Wednesday, January 27, 2016


எனது Trekking நூல் " மலை முகடு' வெளி வந்து விட்டது. நூல் பெற sandhyapathippagam@gmail.com தொடர்பு கொள்ளவும்.  



ஆலமரம் கார்த்திகையில் இலைகள் உதிர்க்காதே!
            
                       செலக்கரிசலிலிருந்து 86 வயது இளைஞர் பழனிக்கவுண்டர் தொலை பேசினார்.
“சந்தைப்பேட்டையில் நிற்கும் 25 வயசு ஆலமரம் சுத்தமா இல உதிர்த்துச்சு! நீங்க இதுக்கு என்ன பண்ணுவீங்களோ, தெரியாது. ஆலன எப்படியாவது பொழைக்க வைக்கணும்.”

ஸ்கூட்டரில் 10 மைல் தூரத்திலிருக்கும் செலக்கரிசல் கிராமத்துக்கு விரைந்தேன். இலைகளெல்லாம் உதிர்த்து பரிதாபமாக நின்றது. எத்தனை பேருக்கு நிழல் கொடுத்து நின்ற மரம். அதன் உடம்பில் சில ஆணிகள். மனிதன் விளம்பரத்துக்காக அடித்திருந்தான். ஏசுவிற்கு சிலுவையில் ஆணிகள் போல எனக்குத் தெரிந்தன.  விரல்கள் போன்ற சிமிறுகள் லகுவாக ஒடிந்தன. உள்ளே ஓட்டை, அதில் சிறு வெண்புழுக்கள். பழங்கள்கரிந்து போயிருந்தன. மாதிரிகளை எடுத்தேன். நோயாளியாய், எலும்புகூடாய் நின்ற 50 அடி உயர ஆலமரத்தை புகைப்படம் எடுத்தேன். மறுநாள் கோயம்புத்தூர் IFGTB சென்று விவசாய அதிகாரி ரோகிலா, Dr. மோகன்,(Pathology) மற்றும் Dr. Jacob (Entomology) ஆகியோரைக்கலந்து ஆலோசிக்க, பெரிய ஜிவனை பழைய மாதிரி உயிர்ப்பிக்க சில வழிவகைகள் கிடைக்கப்பெற்றேன். மீண்டும் செலக்கரிசல் சென்று, ஒரு கை வாகு கிளையை ஒடித்துப்பார்க்க அதில் வெண் பாலும்,வெட்டக்கடினமாயும் இருந்தது. சிகிச்சை அளிக்கலாமென முடிவு செய்து சூலூரில் டைக்களவஸ் 100 மிகி வாங்கிக்கொண்டு ஸ்கூட்டரில் பறந்தேன். பத்துக்குடம் நீர் (அங்கு கிடைப்பதற்கு அரியது!) சேகரித்து, மருந்தை அதில் கலக்கி, வேலுக்குட்டி ஊற்றினார். பழனிக்கவுண்டர் கடப்பாரையில் குத்திக்கொடுக்க, வேரைச்சுற்றிலும் ஊற்றினார். இந்த ஆலமரம் பிளைக்குமா ? வீழ்ந்து படுமா? சிவபெருமானே உணர்வார். மனித முயற்சி ஒரு அளவோடு மட்டுமே…….வேலுக்கவுண்டர், கூட இருந்தார் . சிவனை வேண்டிக்கொண்டோம். இரண்டு கவுண்டர்களும் செலக்கரிச்சலில் பசுமைப்புரட்சி செய்தவர்கள். அவர்களின் சேவை மகத்தானது. மருந்து கிளை முழுதும் பரவ 1000 லிட்டர் ரூ 200 என வண்டியில் நீர் வாங்கி, மடை கட்டி  ஊற்றினோம். இது மாதிரி வாரம் ஒரு முறை வண்டி நீர் ஊற்றி சிவபெருமானை வேண்டி பிரார்த்தித்தோம். பலன் கொடுப்பது அவர் அனுகிரகத்தில், என்ன நிகழும்?…………………

No comments:

Post a Comment