Friday, October 17, 2014

பெருமாள் மலை வனவலம்- Trekking ( 4.10.2014-சனிக்கிழமை)


Rough sketch map prepared by Guna

vellaipparai-  standing middle Dr.Gunasekaran,& Mohan prasadh: (sitting) Dinesh

            பெருமாள் மலை படு உயராமனதும், வெள்ளியங்கிரி மலையைப் போலவே பராக்கிரமம் வாய்ந்தது. இதன் ரகஷ்யங்கள் தெரியாமல் ஏறப்போக படு சிரமத்துக்கு ஆளானோம். இந்த கரடு முரடான மலை மீது ஏற புரட்டாசி சனிக்கிழமைகளில் காட்டு இலாக்கா அனுமதி வேண்டியதில்லை. நாங்கள் மூன்றாவது சனிக்கிழமை சென்றோம். ஏழு பேர் சென்றதில் ஒரே ஒரு நண்பர் வீரர் குணசேகரன் மட்டுமே மலை முகட்டை தொட முடிந்தது. இந்த பராக்கிமமலையை தெற்கிலிருந்து தேவராயபுரம் வழியாக நாங்கள் அணுகினோம். விராலியூர்காரர்கள் தென்மேற்கு திசையிலிருந்து வருவார்கள். கேரளத்திலிருந்து, வெள்ளக்குளம் கிராமத்தினர் மேற்கிலிருந்து வருவார்கள். வடக்குப்புறமாக அணுகக்கூடியவர்கள் தூமனூர் காரர்கள். (Please refer attached sketch map given by Dr. Gunasekaran- not for scale) வடக்கில் செம்பக்கரை வழி வந்தால் யானை துரத்தும். ஆயுள் கெட்டியாகஇருந்தால் தப்பிக்கலாம்.
            வடக்கில் Slim Ali Centre for ornithology and natural science (SACON) உள்ளது. நான் இங்கிருந்து இரண்டொரு முறை பறவை நோக்கலில் தூமனூர் சென்றிருக்கிறேன். அடிவாரப்பெருமாள் கோயிலில் இருந்து தீபம் காட்டினால் முகடுப்பெருமாள் கோயிலுக்குத்தெரியும். முன்னோர் திறமையைப்பார்த்துமெய்சிலிர்க்கிறேன். இச்சிக்குழி என்ற காட்டு ஓடை வழியாக அடிவாரப் பெருமாளை தரிசித்து விட்டு மலையெறலாம் வாருங்கள். முதலில் எங்களை தடுமாற வைத்தது அப்போது தான் அங்கிருந்து சென்ற ஒரு ஜோடி யானையும் அதன் குட்டியும்; குட்டியோடு இருப்பின் தாய் யானையும், தகப்பன் யானையும் கோபம் கொள்ளும். வழி மாற்றி நடந்தோம். காட்டுப்பன்றிகள் கிழங்கு சாப்பிட நிறைய இடங்களில் மண்ணைப்பறித்திருந்தன.

            விலாவாரியாக இப்போது எழுத மாட்டேன். அதை எனது எட்டாவது நூலாக,சந்தியாப்பதிப்பகத்தின் மூலம் வெளியிடயிருக்கும் மலைமுகடு (Trekking) எனும் நூலில் படித்து வியப்படையுங்கள்.  முதலில் எங்களை சிராய்த்தது முட்காடு(scrub jungle). நடந்தோம். மலைமேல் நீர் ஓடை ஒன்றுமே இல்லாதது வியப்புத்தான். அதனால் நா வரட்சி. பிறகு சைக்கஸ் (Cycus)நிறைய காணமுடிந்தது. இவை அறுகி வரும் தாவரம். வெளியில் இனப்பெருக்கம் நிகழ்த்தும் தாவரம். வெள்ளைப்பாறை வந்ததும் தண்டபாணி திரும்பினார். அதற்கு முன்னமே பிரகாஷ், சந்தோஷ் கழன்று கொண்டனர். வெள்ளைப்பாறைக்கு இடது பக்கம் சோத்தாபாளையம் வெகுசிறு கோயில். பிறகு வரண்ட இலையுதிர் காடு (Dry deciduous forest)தென்படுகிறது. வழி,மழை பெய்தால் இறங்கிவரும் சிற்றோடைகள் தாம். வழியெங்கிலும் யானைச்சாணம். நிறைய வண்ணத்துப்பூச்சிகள் சிறகடித்தன. ஈரமான இலையுதில் காடு(Moist deciduous forest) ஆரம்பத்திலேயே இடி மின்னலுடன் மழை வெழுத்துக்கட்ட, எண்பது விழுக்காடு நடந்த நானும் மோகனும் திரும்பினோம். பிறகு தினேஷ் அரைமணிக்குப்பின்பு திரும்பினார். நான் நடந்த நேரம் ஆறரை மணிப்பொழுது.இலையுதிர் காட்டில் நான்கடிக்குப்புல்வெளி பரந்து கிடக்கிறது. குணா நடந்த நேரம் பதினோரு மணிப்பொழுது. கடைசி மலை படு பிரயத்னப்பட்டு ஏறிய நண்பர் குணா, மனைவி தொடுத்த துளசி மாலையை உச்சிப்பெருமாளுக்கு சாத்தி, வழிபட்டார் எங்களுக்காகவும், அவர் குடும்பத்துக்காகவும்……….

No comments:

Post a Comment