Tuesday, September 24, 2013



BIRD RESCUE





       அதிகாலைப் பொழுது ஆகாயத்தில் நீர்காகங்கள் பறந்தவாறு அணிவகுக்கும் அழகை ரசித்திருக்கிறீர்களா? ‘V’ வடிவம், அலை வடிவம், என அணிவகுத்துப்போகும் அழகை விவரிக்க எந்த மொழியிலும் உங்களுக்கு நான் சொல்லமுடியாது. சில சமயம் பல கருப்பு சேலைகள் காற்றில் பறந்து போவது போல போகும் அழகை என்னென்று விவரிப்பேன்.
            இவை பள்ளிச்சிறார் போல பலர் நீரில் ஒருத்தரை முந்தி ஒருத்தர் போவது போல நீரில் மீன் தேடி, மூழ்கிப்போவது, ஓ! அந்த பரவசத்தை எப்படி எழுத்தில் வடிப்பேன்? மூன்று நீர்காகம் வகையில் சின்ன நீர்காகம்(Little Cormorant) பற்றிதான் சொல்கிறேன்.
திடீரென்று நான் பார்த்து ரசிக்கும் போதே நீரில் ‘பொசுக்’கென மூழ்கி கண்ணாம்பூச்சி விளையாடும் சில்மிஷத்தையும், மூழ்கிய இடத்தில் நீர்வட்டம் தோன்றி சற்றே பெரிய பெரிய வட்டமாகி மறைந்து போகும் ஏகாந்த வனப்பை அனுபவித்தால் தான் தெரியும்.
ஒரு நாளைக்கு 2-3 கிலோ மீன் சாப்பிடும் என் ப்ரியமான நீர்காகம். அதை மீனவன் விரும்புவதில்லை. ஏனெனில் இவை மீனவனுக்கு மீனைக்குறைக்கிறதாம். பல வருஷங்களுக்கு முன்பு கேரளத்தின் மீனவர், நீர்காகத்தின் எண்ணிக்கை பெருகிவிட்டது, அதனால் கழுத்தைத்திருகி கொன்று, எண்ணிக்கையைக்குறைக்கவேண்டும் என்ற செய்தி படித்தேன்.
இது இப்படி இருக்க, வடஇந்தியாவில் இந்த நீர்காகத்தின் கழுத்தில் வளையமிட்டு படகிலிருந்து மீனவர் நீரில் விசிறி,, அது மீனைப்பிடித்ததும் ‘தர,தர’வென இழுத்து பிடித்த மீனை அபகரித்து, மீண்டும் நீரில் எறிவர்.
மீனவர், நாள்முழுக்க குளத்து நீருக்குள் மதில் மாதிரி தொங்கவிடும் வலையில் மாட்டி இறக்கும் பரிதாபம் மிகையான வருத்தமளிக்கிறது. மேலும்  பொறுப்பற்ற மனிதன் போடும் பிளாஸ்டிக் பொருட்கள் நீர்காகம் மற்றும் நீர்பறவைகளால் உட்கொள்ளப்பட்டு, இறப்பது விசனமளிக்கிறது.

இதற்கெல்லாம் தீர்வு,  குளத்தை பராமரிக்கும் PWD, சுற்றுசூழலுக்காகவே இருக்கும் Environment Dept, மின்பிடிக்க உபகரணம், மற்றும் நீருக்குள் மதில் கட்டும் வலைவிரிப்பைக்கற்றுக்கொடுத்த Fisheries Dept. கழுத்தில் வளையமிட்டு மீன் அபகரிக்கும் நரிபுத்தியை SPCA, Blue Cross, Forest Dept என அவரவரின் பொறுப்பு,கடமையை(Duty)செய்தால் பறவைகள் பிழைக்கும்.

            

No comments:

Post a Comment