Thursday, October 11, 2012

பிற உயிரினம்


பழம் திண்ணி வொளவால்
(Flying Fox)


 வொளவால், பறவை இனம் என்று நினைப்பவர் உண்டு. இது பாலூட்டி இனம். இவைகளை கோவை சிதம்பரம் பூங்காவில் பார்க்கலாம். பல வருடங்களுக்கு முன்பு, அலுவலகம் விட்டு மாலைநேரமானால் பூங்காவுக்கு சென்று விடுவேன்.வொளவால்களின் சேட்டைகளைப்பார்த்துக்கொண்டேயிருப்பேன். வேறு கவனம் எங்கும் சிதறாது. இதற்கு பதஞ்சலி அட்டாங்க யோகாவில் தாரணா என்று பெயர். இவை பகல் பொழுது முழுதும் பெரிய உயர்ந்த மரங்களில் தலைகீழாகத்தொங்கிக்கொண்டு தூங்கும். மாலை மயங்கியதும் இவை மேற்கு, தெற்கு திசைகளில் பறந்து செல்லும். திகில் சினிமாவில் பாழடைந்த கோட்டை, இரவும் பகலும் சந்திக்கும் வேளையில் வொளவால்கள் பறந்து போவது போல போகும். செவ்வானம் கருத்துக்கொண்டு வர,வர வொளவால்கள் உயர சற்று சாய்ந்த கோணத்தில் பக்கவாட்டில் பறந்து போவது பார்க்க எனக்கு ரம்மியமாகத்தெரியும்.இவை பழங்கள் மட்டுமே உண்ணும். மேற்கு தொடர்ச்சி மலை அடிவாரங்களில் பழமரங்கள் இருப்பதால் அதை நோக்கிப்போகின்றன. இது பெரியது. முகம் நரி போல இருப்பதால் இதற்கு  Flying Fox  எனப்பெயர். வருஷத்தில் ஒரு குட்டி ஈன்று மரத்தில் தலை கீழாகத்தொங்கியவாறு பாலூட்டும். இவை அல்ட்ராசானிக் ஒலியைப்பயன்படுத்தாது. பகலிலும் இரவிலும் பார்வை தெரியும். நீர் நிலைகளில் நீர் குடிக்கும். இதன் வாழிடச்சூழலை சீரழிக்கும் விததில் வயதான பெரிய மரங்களை வெட்டுவது, இவைகளை அடித்து திண்ணுவது போன்ற செயல்களை மனிதன் நிறுத்திக்கொள்ளவேண்டும். நிழற்படம்; நண்பர் சிவப்பிரஷாத்.

No comments:

Post a Comment