Saturday, December 20, 2014

யமுனை நதிக்கரைப் பறவைகள்

Ruddy Shelduck

Spurwinged Lapwing

            காதல் சின்னமான தாஜ்மஹாலுக்குப்பின் புறம் யமுனை நதி செல்கிறது. நதியில் வெள்ளம் அதிகம் இல்லை. நான் நவம்பர் ’2014 –ல் சென்ற போது சில பறவைகள் நதிக்கரையில் கண்டேன். அவை கரண்டி வாயன்(Spoon Bill), நீர் காகம்(Cormorant), மஞ்சள் மூக்கு நாரை(Painted Stork), நெடுங்கால் உள்ளான்(Black winged Stilt), பட்டைத்தலை வாத்து( Bar headed goose), கருட தாரா(Ruddy Shelduck), ஸ்பர் விங்குடு புலோவர்(Spurwinged Plover) என்ற பறவைகள் என்னை மகிழ்ச்சியில் ஆழ்த்தின.
கடைசி இரு பறவைகளும் எனக்கு புது அறிமுகம். கடைசிப் பறவைக்கு தமிழிலில் பெயர் இன்னும் வைக்கவில்லை போலும். எனது பறவை குருநாதர் க. ரத்னம் நூலான தமிழில் பறவைப் பெயர்கள் நூலில் இல்லை. இது தமிழ் நாட்டுக்கு வருகை புரிவதில்லை. இறுதிப்பறவையை நான் ஆக்ரா யமுனை நதிக்கரையில் பார்த்த போது செங்கண்ணி(Redwattled Lapwing) எனத் தவறாகப்புரிந்து கொண்டேன். கணனியில் உருப்பெருக்கிய போது அதனை இனம் காண முடிந்தது. இதற்கு உதவியது சலிம் அலியின் The Book of Indian Birds. கடைசி இரண்டு பறவையும் தமிழ் நாட்டுக்கு வருகை புரிவதில்லை. கருட தாரா வாத்து. இது லடாக், நேப்பாள், திபெத்தில் இனப்பெருக்கம் செய்வது. இது ஒரு குளிர் கால வருகையாளர். ஆற்றில் நீந்திக்கொண்டும், தோளில் முகம் புதைத்து உறங்கியும், பறந்து கொண்டும் குழுவாக இருந்தது. இவை மிக அழகான வண்ணத்தில் கண்ணுக்கு சுவை கூட்டுகின்றன. ஆறு, குளங்களில் இவற்றைப்பார்க்கலாம்.
ஸ்பர் விங்குடு புலோவர் இரண்டு யமுனை ஆற்றின் மணற்கரையில் நின்றிருந்தன. இவை வாழிடம் இங்கு தான். இதனை நான் அடையாளம் கண்டு கொண்டது ஸ்வராஸ்யமான விஷயம். அவைகளாவன;-
1.    வட இந்தியாவில் பார்த்தது.
2.    ஜோடி
3.    ஆற்றங்கரை மணற்வெளி
4.    கூனிக்குனிந்திருக்கும் கருப்புத்தலை
5.    நம்பார்வைக்கு தவிற்கும் பாவனை
6.    இதன் வடிவம், நிறம்

இவ்வாறாக ஒரு பறவை செங்கண்ணி என நினைக்க வைத்து தடுமாற வைக்கும் போது நாம் இப்படித்தான் இனம் காண வேண்டும். இதற்கு திறமையான நுண்ணறிவு தேவை. இந்த பறவை டையாளம் காணல் வெற்றிகரமாக அமைந்து விட்டால்,  நமக்கு அன்றைக்கெல்லாம் பெரும் மகிழ்ச்சியைத்தரும்.

2 comments:

  1. அன்பு தமிழ் உறவே!
    வணக்கம்!

    இன்றைய வலைச் சரத்தின்,
    திருமதி R.உமையாள் காயத்ரி அவர்களின்
    "மழை" யில்

    சிறப்புமிகு பதிவாளராக தாங்கள் தேர்வாகி,
    வலம் வந்தது கண்டு மிக்க மகிழ்ச்சி!
    வாழ்த்துகள்!

    வலைச் சரம் வானத்தில் வானவில்லாய்
    உமது பதிவின் எழில் முகம் கண்டேன். களிப்புறேன்.
    உவகை தரும் உமது பதிவுகள் உயிரோவியமாய் திகழட்டும்!
    தேன் தமிழாய் சுவைக்கட்டும்! திகட்டாமல் திக்கெட்டும்.

    நட்புடன்,
    புதுவை வேலு
    www.kuzhalinnisai.blogspot.com

    (குழலின்னிசையின் உறுப்பினராகி உவகை தர வேண்டுகிறேன் நன்றி)

    ReplyDelete
  2. நன்றி புதுவை வேலு.

    ReplyDelete