Saturday, April 20, 2013




காடு எனது இன்னொரு தாய்
-சின்ன சாத்தன்
          

          ஒரு ஆடு மேய்க்கும் சிறுவன் ஆடுமேய்த்துக்கொண்டிருக்கும் போது தர்ம லிங்க சுவாமிமலைக்கு அடிவாரத்தில் அறிமுகமானான். அவன் பள்ளிக்கும் செல்கிறான். மழைக்குருவி வலைதளவாசகர்களுக்கு எறும்புச்சிங்கத்தை(Antlion) எப்படியும் காட்டிவிடுவதென எண்ணியிருந்தேன். மலை அடிவாரமுட்காட்டுக்குள் பறவை நோக்கலில் இருந்த போது எறும்புச்சிங்கவலைகள் இருந்ததைக்கண்டேன். அபிஷேக்சிறுவனை இது என்ன என்று கேட்டதற்கு அதைப்பற்றி உடனே விளக்குகிறான். காடுகள்; பூச்சி, விலங்கு, தாவரம், மண்தன்மை, மழை என இயற்கை அறிவை அவனுக்குக்கற்றுத்தருகின்றன. நகரச்சிறுவருக்கு அந்த அறிவு இல்லை. அவனைக்காடு, தையரியமாகவும், இயற்கை அறிவுடனும் வளர்த்தெடுக்கிறது. அவன் மரத்தண்டில் இருந்த சில்வண்டை (Cicada)இனம் கண்டு சொல்கிறான். சென்ற பதிவைப்படிக்காமல் வெறுமனே படம் பார்த்துச்செல்பவர்களுக்கு இப்போது என்ன விளங்கும்.படம் பார்ப்பது சிறுவர் வேலை.வளர்ந்தவர் நிறையப்படிக்க வேண்டும். சிக்கடாவுக்கு தமிழில் சில்வண்டு எனப்பெயர். நம்முன்னோர்,’ஏண்டா சில்வண்டு மாதிரி கத்தறே?’ என்று இயற்கையில் காணும் பூச்சியை உதாரணம் கொடுக்கின்றனர். அபிஷேக் தையரியமாக எறும்புச்சிங்க வலையை அடியோடு வாரியெடுத்துஉள்ளங்கை வைத்துக்காட்டுகிறான். சிக்கடா பிடித்துக்காட்டவா? என்கிறான். அந்த மலைஅடிவாரத்தில் யானை அடிக்கடி வரும். இரண்டுமுயல்கள்ஓடின.           

சின்னான்கள்(BulBuls)கீச்சான்(Shrike),செண்பகம்(Coucal),தேன்சிட்டுகள்(Sunbirds),கவுதாரி(Grey Partridge), ஈப்பிடிச்சான்கள்(Bee eaters) பரவசம் கூட்டின.

 ‘பள்ளியில் தேர்வு, மதியம் வருவேன்’ என அபிஷேக் விடைபெற்று இருபது நிமிஷப் பழக்கத்துக்குள் ஓடியேவிட்டான்.
            


ஒரு கோயிலோ, சர்ச்சோ, மசூதியோ சிறுவனுக்கு கற்றுக்கொடுப்பதை விட காடு நிறைய கற்றுக்கொடுக்கும்.


 -ஓஷோ



                                                                                                                                         
NB: There were  57 visitors visited my Blog “Mazhai kuruvi” on 16.4.13. Day by day more Blog readers like to visit my Blog. You are all requested to tell about my Blog to your friends. Mazhai kuruvi is an interesting informative entertainment to all.

2 comments:

  1. ஏட்டு சுரைக்காய்
    கறிக்கு உதவாது !

    ReplyDelete
    Replies
    1. ஆமாம் நண்பரே,

      மிகச்சரியான கிராமியப்பழமொழி. அருமை.

      Delete