தனித்தபோது அவரிடம சொன்னேன;-

‘வலையில் சிலசமயம் பறவைகள் இப்படி மாட்டும். இதை சாப்பிட்டு என்ன ஆகப்போகுது? உண்ண எவ்வளவோ இருக்கு. நீங்க இந்த குளத்துக்கு தலைவனா இருந்து பறவைகளைக்காப்பாத்தணும்.

அவரும் ஆமோதித்தார்.

மணிகண்டன, நான் தான் பறவையைத்தண்ணில விடுவேன்.’ எனச்சொல்ல நான் முக்குளிப்பானை அவனது கைகளில் தந்தேன். அதை சுதந்திரப்பறவையாக நீரில் விடும்போது, அது ‘தட தட வென நீரப்பரப்பில் ரெயில் விடும் என நினைத்தால், ‘குபுக் கென நீரில் மூழ்கிப்பாய்ந்தது. சிறு நீர் வட்டங்கள உருவாகிப்பெரிதாகி மறைந்தன.

‘அடே! அடே! நன்றி கூட சொல்லாமல போயிற்றே! என நான் சொல்ல யாவரும் சிரித்தனர்.
    

No comments:

Post a Comment