Friday, June 14, 2013


ரிஷி கொன்டா கடற்கரை,விசாகப்பட்டிணம்
Travel

யாத்திரை  







ரிஷி கொன்டா கடற்கரை,விசாகப்பட்டிணம்
ராஜாராணி கோவில், புவனேஷ்வர்


            சென்ற நாட்களில் மூவாயிரம் மைல்கள் கிழக்குக்கடற்கரை ஓரமாக யாத்திரை போனேன்விசாகப்பட்டிணம் மிகத்துரித ரயில்கோனார்க் விரைவு ரயில்மற்றும் கோரமண்டல் விரைவு ரயில் யாத்திரைக்கு உதவினநடந்துசைக்கிள் ரிக்ஷா, ஆட்டோ ரிக்ஷாகார்,பேருந்துசிற்றுந்துபடகுஎன நானும் நண்பரும் நகர்ந்து கொண்டே இருந்தோம்அந்தக்கால முனிவர்களும்சித்தர்களும்புத்தபிக்குகளும்ஜைனத்துறவிளும்சாதுக்களும் இப்படித்தான் காடு,மலை, கடற்கரைகிராமம்நகரம்என நகர்ந்து கிடைப்பதை உண்டு, போய்க்கொண்டே இருப்பார்கள்அவர்களுக்கென்ற நிரந்திர இருப்பிடம் இல்லைநானும் நண்பர் வஜ்ரவேலுவும் இருவேளை மட்டும் உண்டுசில வேளை ரொட்டித்துண்டுகள்கனிகளோடு பசியாற்றிநிறைய நடந்தோம்சில வேளைகளில் ஐந்து மைல் கூட நடப்போம்இயற்கையோடு கலந்திருந்தோம்கடற்கரைகளில் மணல்உப்புகாற்றுநீலவானம்ஓம் என்று ஒலித்து வந்த அலைகளுடன் பிரபஞ்சத்தின் பிரமாண்டத்தை வியந்திருந்தோம்.வங்காள விரிகுடா சமுத்திரத்தின் Classic beach, சில்க்கா ஏரி, Golden beach,புரி, Rishikonda beach, RK beach, விசாகப்பட்டிணம்,   என சுற்றித்திரிந்தோம்.


விசாகப்பட்டிணத்தில் ஒரு நாள்கோனார்க்கில் ஒரு நாள்புரியில் இரு நாள்ரயிலில் இரு நாள் என ஆன்மா பயணத்திலேயே இருந்ததுஅருகில் சொந்தம்நண்பர் குழாம்இல்லைமுற்றிலும் தெரியாத பாஷைமுகங்கள்பிரதேசம்சீதோஷ்ணம்உணவு என இருந்தாலும் யாதும் ஊரே யாவரும் கேளிர் என மனதை சமனப்படுத்திசில உடல் உபாதைகள்நித்திரை அசொளகரியங்கள் பொறுத்து யாத்திரை மேற்கொள்வது ஆன்மாவை பதப்படுத்தும்வீட்டைப்போல் வசதிகள் எதிர் பார்ப்பதும்அது இல்லாது போகும் போது கவலைஎரிச்சல்கோபம்சந்தோஷமின்மை வரக்கூடாதுஎந்த அசொளகரியங்களிலும் குதாகலமாக இருக்கப்பழகுதல் ஆன்மாவுக்கும்மனதுக்கும் பயிற்சிஉடலை வருத்தி யாத்திரை செல்வது அந்தக்காலத்தில் நிகழ்த்தப்பட்டதுபசியை எப்போதும் உணர்ந்திர்ந்தனர்உணவு கிடைக்கும் போது உண்டனர்பசியறியாத யோகிக்கு யோகம் கைகூடாது.


 ஆதி சங்கரா இந்த மாதிரி ஊர்திவசதிவாய்ப்புகள் இல்லாத போது நான்கு முறை காலடிகேரளாவிலிருந்து இமயம் நடந்தே சென்றிருக்கிறார் என்றால் அவரது மன வலிமை எண்ணிப்பார்க்க வேண்டும்அப்போது காடுகளும்விலங்குகளும்விஷஜந்துக்களும்புயல்மழைபாலமில்லா ஆறுகள்கரடு முரடான பாதைகள்உயர்ந்த மலைகள்குளிர் என எப்படி வாட்டி எடுத்திருக்கும்அப்பர்இமயமலை சென்ற போது கால்களும்கைகளும் கிழிந்து இரத்தம் சொட்டினஅவர்களை விட நாம் இப்போது வாழும் வாழ்க்கை சொகுசு மயமானதுஇருந்தும் நாம் சலிப்புஎரிச்சல்மனவருத்தம் கொள்கிறோம்ஏன்இப்போதிருப்பது போல அப்போது வசதிவாய்ப்புகள் இல்லைஇருந்தும் நாம் நம் முன்னோரை விட சந்தோஷத்தில் இல்லைஏன்எதையோ எதிர் பார்த்துக்காத்திருக்கிறோம்திருப்தியற்ற மனநிலையில் உள்ளோம்.ஏன்எவனொருவன் மனதளவில் திருப்தியோடு இயற்கைக்கு நன்றி பகர்ந்து கிடைப்பதை உண்டுபிறரோடு பகிர்ந்து வாழ்கிறானோ அவனே செல்வந்தன்.






 ராஜாராணி கோவில் நடனமாதர்
          




           

3 comments:

  1. Replies
    1. Dear all,

      I will post more information about sculptures. keep on visit-Chinna Sathan

      Delete
  2. It is really very interesting; till this moment I did not feel that this will evoke so much interest. Had I known this would evoke this much interest, we could have done the trip in a better or more constructive way. Any way let us make it better next time. ..vajravelu

    ReplyDelete