Monday, April 8, 2013



பூச்சிகளின் ராஜ்ஜியம்
சிக்கடா(Cicada) ஒரு அதிசயம்
சின்ன சாத்தன்


     எனது வீட்டு மதில் ஓரம் சரக்கொன்றை மரமும் குல்மோஹர் மரமும் என்னோடு உறவாடும். நான் வளர்த்த மரக்கூட்டத்தில் அவை வருஷம் தவறாமல் பூத்துக்குலுங்கி என்னை குதூகலத்தில் ஆழ்த்தும். சரம் சரமாகத்தொங்கும் மஞ்சள், சிகப்புப்பூக்களோடு எனது மரசகாக்களை புகைப்படங்கள் பல எடுத்து பரவசப்படுவேன். அதில் ஒரு சமயம், வனத்துக்குள் செல்லும் போது கேட்பது போல சிக்கடா ஒலி ங்கிகீ...ங்கிகீ..... எனக்கேட்க என் மனைவி, ‘இனி நீங்கள் Trekking போக வேண்டியதில்லை. அந்த சூழலை இங்கேயே உருவாக்கிட்டீங்களே! என்று சிரிக்க, எனக்குள் ஓடியது என்ன தெரியுமா?

   




     சிக்கடா எப்படி இருக்கும்? அதன் வாழக்கை முறையைஅறிந்து கொள்ள ஆவல் கொண்டேன். வெளியிட்டுள்ள படம் எனக்கு மரம் தந்த உபயம். பெண் சிக்கடா மரத்தில் முட்டைகளிட்டு, அது குஞ்சு பொரிக்க சின்ன கரப்பான் பூச்சிகள்(Nymphs) போல வரும். ஆனால் இறக்கை இருக்காது. அவை அப்படியே மண்ணில் விழுந்து நிலத்துக்குள் 17 வருஷங்கள் இருக்குமாம். அப்போது அவை வேர்களின் சாறை உறிஞ்சி வாழும். Hibernation என்று சொல்லலாம். பிறகு அவை நிலத்திலிருந்து மரத்தண்டுகளுக்கு படை படையாக வந்து மரத்தில் ஒட்டிக் கொள்ள, உடல் பிளந்து சிக்கடாக்கள் வெளி வருகின்றன. சிக்கடாக்கள் மரச்சாற்றை உறிஞ்சி வாழும். வளர்ந்து விட்ட  ஆண் சிக்கடா பெண் சிக்கடாவுடன் இணைய இப்படி ஒலி எழுப்புகிறதாம். வனத்துக்குள் செல்லும் போது இப்பூச்சிகளிடமிருந்து தொடர்ந்து ரீங்காரம் கேட்கும்.ஒலி இறக்கைகளை அசைப்பதால் வருகிறது என நண்கர்கள் சொல்லுவார்கள். மழைக்காக ரீங்காரம் இடுகிறது என ரீல் விடுவார்கள். ஆனால் அப்படியில்லை. வயிற்றிலிருக்கும் சவ்வுபடலத்தை அதிரவைத்து இப்படி வாய் ஓயாமல்(தப்பு....தப்பு)  வயிறு ஓயாமல் ரீங்காரமிடுகிறது. எதற்கும் சிக்கடா என அடித்து வலைதளத்துக்குள்  ஒரு நடை போய் டேவிட் அட்டன்பரோ You tube-ல் என்ன சொல்கிறார் என அதிசயப்படுங்களேன். பூச்சிகள் உலகம் தனி!

No comments:

Post a Comment