Friday, May 20, 2016


வீகன் ஆசிரமம் 
பிரம்ம பிரகாசம் தொடர்பு; 98423 77758


           நான் அடிக்கடி வீகன் ஆசிரமம் போய் விடுவேன். தேடல் இருந்தால் தான் எதுவுமே பெற முடியும். இந்த ஆசிரமம் பொள்ளாச்சியின் கோவைப் பாதையில் வடக்கி பாளையம் பிரிவில் இறங்கி, சிவாலிக் பள்ளிப்பாதையில் 1 கி.மீ போனால் ஆசிரமத்துக்குள் நுழையலாம். ஐந்தரை ஏக்கர் தென்னந்தோப்பு, சுற்றிலும் வேலியோரம் தேக்கு. மாமரம், பலா, சர்க்கரைப்பழ மரங்கள், காட்டுமல்லி என மனதிற்கு இனிமை தரும். நண்பர் பிரம்மப்பிரகாசம் அரிசி, நீர், தேங்காய் வைத்து, அணில், மரங்கொத்தி, சிலம்பன், காகம், வால்காக்கை எனக்கவருவார். பனங்காடைகள் சப்தமிட்டு மின் கம்பிகளில் அமர்ந்திருக்கும். 
                   தோப்புக்கு நடுவே கவ் பாய் ஸ்டைலில் மேலே ஏற்றிப்போடப்பட்ட வெட்டவெளி ஷவர் இரண்டு பொருத்தியிருக்கும் பாங்கு அருமை. அவைகளில் ஒன்று தபதப வென அருவி போல வீழும் குழாய், இரண்டாவது ஷவர். ஆனந்தமாகக்குளிக்கலாம். வெட்டவெளிக்குளியல். சுற்றிலும் தென்னந்தோப்பு. குளியலறைக்குளியலைவிட அனுபவித்து இயற்கையோடு இயற்கையாக மாறிப்போகலாம். பிறகு எதிரிலிருக்கும் காட்டு மல்லிகை, ராமபாணம் வெள்ளைப்பூக்களை ரசித்துகொண்டே உரையாடல் எனக்கும், பிரம்ம பிரகாசத்துக்கும் நடக்கும். மகாசைவத்தைப்பற்றி ஒரு நூல் எழுத ஆழமான கலந்துரையாடல்  நாள் முழுக்க நடக்கும். தொடக்கத்தில் நான் தேவாரம் இசையோடு பாடுவேன். ஆசிரமம் என்றால் நானும் என் நணபரும் மட்டும் தாம். நான்கு நாட்களுக்கு கூட தங்கிவிடுவேன். சில வேளைகளில் மேற்குப்புற நாடுகளில் வந்து தங்குவர். 
               அனைவரும் தாவர உண்ணிகளாக மாறினால் இந்த பிரபஞ்சம் சிபிட்சமாக இருக்கும் என்பது எல்லோரும் உள் வாங்க வேண்டும். திணிக்கும் கருத்தல்ல. உங்கள் வயிறு என்ன சுடுகாடா? உங்களையே அண்டியிருக்கும் பிராணிகளை கொன்று ஏன் உண்ணுகிறீர்கள்? உண்ண எவ்வளவோ இருக்கும் போது உயிர் வதை செய்வது ஞாயமா? உங்கள் இதயத்தைத்தொட்டு உணர்ந்து பாருங்கள். எங்கள் குடும்பம் NV குடும்பம் என்றால்,நீங்கள் ஏன் கண்மூடித்தனமாக உங்கள் குடும்பத்தை பின்பற்றுகிறீர்கள். 
             
Water canal adjacent to Vegan Ashram

Front view of Ashram. Any spiritual & vegans may contact Brahma Prakasam-cont:: 98423 77758
சரி! மாலையில், சைக்கிளில் கிராம எழிலைப்பார்ப்பதற்கு பெடலை மிதிப்பேன். காலை மாலை தோப்பின் அருகில் நெளியும் வாய்கால் தண்ணீரில் குளிக்க ஓடுவேன். மக்கள் அங்கேயும் என்னை தனிமையில் குளிக்க விடுவதில்லை. துவைக்கும் பெண்டிர். என்ன செய்ய? சைக்கிளை மிதித்து கிழக்கில் ஒரு கி.மீ போய் ஒரு ஆள் இறங்கும் படிக்கட்டில் இறங்கி, ஆளை இழுக்கும் விசையில் ஓடும் நீரில் ஜட்டியுடன் இறங்கி குப்புறப்படுத்துக்கொள்வேன். நீரில் மிதந்து கிடக்க, நீர் என்னை படு வேகமாக இழுக்கும். கைவிரல்கள் சிமெண்ட் தளம் பாவிய காரைப்பிளவைப்பிடித்துக்கொள்ளும். இல்லையேல் நான் புரட்டப்பட்டு, பல கிமீ போய் விடுவேன். நீர் உடம்பை மிருதுவாக்க, முழங்கையில் ஒரு முறை, பிறகு வலது கால் பெருவிரலில் சிராய்ப்புக் காயம் பட எரிந்தது. நீர் எனது அம்மை… நீரைச்சுத்தமாக வைத்திருப்பது நமது தலையாய நியதி.

No comments:

Post a Comment