Sunday, March 3, 2013



நிலா
 நிலாவே நிலவே நிலாவே                
இதுவரைஎத்தனை பேர் பாடினரோ
நிலாவே
யுகங்களாக எத்தனை பேர் மயங்கினரோ
நிலாவே
முற்றத்தில் தவழ்ந்தும் கடலில் மிதந்தும் நதியில் நெளிந்தும்
மயக்கியது போதும்
நிலாவே நிலவே நிலாவே
கானகம் பொழிந்த பால்நிலாவே
எத்தனை காதலுக்கு சாட்சியாயிருந்தாய்
நிலாவே
ஜன்னலோரம்முகம் காட்டும் நிலாவே
தேநீர் அருந்த வருவாயா
நிலாவே நிலவே நிலாவே
ஏரியில் முகம் பார்க்கும் வெண்ணிலாவே
தலையணை முகம் புதைக்க வருவாயா
நிலாவே நிலவே நிலாவே


No comments:

Post a Comment