Saturday, October 6, 2012

பறவை அறிமுகம்


                                                       female
top
male


குயில்-கோகிலம்
Koel (Eudynamys scolopacea)
குயில் கூவல் இனிமையாக இருக்கும். உங்கள் வீட்டைச்சுற்றி மரங்களிருந்தால்,அதிகாலையில் இந்த தேன் பாடல் உங்களை எழுப்பி விடும். பல கவிஞர்கள் குயில் போல அவள் பாடினாள் என கவிதை எழுதுவார்கள். ஆனால் ஆண் குயிலுக்கு மட்டுமே இனிமை குரல் இறைவன் அமைத்துள்ளார். பெண் குயிலுக்கு இனிமை சாரீரம் இல்லை. குயில் மறைந்து வாழ்வதால் நிறையப்பேர் அதைப் பார்த்துக்கூட இருக்க மாட்டார்கள். இதோ! புகைப்படத்தில் ஆண்-பெண் பறவைகள். இப்பறவைகள் வெளியில் தலை காட்டினால் காகம் துரத்தித்துரத்தி அடிக்கும். காரணமிருக்கு!  குயில் கூடு கட்டாது, தன் முட்டைகளை காகம் கூட்டில், காகம் இல்லாத போது வைத்து விடும். காகம் மற்றும் குயிலின் முட்டை ஒரே மாதிரி வெளிர் நீலநிறம். குயில் ஒன்றிரண்டு காகத்தின் முட்டைகளைக்கூடக்கூட்டிலிருந்து தள்ளி விட்டு விடும். காகம் குள்ளநரித்தனதானது, ஆனால் குயிலிடம் ஏமாற்றப்படுவது இயற்கையின் நியதி. அப்பாவி காகம் குயில் முட்டையை அடைகாத்து பொரித்து, ஆளாக்கும். நிறம், குரல் காட்டிக்கொடுக்க இளைய குயிலை காகம் விரட்டி விடும். காகத்துக்கு குயிலிடம் ஏமாறுவதும், அதை ஜன்ம விரோதியாகத்துரத்துவதும் வாடிக்கை. குயில் யாவர் வாயிலும் சொல்லப்படுவது, ஆனால் அதைப்பற்றித்தெரிந்து கொள்ள யார் நினைக்கிறார்கள்? இதற்கு கோகிலம் என்ற அழகான பெயரும் உண்டு. குயிலைப்பற்றி பாடாத பக்தி-சங்க இலக்கியங்கள் இல்லை. பாடாத கவிஞனில்லை. என் இல்லத்தோட்டத்து ப்ப்பாளி, மா, கருவேப்பிலைப் பழங்கள் சாப்பிடவரும். பூச்சிகளும் உண்ணும். காகம் குயிலைத்துரத்துவதை எனது வளர்ப்பு மரங்களிடையே தினசரி பார்க்கலாம்.

இதோ! தேவாரத்திலிருந்து இரண்டு வரிகளைச்சுவையுங்கள்.

குன்றெலாம் குயில் கூவக் கொழும்பிரச மலர்
                பாய்ந்து வாசமல்கு
தென்றலார் அடிவருடச் செழுங்கரும்பு கண்வளரும்
                திருவையாறே.                                                     திருஞானசம்பந்தர்



No comments:

Post a Comment