Saturday, September 6, 2014

பீரடிக்கும் இளைஞர்கள்
சமுதாயச்சீரழவு
            குடிமக்கள் என்றால் தங்களுடைய சமுதாயக்கடமைகளைச்செய்து, தானும் தன் குடும்பமும் வாழ்ந்து, பிறரையும் வாழ்வில் நல் வழிப்படுத்துவது தான் நல்ல குடிமகனுக்கு அழகு. மேலும் பிறருக்கு சேவை செய்வதில் தனது தெய்விக உள்ளத்தைப்பார்க்க வேண்டும். ஆனால் இப்போது அரசு வருமானத்துக்காக, சாராயம் விற்று சாதாரண மக்களை குடிகாரமகனாக உருவாக்குவது நியாயமற்ற செயல். இதற்குரிய தண்டனை இறைவன் நீதி மன்றத்து முன்பு மிகப் பெரிய தண்டனையாகக் கிடைக்கும். கள் குடிக்கக் கூடாது, அரசு மட்டுமே சாராயம் விற்று பணம் செய்யும் என்று ஏழை மக்களிடமிருந்து பணத்தை உருவி அவனுக்கு இலவசங்களைக்கொடுத்து கெடுப்பது அருவருப்பாக உள்ளது. உழைக்கும் வர்க்கம் இப்போது குறைவு பட்டதற்குக் காரணம் இலவசங்கள் அரசு கொடுப்பதால் தான். இது நிதர்ஷனமான உண்மை.
            எங்கள் வீட்டில் சிறு தோட்டம், மற்றும் பொது இடப் பராமரிப்புக்கு வேலையாள் கிடைப்பதில்லை. நான் அரசுக்கு சொந்தமான ஒரு ஏக்கர் ரிசர்வ் சைட்டை பராமரிப்பதால் எனக்கு வேலையாள் கிடைப்பதில்லை. நானே பாத்திகட்டுவது, களையெடுப்பது, நீர் ஊற்றுவது, மரம் வைப்பது,பிளாஸ்டிக் கேரிபேக்குளைப்பொருக்குவது என இருக்கிறேன். '62 வயதில் இது எனக்குத்தேவையா?' என மனம் நொந்து போகிறேன்.
 வேலையாளோடு பேசினால், அவன் போடும் சட்டங்களாவன;-
அரை நாள் தான் வேலை செய்வேன். காலை வந்தவுடன் போண்டாவோடு தேநீர், திரும்பும் போது வடையோடு தேநீர், சம்பளம் 500. இதற்கு ஒத்துக்கொண்டு அட்வானஸ் 100 கொடுத்தால் நாளை முடிந்தால் வருவேன்.’ என்கிறான்.
அரசு கட்டிலேறிய சாதாரண திராவிடஅரசியல்வாதிகள், சமுதாயத்தை எப்படி சீரழித்து விட்டனர் பாருங்கள். இப்படி ஒரு வேலையாள் சொல்வது எதனால்? 20 கி. அரிசி, சர்க்கரை, வேட்டி, சேலை, தொலை காட்சிப்பெட்டி, மிக்ஸி,ஃபேன், கிரைண்டர், சைக்கிள், பொங்கல் பரிசுகள் எனக்கொடுத்தால் அவன் வேலைக்குப்போகமாட்டான். மேலும் அன்னதானங்கள் என்ற பெயரில் அரசு,கோயில்கள், அறக்கட்டளைகள், மடாலயங்கள் இடும் சோற்றுடன் இலவசத்திருமணம், இலவசத்தாலி, கல்யாணத்துக்கு பணம், என வரிப்ணத்தை வாரி வழங்கினால் அவன் உழைப்பானா? அரசா? அல்லது அன்னமடமா? குடிகாரன் குடிப்பதற்கு இயற்கைச்சூழலைத்தேடி அமர்ந்து, குடித்துவிட்டு, பாட்டிலை உடைக்கிறான். அரசே! எந்த மாதிரி குடிமகன்களை உருவாக்குகிறீர்கள்? உங்கள் பதவி ஆசைக்காக பலியாகும் நாடே! நீ வாழ்வது எப்போது?


No comments:

Post a Comment