Showing posts with label Nesting. Show all posts
Showing posts with label Nesting. Show all posts

Tuesday, July 28, 2015


தொங்கநாதன்……..2

காய்ந்த குளத்து கருவேல மரத்தில் தொங்கும் ஒற்றைக்கூடு


                தொங்கநாதன் எனும் தூக்கணாங்குருவி கருவேல மரம் அடர்ந்த காய்ந்து போன குளத்தில் உள்ள நான்கு மரங்களில் தொங்கநாதன் கூடு தொங்க விட்டுருந்தது. ஆனால் ஒன்றே ஒன்று மட்டும் அதுவும் முழுமையடையாமல் இருந்தன. பத்தடி உயரத்தில் மரத்துக்கு ஒன்றாகத்தொங்கின.இது எனக்கு பேராச்சர்யமாக இருந்தது. இது வரை நான் கண்டது கூடுகள் நீரோடும் ஆற்றுக்கு மேல் அல்லது கிணற்றுக்கு நடுவில் தொங்கிக்கொண்டிருக்கும். வேம்பு, அத்தி, சீனிப்புளி போன்ற கரையிலுள்ள மரங்களில் இருந்து யாரும் தொடமுடியாத நிலையில் நீருக்கு மேல் தொங்கிக்கொண்டிருக்கும். வரண்ட குளத்தில் கருவேலமரத்தில் ஒற்றை அரைகுறை கூடுகளைப்பார்த்த போது இது புது கண்டுபிடிப்பு தாம் என எனக்குள் சொல்லிக்கொண்டேன். இது வரை பதிவாகாத செய்தி. ஒருவேளை கிணற்றின் நடுவில் கட்டுவதற்கு முன் இந்த மாதிரி இடத்தில் கட்டிப்பழகுவதாகக்கூட இருக்கலாம். வெண்தொண்டை தினைக்குருவி தொங்கநாதன் குஞ்சு பொரித்து விட்ட கூடுகளை தன் இனப்பெருக்கத்துக்கு உபயோகிப்பது பற்றி டாக்டர் சலீம் அலி பதிவு செய்திருக்கிறார். அத்தோடு எனது Diary on the nesting behavior of Indian Birds நூலில் சிட்டுக்குருவியும் இந்த தினைக்குருவி போல எல்லாம் முடிந்து போன வெற்றுக்கூட்டை தன் இனப்பெருக்கத்துக்கு பயன் படுத்துவதை பதிவு செய்துள்ளோம். இப்போது மேலும் ஒரு செய்தி என்னவெனில், வெண்தொண்டை தினைக்குருவி முட்டைகளுக்கு மெத்தை வைக்க உதிர்ந்த இறகை தனது வாயில் கவ்விச்சென்றதை கண்ணுற்றேன். தினைக்குருவிகள் மற்றும் சிட்டுக்குருவிகள் கூட்டை கைப்பற்ற வரும் போது தொங்கநாதன் அவைகளைத்துரத்தி அடிக்கின்றன. அணில் கூடுகளுக்குப்பக்கம் சுற்றுவது முட்டை, குஞ்சுகளை கைப்பற்றத்தான் என்பது தெளிவு. தொங்கநாதன் தானியங்களையும், பூச்சிகளையும் தன் குஞ்சுகளுக்கு ஊட்டுவது அதன் அலகில் சிக்குண்டு இருப்பதை வைத்து பதிவு செய்ய முடிகிறது. தினைக்கருவிகள் பல கூட்டில் குடியேறுவதற்கு முன்பு அதை சுற்றி பார்வையிடுகின்றன. ஒன்றிரண்டு கூடுகள் இரட்டையாக பின்னப்பட்டு ஒன்றிலிருந்து இன்னொன்று தொங்குகிறது.சாதாரணமாக ஒன்னரையடியாக இருந்தால் இந்தக்கூடு மூன்றடியாக உள்ளது. அருகிலிருக்கும் தென்னை மரத்தின் ஓலை, சோளத்தட்டின் ஓலை என இவற்றை அலகில் பூக்கட்டக்கிழிக்கும் நாறு போல கிழித்து அலகில் கூட்டைப்பின்னலிட்டு நெய்வது கண்கொள்ளாத காட்சி.கூட்டின் அருகில் கருந்தலை தினைக்குருவிகளைக்கண்டேன். சிட்டுக்குருவி. மைனா கிணற்றுக்குள் போய், வந்து கொண்டிருக்கிறது. அது கிணற்றுச்சுவர் பிளவுகளில் முட்டை வைக்கும். அது கண்ணில் பட வில்லை. அமைதியான கிராமத்து 86 வயது பழனிக்கவுண்டர் மனைவியை இழந்தவர், எனக்காக கூட்டை நான்கு கிணறுகளில் கண்டு பிடித்துக்கொடுத்தது என்னை நெகிழ வைத்தது. பழைய துறுப்பிடித்த சைக்கிளில் காற்றுடன் போராடி பெடலை அமுக்கி தெற்கும் வடக்கும் அலைந்து கண்டு பிடித்துக்கொடுத்தது என்னை வியப்புக்குள் தள்ளியது. ……………..தொடரும்.


