Friday, April 26, 2013

மழை

மழை வாசம் பிடிக்குமா?
! குட்டி தேவதையே!!

















மழை வாசம் பிடிக்குமா உனக்கு?
துளிகள் வாசிக்கும் குடைத்தாளமும்,
ஈரடீசலில் தார் சாலை காட்டும்
வர்ணஜாலமும் பிடிக்குமா?
நனைந்த காற்று கணத்து நிற்கும்.
ஈரம் உண்ட களைப்பு அதற்கு!
அதில் புகுந்து நடக்க குளிருது
மழை வாசம் பிடிக்குமா உனக்கு?
மழையின் நீண்ட விரல்களுக்கு -இதோ!
தென்னை ஓலை, ஓட்டுக்கூரை
மத்தளங்களாய்ப்போயின –கேள்!
இந்த வாசிப்பு உனக்குப்பிடிக்குமா?
வீட்டுத்தோணிகளும், ஓட்டுத்துளிகளும்
சேர்ந்த மழைத் தாரைகள் ஆறாகி,
குளங்களாகி, வீழ்ச்சிகளாய்,கடலோடியது
நீர்ப்பயணம் பார்க்கப் பிடிக்குமா?
தலை துவட்டாத மரங்களும்
இடியில் புடைத்த காளான்களும்
மழைச்சாரலில் நடுங்கிய மலர்களும்
துளி தொங்கிய புல் விளிம்புகளும்
பிடிக்குமே! உனக்கு மனம் லயிக்குமே!
ஓ! மழை தேவதையே! ஓ! குட்டி தேவதையே!

No comments:

Post a Comment