Tuesday, June 30, 2015


மரம் எனது உயிர்


86 year old Sri Palanisami in action. He planting a Mango sapling in front of their village Library

S/Sri Palanisami( 86 age) and Velusami,(81 age) Selakarachal villager, 


மரம் எனது உயிர்
இதை கலங்கல் கிளை நூலகத்திறப்பு விழாவின் போது மேடையில் சொன்னவர் 81 வயது மனதளவில் இளைஞர் திரு. வேலுசாமி, ஓய்வு பெற்ற தலைமை ஆசிரியர். இவர் செலங்கரிசல் எனும் கிராமத்தைச்சார்ந்தவர். காற்று பொச, பொச என வீசும் நீர் தட்டுப்பாடு உள்ள கிராமத்தில் ஆயிரம் மரம் வளர்த்த ஆபூர்வர். இவரது விவசாய நிலம் கைகொடுக்காதது போல, இங்கிருக்கும் பெரும்பாலான விவசாயிகள் அதே நிலைமையில் உளர். விவசாய மேட்டுக்காடுகளை காற்றாலைக்கு விற்றும், வாடகைக்கும் தந்து விட்டனர் பல விவசாயிகள். மர வேலுசாமி உண்மையில் மரம் தான். மரம் போல பலனை எதிர் பார்க்காமல் மரங்களை நட்டு வளர்க்கிறார். தனது சொந்தக்காசை செலவு செய்து மரங்களைப் பேணுகிறார்.
இது மாதிரி ஒரு ஓய்வு பெற்ற ஆசிரியரைப்பார்ப்பது அரிது. தனது இரண்டு மாத ஓய்வூதியப்பணம் ரூ. 40.000-த்தை வேலியிட்டு, மரநாற்றுகள்  கோயிலைச்சுற்றி, வைத்துள்ளார். நூலகத்தைச்சுற்றி, ஊராட்சியைச்சுற்றி மரங்கள் வைத்து வளர்த்து சோலைக்குள்அவை இயங்குவது போல குழுகுழு வென உள்ளது. மக்கள் மூடர்களாக உள்ளனர். ஆடு வளர்க்க மரக்கிளைகளை ஒடிக்கின்றனர். இவரது நண்பர் திரு, பழனிசாமி, 86 வயது பிராயத்தவர் இவருக்கு உறுதுணையாக உள்ளது, பக்கபலம். இரவுப்பொழுது கூட ஆடு வளர்க்கும் மூடர்கள் மரச்சிமிறு முறிப்பவர்களை நான் எப்படித்தடுப்பது என்கிறார்கள், இந்த பசுமைப்போராளிகள். புங்கன், நாவல், வேம்பு, மலையரசு, மரமல்லி, அரசு, அத்தி, மா என வகை, வகையாக வைத்து வளர்த்துள்ளனர்.
நான் கல்யாணமுருங்கை வேண்டுமென கேட்க, தார் சாலையோரமிருந்த ஒரேஒரு மரத்தில் அரிவாள் கொண்டு வந்து மூன்று கோல்கள் முள்ளுடன் வெட்டிக்கொடுத்த, இந்த இளைஞர்கள் வயதில் தான் முதியவர், ஆனால் செயல்களில் இளமை ததும்புகறது. கோயில், பள்ளி, அரசு அலுவலகம், பாதையோரம், புறம்போக்கு நிலம் என மரநாற்றுகள் நடப்பட்டு, அவைகளை வளர்த்து பசுமைப்போர்வையால் செலக்கரிசல் கிராமத்தைப்போர்த்தியுள்ளனர். பல வருடங்குளுக்கு முன்பு இவரது கிராம வீட்டுக்குச்சென்று என்னை அறிமுகப்படுத்திவிட்டு, என்னால் முடிந்த ரூ. 500 கொடுத்து அவரை மனசாற வாழ்த்தினேன். இவரை இளைஞர்கள் முன் உதாரண புருசராக ஏற்று, ஒவ்வொரு கிராமத்திலும் மர வேலுசாமி உருவெடுக்க வேண்டும்.
 உங்களுக்குள் உயிர் மூச்சாக சுழலுவது மரங்கள் சுத்திகரித்த காற்று. பிறகேன் மரங்களை உதாசினப்படுத்துகிறீர்கள்? நமது வாழ்வு ஆதாரமே மரங்கள் தாம். அவைகளை அழித்து விட்டு இன்னொரு சோமாலியா போல இந்தியாவை ஆக்குதல் தகுமா? தற்போது, எங்களின் நமது சுற்றுச்சூழலைக்காப்போம் ( protect Our Environment Trust) POET-என்ற இயக்கத்தின் மூலம் மரநாற்றுகளை மூட்டையிலிட்டு, கோவை கணபதியிலிருந்து செலக்கரிசல் கிராமத்துக்கு, 35 கி.மீ ஸ்கூட்டரில் பிரயாணித்து, ஆர்வப்பட்டு வளர்த்த முன்வரும் விவசாயிகள், மற்றும் மாணவிகள், குடிமக்கள் என இலவசமாக வினியோகிக்கிறோம். சில மரநாற்றுகளை நடவும் செய்தோம். இளைஞர்களே!  ஒரு பத்து விழுக்காடு மரத்தை நேசித்து, உங்கள் ஊரை, உங்கள் கிராமத்தை பச்சைக்கம்பளம் போர்த்துங்கள். காய்ந்து போன நதிகள் மீண்டும் உயிர்தெழும் தோழர்களே! நம்பிக்கையோடு செயல் படுங்கள். நீருக்காக, கேரளத்தையும், கர்நாடகத்தையும் கையேந்தி நிற்கும் அவலத்தை ஒழிப்போம். மரங்களை வளர்த்து மழை வருவிப்போம். சுபிட்சம் எங்கும் பரவி ஓடும் தோழா! நம் சுபிட்சத்தை மரம் பார்த்துக்கொள்ளும்.
ஓ! மரமே! எனதுஉள்மூச்சு உனது வெளிமூச்சு
எனது வெளிமூச்சு உனது உள்மூச்சு


No comments:

Post a Comment