Saturday, September 15, 2012

கோவை வெய்யில்


கோவை வெய்யில்


                                  
                          செண்பகத்துக்கு தாகம்


   

   சாலைப்போக்குவரத்து அபிவிருத்தி என்று சாலையோர மரங்களையெல்லாம் வெட்டிச்சாய்க்க ஒரு சில மாதங்களிலேயே கோவையில் வெப்பம் ஏறி தென்மேற்கு பருவ மழை சுத்தமாக இல்லை. பனிரெண்டு மாதமும் வெய்யில் காலமாகப்போயிற்று. மழையைப்பார்க்க துபாய்க்காரர் மும்பாய் ஓட்டலில் தங்குவது போல நாமும் போக வேண்டியது தான். என்ன சட்டம் வந்தாலும், மரம், மரம் எனக்கரடியாகக் கத்தினாலும் யாரும் சட்டை செய்வதில்லை. சகபயணிகளே! மரங்களை சகட்டுமேனிக்கு வெட்டினீர்களானால் ,பன்னாட்டு நிறுவனங்கள் ஆக்சிஜன் பங்க்குகளை திறப்பது உறுதி. அதில் க்யூவில் நிற்கப்போகிறீர்கள். உலகம் வெப்பமயமாவது மண்டையில் உறைக்கவில்லையா? உலகம் குளிர நீங்கள் உடனே செயலாற்றுங்கள். உங்கள் உதாசீனத்தால் பறவைகளும் தாகத்தில் தவிக்கின்றன். இந்தப்படம் என் வீட்டு தோட்டத்தில் எடுத்தது. கோவை வெய்யிலில், பறவை செண்பகத்துக்கு தாகமோ தாகம். நீங்களும் நீர் பாத்திரம் வைத்து  பறவைகளின் தாகத்தைத்தணியுங்கள்

No comments:

Post a Comment