Monday, October 8, 2012

பறவை அறிமுகம்


அன்றில் பறவை
Black Ibis (Pseudibis papillosa)

தண்மதிக் கண்ணியி னானைத் தையல்நல் லாளோடும் பாடி
உண்மெலி சிந்தைய னாகி உணரா வுருகா வருவேன்
அண்ண லமர்ந்துறை கின்ற ஐயா றடைகின்ற போது
வண்ணப் பகன்றி* லொ டாடி வைகி வருவன கண்டேன்
     கண்டே னவர்திருப் பாதங் கண்டறி யாதன கண்டேன்.
                                   திருவாரூர் பதிகம்அப்பர் தேவாரம். 4-ம் திருமுறை
                                                  
பகன்றி எனில் அன்றில் Black Ibis (Pseudibis papillosa) பறவை. 5-ம் நூற்றாண்டிலேயே அப்பர் தொலை நோக்கி இல்லாமல் பல பறவைகளை தேவாரத்தில் பதிவு செய்துள்ளார். இப்பறவைகள் ஆணும் பெண்ணுமாக புன்செய் நிலங்களில் இரை தேடும்.  மாலை நேரங்களில் நீர் அருந்த நீர் நிலை நாடிச்செல்லும். உயர்ந்த பனை,தென்னை மரங்களில் தங்கும். இணையில் ஒன்று மரித்தால் மற்றது உயிர் வாழாது. அதனால் இலக்கியவாதிகளுக்கு இதன் மேல் காதல்.  உயர்ந்த மரத்தில் பெரிய மேடை  போல குச்சிகளை வைத்து கூடு கட்டும். வரண்ட புல்வெளி, தரிசு நிலங்களில் இரை கிடைக்கும் வரை அங்கேயே இருக்கும். நான் இப்பறவைகளை கூந்தகுளத்தில்  பார்த்து  ரசித்துள்ளேன்.

No comments:

Post a Comment