Sunday, July 19, 2015


தொங்கநாதன்


தொங்கநாதன்

தொங்கநாதன் எனில் தூக்கணாங்குருவி என வட்டாரத்தமிழ் சொல்கிறது. இதன் வாழ்க்கை  மர்மங்கள் பல கொண்ட சினிமாப்படம் போல இருக்கும். அதைப்படித்து அனுபவித்தால் இதன் அருமை தெரியும். மக்கள் தான் வாசிப்பு பழக்கத்தை ஒழித்துக்கட்டியாயிற்றே! 86 வயது பழனிக்கவுண்டர் ஒரு அமைதியான கிராமத்தில் மனைவி இறந்தும் உள் சோகம் தெரியாமல் எனக்காக ஐந்து கூடுகளைக்கண்டு பிடித்தார். கிணறுகளின் மேலே தொங்கிக்கொண்டிருக்கும் பத்துக்கூடுகள். இந்த 86 வயது இளைஞர் அதரப்பழைய சைக்கிளில் கடக்முடக் கென பெடலை அமுக்கி கண்டு பிடித்துச்சொல்ல நான் மகிழ்ந்து போனேன். வாரம் ஒன்று அல்லது இரண்டு முறை ஸ்கூட்டரில் பறந்தேன். கிணற்று மேட்டில் என் தவத்தை ஆரம்பித்தேன். பாம்பேறி என்ற பெயர் கொண்ட கிணற்று மேட்டில் பாம்பு வரலாம். இருப்பினும் புதராய் முளைத்த வேம்பு சிமிறுகளுக்குப்பின் ஒளிந்து கொண்டும், அமர்ந்தும், தென்னை மரத்தின் மீது சாய்ந்து கொண்டும் மற்றொரு கிணற்றில் கால் கடுக்க நின்றும், தொங்கநாதன்கள் வருவார்களா என காத்திருந்த கணங்களில் வீடு, மற்றும் நண்பர்கள் நினைவு ஏன் வரவில்லை ? இது யோகத்தில் தாரணா என்பதை ஒரு வகை தியானம் எனலாம். தொங்கநாதனை ஒப்பிடும் போது நமக்கு ஆபத்து குறைவு தான். வேலி ஓணான், பாம்பு, பருந்து, அணில், மைனா என முட்டை, குஞ்சுகளை சுவைத்து பசியாற்றிடக்காத்திருக்கும் உயிரிகளைக் காணமுடிந்தது. என்ன விறுவிறுப்பான தொங்கநாதன் வாழ்க்கை! கழுத்தில் தொலைநோக்கி, காமிரா என மாலைகள். மாற்றி, மாற்றி பார்த்து, காத்திருப்பு முடிவற்றது. தொங்கநாதர்ளே! என்னைப்பார்த்து பயம் ஏன்? நான் உங்கள் நண்பனல்லவா! உங்கள் வாழ்க்கை வரலாறு எழுதும் ஏழை எழுத்தாளன். நாதர்களைச்சுற்றி மைனா, வேலிஓணான், அணில், வெண்தொண்டை தினைக்குருவி, கருப்புத்தலை தினைக்குருவி, தேனிபிடிச்சான், சிட்டுக்குருவி என இருந்தன. இதனை நெசவாளிக்குருவி என அழைக்கலாம் என நினைக்கிறேன். மூக்கு ஊசி போல இருந்து தன் கூட்டை நெய்கிறது. கரும்புத்தோகை, நெல் தோகை, சோளத்தோகை, தென்னை ஓலைகளை வெகு சன்னமாக அலகால் இரண்டு அடி கிழித்து வந்து தன் வீட்டை நெய்கிறது. அதற்காக மேற்ச்சொன்ன விளைச்சல் பூமிகளுக்கருகில் உள்ள கிணறுகளில் கூடுகட்டுகிறது.கிணறு ஓரம் வளர்ந்து, கிணற்றுக்குள் சிமிறுகள் தொங்கும் வேம்பு, அத்தி, சீனிப்புளி என்ற மரங்களில் தொங்கும் வீடுகள். வசந்த மாளிகைகளைப்பார்க்க  புலர்ந்தும் புலராத காலைப்பொழுது ஸ்கூட்டர் பறக்கும். பிறகு கிணற்று மேட்டில் தவம். காற்றில் ஆடும் மாளிகைகள். இறைவனை நினைக்க எனக்கு வியப்பு கடல் அளவை விட விரிந்து போகும் தோழி!..........தொடரும்

