Thursday, September 19, 2013

BIRD RESCUE                                      
உலகம் முழுதும் வருஷத்துக்கு  4 லட்சம் கடல் பறவைகள் இறக்கின்றன
மனிதனின்ஆபத்தான மீன் வலை மற்றும்
பிளாஸ்டிக்கழிவுகளே காரணம்- புள்ளியலில் ஆறு, குளம் இல்லை













             உயிரினம்வாழத்தகுதியற்ற 

உலகம் ஆக்கிவிடுவான்!


குளத்துநீருக்குள் மதில் சுவர் போல மீன்வலையை 48 மணிநேரம் தொங்க விடுவதால் அதில் சிக்குண்டு இறக்கும் பறவைகள் மற்றும் பிளாஸ்டிக் கழிவுகளை உண்டு மாய்ந்து போகும் பறவைகள் உலகம் முழுவதும் 4 லட்சம் என புள்ளியல் சொல்கிறது. மனிதனின் சொகுசு வாழ்க்கையால் எத்தனை உயிர் பலி! எத்தனை சுற்று சூழல் மாசு! 2000 மைல் நதியில் பிரயாணித்துக்கடலில் கலந்த பிளாஸ்டிக்கழிவுகளை அல்பாட்ரஸ் எனும் கடல் பறவைகளால் உணவு என உண்ண, உயிர் போன பறவைகள் ஏராளம். இதில் மற்ற பறவைகளும் சேர்த்துத்தான். மனித நாகரிக நகரம் 2000 மைலுக்கு அப்பால் இருந்தும் எவ்வளவு தூரம் பிளாஸ்டிக் மாசு பரவுகிறது, பாருங்கள!
பறவைகள் மட்டுமள்ள விலங்குகளும் இதில் அடக்கம். மனிதர்கள் நாகரிகம் அடைந்தவர் எனச்சொல்ல முடியுமா? அவன் முன்னோர் (மீனவர்) மாதிரி தோளைச்சுழற்றி மீன்வலைவீசினால், பறவைகள் வலையில் மாட்டாது. தேவையற்ற வலைத் துண்டுகளை குளக்கரையில் வீசிவிடுவதும், மற்றும் நீருக்குள் அமிழ்த்தும் மீன் வலையும், பெரிதும் ஊறுவிழைவிக்கின்றன. பறவைகள் வலையில் சிக்கி வேதனையுடன் மாய்ந்து போகின்றள. பறவைக்குஞ்சுகளுக்கு இரை எது? பிளாஸ்டிக் கழிவு எது? என எப்படி பாகுபடுத்தும்? அப்படியே விழுங்க வலியில் துடிதுடிக்க மடிகின்றன. மனிதன் சம்பாதணையுடன் சொகுசாக இருந்தால் போதும் என நினைக்கிறான்! மற்ற உயிரினங்களைப்பலி கொண்டு எப்பேர்பட்ட பெருவாழ்வு வாழ்கிறான் பாருங்கள்! இந்த அவலம் மேற்கொண்டு நடக்காமல் இருக்க அரசும், அரசு சாரா அமைப்புகளும்(NGO), நாமும் என்ன செய்யப்போகிறோம்?

இது என் அனுபவம். கேளுங்கள்! அமராவதி அணைப்பகுதியில் நான் தூவானம் வனவலம்(Trekking) போய் திரும்பும் போது ஒரு கொண்டைக்குருவி மீனவர் விசிறி விட்ட துண்டு வலையில் மாட்டித்தவித்ததை பார்த்து விடுவித்திருக்கிறேன். சூலூரில் குள நடுவே இருந்த சிறு தீவில் காலில் மாட்டி தவித்த மாட்டுக்கொக்கினை வாடகைக்கு படகு எடுத்துப்போய் விடுவித்திருக்கிறேன். பள்ளபாளையம் குளத்தில் முக்குளிப்பான் வலையில் மாட்டி தவித்ததை பரிசலில் சென்று விடுவித்தேன். (இந்த விபரம் மழை குருவி வலைப்பூவில் ஏற்கனவே எழுதியுள்ளேன். பறவை பாதுகாப்பு தொகுப்பில் படிக்கவும்)நீங்கள் பார்க்கும் இரண்டு இறந்த சின்ன நீர்காகங்கள் வலையில் சிக்கி, சூலூர் குளக்கரையில் இறந்து கிடந்தவை. இது குறித்து மீன்வளத்துறைக்கு நான் எழுதி எந்த விளைவுமில்லை. நீங்கள் ஒவ்வொருவரும் Fisheries dept- க்கு மீன் பிடிக்கும் முறையை மாற்ற வேண்டும் என வற்புறுத்தி உடனே எழுதவேண்டும். 

No comments:

Post a Comment