Friday, July 8, 2016

சூலூர் வனம்

சூலூர் வனம்-செங்கத்தறைப்பாதை கிழக்கு மேற்காகச்செல்கிறது

சொட்டு நீர்


சூலூர் வனம் சூலூர் சின்னக்குளம் (அ) செங்குளத்தின் வடபுறச்சரிவில் வனம் உருவாக்க முயற்சி செய்துள்ளனர். பொக்லைன் உதவியில் புதர்களை சுத்தம் செய்து வேலியிட்டு பத்தடிக்கு ஒரு மரநாற்று ஏன நட்டுள்ளனர். குழிகள் பொக்லைன் உதவி கொண்டு எடுக்கப்பட்டுள்ளன. மர நாற்றுகள் குறுக்கு மற்றும் நெடுக்கு என எப்படிப்பார்த்தாலும் பத்தடி தாம். இருபது அடிக்கு ஒன்றாக வைத்திருக்கலாம்.முழுமரத்தைப்பார்ப்பதற்கு இந்த இடைவெளி அவசியமானது.ஆனால் ஆர்வக்கோளாறில் பத்தடிக்கு ஒரு மரம் வைத்தது நன்றாக இராது.
அருகில் சின்னக்குளம் எப்போதும் வற்றாதிருப்பதால் சொட்டு நீர்இழுக்கப்பட்டுள்ளது, பாராட்டக்கூடியது. ஆடு, மாடுகள் மேயாமல் இருக்க கல், கால் வேளி போடப்பட்டுள்ளது அருமை. மர நாற்றுகள் பல வகையும் நடப்பட்டுள்ளது. இந்த முயற்சியில் ஈடுபட்டுள்ள இளவல் நண்பர்கள்; பசுமை நிழல் விஜயகுமார், தர்மராஜ், சக்திவேல் ஆகியோரைப்பாராட்டுகிறேன். 3 ஏக்கரில் 1008 மர நாற்றுகள் வைத்துள்ளனர். இன்னும் 7 ஏக்கர் நடவு பாக்கியுள்ளது. இது ஒரு பிரம்மிக்கத்தக்க முயற்சி. குளத்தை ஒட்டி நடவு செய்யப்பட்டதால் மழைநீர் கிடைக்கும், மேலும் நிலத்தடி நீர் கிடைக்கும். மரங்கள் வளர்ந்து விட்டால் குளுமையும், பசுமையும், நிறைய பிராணவாயுவும் கிடைக்கும். அதை ஒட்டிய செங்கத்துறை தார் சாலையில் நடை போனால் ரம்மியமாயிருக்கும்.
என் பங்காக, 25 கி.மீ-க்கு அப்பால் உள்ள வனம் இந்தியா பவுண்டேசனிலிருந்து எடுத்து வந்திருந்த நான்கு மர நாற்றுகள்,(மகோகனி=2+தாந்திரி= 2) அவர்கள் சின்னக்குளத்தை ஒட்டிய நாற்றுப்பண்ணையில் சேர்ப்பித்து விட்டேன். சூலூர் வன செயல் வீரர்கள் மூவரையும் வனம் பவுண்டேசனுக்கு,(பல்லடம்) ஒரு செவ்வாயன்று வாராந்திர கூட்டத்தில் அறிமுகப்படுத்தி மேலும் 300 மர நாற்றுகள் வேண்டினேன். சூலூர் வனத்தினர் வேண்டுதல் பொருத்து பொக்லைன், நாற்றுகள் என வனம் இந்தியா பவுண்டேசன் வழங்கும் என நம்புகிறேன். இவர்கள் சூலூர் ரிசர்வ் சைட்டுகளில் குழந்தைகள் விளையாட்டு பொருட்கள் மேலும் மரம் நடுதலில் ஈடுபடுவதை மெச்சுகிறேன்.

Protect Our Environment Trust, Sulur. Kindly donate to conserve our Environment, contact……e-mail: sukubird@gmail.com

No comments:

Post a Comment