Showing posts with label பல்லுயிரினம். Show all posts
Showing posts with label பல்லுயிரினம். Show all posts

Tuesday, August 12, 2014

அறுகி வரும் பச்சோந்தி

பட்டணம் புதூர் பாதையில் மாய்ந்து போன பச்சோந்தி

வாளையார் பகுதியில் நண்பர் ராமச்சந்திர மூர்த்தி எடுத்த படம்.

பச்சோந்தி (Chameleon)
            நண்பர் ராமச்சந்திரமூர்த்தி சார் பச்சோந்தியை இப்போதெல்லாம் பார்க்க முடிவதில்லை. நீங்கள் சமீபத்தில் பார்த்தீர்களா?’ எனக்கேட்டார். நானும் பார்த்து பல வருஷங்களாயிற்று,’ என்றேன். ‘நான் வாளையார் சென்ற போது எடுத்த புகைப்படம் என ஒரு பச்சோந்தி படத்தை மின் அஞ்சலில் அனுப்பி வைத்தார். அது சாதாரணமாகப் பச்சையாக இருக்கும். மெதுவாகத்தான் கால்களில் நடந்து நகரும். வேலி ஓணான் மாதிரிகுடுகுடுஎன ஓடாது. அடர்ந்த வேலிகளில் இதைப்பார்க்கலாம்.
            உடலில் இருக்கும் நிறமிகளைக்கொண்டு, இது எதிரியிடம் இருந்து தப்பிப்பிற்காக, இடத்துக்கு தக்கவாறு நிறம் மாற்றிக்கொள்ளும். இந்த நிறம் மாற்றும் தன்மை இரையைப்பிடிப்பதற்கும் பயனளிக்கிறது. நாக்கு நீட்டுமளவு (அதாவது ஒன்னரையடியாவது இருக்கும்) தூரத்திலிருக்கும் இரை இதனைக் காணமுடியாதவாறு இடத்தின் நிறத்துக்கு ஏற்ப மாற்றிக்கொள்ளும்.  ஓடி தப்பிக்க முடியாது என்பதற்காகவும் நாக்கை நம்பி வயிறு வளர்க்கும் உயிரினம் ஆதலின், இறைவன் செய்த உதவியிது. வேலி ஓணான் மாதிரி உடல், தலை அமைப்பு. செதில், செதிலாக உடல் மேற்பரப்பு உள்ளது. மற்றபடி கண்கள், தலை வித்தியாச அமைப்பு கொண்டது. வால் வட்டமாக சங்குசக்கரம் மாதிரி உள்ளது. நாக்கு ஒண்ணரை அடிக்கு நீட்டி பூச்சிகளப்பிடிக்கும். நாக்கு நுனி ஒட்டிக்கொள்ளும் தன்மையுள்ளது. இதன் உணவு பூச்சிகள்.
            அடிக்கடி நண்பர்கள் குழுவுக்குள் மாற்றி, மாற்றி ஒரு பக்கம் சாதகமாகப்பேசினால், ‘போடாப்பச்சோந்தி எனத்திட்டுகிறோம். ஒரு நாள் பட்டணம் புதூர் அருகில் மதகு ஒன்று உளது. ஆடியில்  நொய்யல் ஆற்றுநீர் வழிந்து போகும். அது பார்ப்பதற்கு அழகாக இருக்கும். அதை புகைப்படம்எடுக்கலாம் எனஅதிகாலை ஸ்கூட்டரில்  போனால் ஏமாற்றம் மிஞ்சியது. மதகு வழியவில்லை. அங்கிருந்து பட்டணம் புதூர் வழியாக பள்ளபாளையம் குளத்துக்குப் போய் பின்பு ராமகிருஷ்ண மடத்தின் அனாதை விடுதிக்குப் போகலாம் என நினைத்து பட்டணம் புதூர் நுழைந்தேன். பாதையில் பச்சோந்தி அரைபட்டுக்கிடந்தது.இரவில் வாகனம் எதோ அதன் மேல் ஏற்றி விட்டது. அந்தோ! பச்சோந்தி மெதுவாக நகரும், நகர்ந்து பாதையின் அடுத்த பக்கம் போவதற்குள் விபத்தில் மாட்டி இறந்து கிடந்தது. நேரில் பார்த்து சந்தோஷம் கொள்ளாது துரதிஷ்டமாக இறந்து போனதைக்கண்டேன். பச்சோந்தி அறுகி வரும் ஊர்வன இனம்.
            கால்கள் வலுவற்றது அதனால் வால் புதர்ச்செடிகளில் நகர பிடிமானத்துக்கு பிடித்துக்கொள்கிறது. கண்கள் சுற்றிலும் பார்க்க ஏதுவாக துறுத்திக்கொண்டிருக்கும் அமைப்பு.
      மனிதனில் பச்சோந்தி வேண்டாம், ஆனால் நிறம் மாறும் இந்த பாவப்பட்ட பச்சோந்தி தேவை.


