Monday, December 31, 2012


பறவை அறிமுகம்


Indian Great Horned Owl (Bubo bubo)
கொம்பன் ஆந்தை


            

           பார்த்தாலே பயம் கொள்ள வைக்கும் கொம்பன் ஆந்தையை முதன் முதலில் சென்னை நன்மங்கலம் ரிசர்வ் முட் காட்டில் சில வருஷங்களுக்கு முன்பு பார்த்தேன்.அதுவும் ஒற்றையாக ஒரு கல் குவாரியில் பார்த்தேன். தற்போது சூலூர் ஊர்வேலங்காடு கல் குவாரியில் இரட்டையாகப்பார்த்தேன். ஆண், பெண்ணுக்கு வித்தியாசம் தெரியாது. பூபோ என அலறல் குரல் எழுப்பியும், கண்கள் உருட்டியும் பார்த்து பயத்தை ஏற்படுத்தும். இது பகல் முழுக்க கல் குவாரியில் ஓய்வு கொண்டு, இரவில் எலி, முயல், பறவை, ஓணான் போன்றவற்றை வேட்டையாடும். முதலில் பார்த்த போது அது தொந்தரவுக்கு உள்ளாகி குவாரியின் மறுபக்கம் பறக்க நான் கழுகு இனம் என நினைத்தேன். இரண்டடி உயரம் இருக்கும். பறந்து சென்று உட்கார்ந்த இடம் தெரியவில்லை. குத்து மதிப்பாக ஒரு குவாரி பாகத்தினை படம் எடுத்து வந்து கணனியில், உருப்பெருக்கி பார்த்த போது கொம்பன் ஆந்தை எனத் தெரிந்தது. இது காலையில் நிகழ்ந்தது. உடனே மதியம் 3 மணிக்கு மேல் சென்று புகைப்படம் எடுத்து வந்தேன். இரண்டு ஆந்தைகளைப்பார்த்து ரவசம் கொண்டேன். ஆந்தை என்றாலே நம்மை வசிகரிக்கக் கூடிய பறவை. அதைப்பற்றிய கட்டுக்கதைகள் உண்டு. பார்த்தால், அதன் குரல் கேட்டால் நல்லது இல்லை என்பது அபத்தம். யாராவது கோவைவாசிகள் கொம்பன் ஆந்தையை பார்க்க ஆவல் இருப்பின் என் கைபேசி எண்; 98421 06430 தொடர்பு கொள்ளவும். அழைத்துச்செல்கிறேன்.

No comments:

Post a Comment