Wednesday, September 11, 2013



 Wild life in Residential area




பெரிய மரப்பல்லி
 Wild life in Residential area
Tree Lizard
            ஒரு நாள் காலையில் தூங்கி எழுந்து வீட்டு முற்றத்துக்கு வந்தேன். அங்கு ஒரு பெரிய பல்லி வயிற்றிலிருந்து 6-7 முட்டைகள் சிதறிப்போய் பின் பாதி உடல் இல்லாமல் கடிக்கப்பட்டுக்கிடந்தது. அந்தோ! முட்டைகள் வெள்ளையாகவும், ஓவல் வடிவத்திலும் ரப்பர் போல வெளி ஓடும் இருந்தது. வயிற்றில் ஒரு முட்டை வெளியில் வராமல் இருந்தது. பரிதாபம். எத்தனை ஜீவன்கள் மடிந்து போயின!  10-20 முட்டைகள் இடும் இந்தப்பல்லி இனம், முட்டைகளை ஈரமண்ணில் புதைத்து வைக்கும். 7 வாரத்தில் குஞ்சு பொரிக்கும்.
            இவற்றிற்கு இரை பூச்சிகள், சின்ன ஊர்வன போன்றவை. பற்கள் இரையைப்பற்ற மட்டுமே முடியும். கிழிக்கவோ, அரைக்கவோ முடியாது. இரையை அப்படியே விழுங்கும்இனப்பெருக்க காலத்தில் தலை சிகப்பாக மாறும்.காதல் காலத்தில் வில்லனாக மற்றொரு பல்லி வந்தால் சண்டை மூழும்.
            எங்கள் காலனியில் பூனைகள் கொஞ்சம் அதிகம். யாரும் வளர்த்துவதில்லை. இருப்பினும் இவை குட்டிகளிட்டு தங்களுக்குள் ஒவ்வொரு வீட்டைதேர்ந்தெடுத்துக்கொண்டு கொல்லைப்புறம், முற்றம், தோட்டம் என உலவி கிடைப்பது உண்டு வாழும். எங்கள் வீட்டில் சுற்றித்திரியும் ஒரு பூனை பெரிய மரப்பல்லியை இரவில் வேட்டையாடிவிட்டது. மரப்பல்லி வாயும் வயுறுமாக பூனையிடம் அகப்பட்டது பரிதாபமாக இருந்தது.

        எனது வீட்டைச்சுற்றி கற்பகவிருக்ஷங்களாய் மரங்களை நூற்றுக்கனக்கில் நான் வளர்த்ததால் தான் ஒரு குடியிருப்புப்பகுதியில் என்னைச்சுற்றிஇப்படிப்பட்ட சுவராஸ்யங்கள் நடந்தேறுகின்றன. உங்களுடன் பகிர்ந்து கொள்ள முடிகிறது. மரங்கள், வண்ணத்துப்பூச்சிகள், ஊர்வன, பறவைகள், பூச்சிகள் , வண்டுகள் என உயிர்ப்பான காட்சிகளை நம் கண்முன்னே கொண்டுவரும்.

Friday, November 23, 2012


பல்லுயிரினம்
                                                    
                                                       எனக்குந்தான் தாகமடிக்குது 

பல்லுயிரினம்

            இருபது வருஷங்களுக்கு முன்பு, நான் மேட்டுக்காட்டில் வீடு கட்ட ஒரு மனை வாங்கி அகழ்ந்த போது பூச்சி, புழுக்கள், பிள்ளப்பூச்சி, சிறு மூஞ்சூர், பாம்பு, உட்பட புலம் பெயர்ந்து போயின. எனக்கு தருமசங்கடமாகப்போயிற்று. அந்த இடம் பருவ மழைபெய்த காலத்தில் புன்செய் தானியங்கள் விளைந்த பூமி.ஐந்தரை ஏக்கர் நிலத்தில் 64 மனைகள் பிரித்ததில் நான் ஒரு மனை வாங்கினேன். மனிதனாகிய நான் குடியேற, பல உயிரினங்கள் குடிபெயர்ந்தன. சோகப்பட்ட நான் ஒரு சோகக் கவிதை எழுதி துக்கத்தை குறைத்துக்கொண்டேன். அந்த மேட்டாங்காட்டில் எண்ணி மூன்று மரங்கள் தான் இருந்தன. பிறகெல்லாம் சூரமுட்புதர்கள் தாம். தனி மனிதன் குடியேற்றத்துக்கே இந்த பாதிப்பு எனில் நீலகிரி, வால்பாறை, போன்று காடு கொன்று சாயா, ‘ஹாயா’ குடிப்பதற்காக தேயிலைதோட்டம் சமைத்தது, எப்பேற்பட்ட ஈவு இரக்கமற்ற செயல் என எண்ணிப்பார்க்கிறீரா? நான் 23 வருஷங்களுக்கு முன்பு மேட்டுக்காட்டில் குடியேறிய போதிருந்ததை விட என்னைச்சுற்றி பல்லுயிரினம் இப்போது அதிகம். அணில், வண்ணத்துப்பூச்சிகள், தும்பியினம், பறவையினம், வண்டினம், பூச்சியினம், புழுயினம் பெருகி என்னை மகிழ்ச்சியில் ஆழ்ந்து போக வைத்துள்ளன. எப்படி? கிட்டத்தட்ட நான் வைத்து வளர்த்த நூறு மரங்கள் ஆற்றும் பணி. 50 வகையான மரங்கள் உள்ளன. பூக்கள் வர்ஷிப்பு, வண்டுகள், வண்ணத்துப்பூச்சிகள் ஈர்க்கின்றன.பூச்சி, புழுப்பெருக்கம் பறவைகளை கவர்கின்றன.வலசை வரும் பறவைகள் கூட வருகை புரிகின்றன. விருக்ஷ்சங்கள் தேன், மகரந்தம், இலை, வேர், கனி என விருந்தோம்பல் செய்வதால் இப்படிப்பட்ட பல்லுயிர் பெருக்கம். அத்துடன் நீர் அருந்த கொள்கலன்கள் வைத்துள்ளேன். உயிரினம் என்னால் தொந்தரவுக்கு உள்ளானதை இப்படிப்பட்ட செயல் பாட்டில் அந்த 5 எக்கர் பூமியையே சுவர்க்கமாக மாற்றியமைத்தேன். நீங்கள் என்ன செய்தீர்கள?