Tuesday, April 7, 2015

குக்குறுவான்
                                     coppersmith




இந்த இனப்பறவை எப்படி என் மரமான குல்மோகஹருக்கு வந்து குடிபுகுந்தது என புலப்படவில்லை. எனது குடியிருப்புப்பகுதி சற்று சந்தடியான பகுதியாக மாறியது ஆச்சர்யம். குக்குறுவான் மரங்கள் கொண்ட சோலையில் உலாவித்திரியும் என நினைத்திருந்தேன்.ஆனால் சலிம் அலி சொல்கிறார்’ Habits: Found wherever there are fruiting trees, especially the various species of wild fig, be it in outlying forest or within a noisy city” இது போதுமே! மர்மத்துக்கு விடை கிடைத்தாயிற்று. சந்தடி குடியிருப்பானாலும், இங்கு நான் வைத்து வளர்த்த 100 மரநண்பர்கள் இருக்கிறார்கள். அரசமரம் பழங்கள் புஷ்பிக்கத்தொடங்கியதை நான் பார்க்கத்தவிறினேன். ஆனால் குக்குறுவான் பார்க்கத்தவறவில்லை. குக்குறுவான் ஒரு ஜோடி இங்கு வந்ததல்லாமல் ஜன்னலை எட்டிப்பார்த்தால் போதும், கூடு ரசிக்கும்படி குல்மோஹரில் துளையிட்டு கூடும் வைத்து விட்டது. மகிழ்ச்சிக்குரிய சங்கதி. குஞ்சுகளுக்கு உணவூட்ட அரசமரப்பழங்கள் போதுமே என குக்குறுவான் ஜோடி முடிவெடுத்து இரண்டு முட்டைகளை இட்டு அடைகாத்தது. குல்மோஹர் தண்டு மிருதுவானது. இருப்பினும் சில வாரக்கடின உழைப்பினால் மரத்தண்டு துளை தயாரானது. முதலில் இரண்டு அலகுகள் மரத்துளை வழியாக  வந்து அரசமரப்பழங்களை அன்னையிடம் பெற்றுக்கொண்டன. பிறகு ஒரு அலகு மட்டும் வர மற்றொன்று இறந்து விட்டதோ என நினைத்தது தவறு என சில வாரங்களுக்குப்பிறகு தெரிந்தது. இரண்டு அலகுகள் மரத்துளை வழியாக நீட்டினால் நெருக்கியடிக்க வேண்டுமென மாற்றி மாற்றி அலகை நீட்டியது தெரியவர அவற்றின் தகவமைப்பு மெய்சிலிர்க்க வைத்தது. எனது நூலான “Diary on the nesting behavior of Indian Birds”-ல் இதன் வாழ்க்கை சக்கரத்தை எழுதியிருக்கிறேன். ஆனால் ஒன்றிரண்டு விட்டுபோனது குறித்து வருந்துகிறேன். இந்தப்பறவை கூட்டினைச்சுத்தம் செய்கிறது. உள்ளே போன அப்பா () அம்மா வாய் நிறைய குஞ்சுளின் கழிவை எடுத்து தூரப்பறந்து எறிகிறது. மரத்துளை நிரம்பி வழிந்தால் இரண்டு குஞ்சுளுக்கு இடம் போதாது. மேலும் அம்மா () அப்பா பறவை பல சமயம் கூட்டுக்குள் தங்குகிறது. இன்னொரு விஷயம் குஞ்சு பறக்கத்தொடங்கும் போது பார்த்தால் கிரிம்சன் நிறம் முன் நெற்றியிலும், மார்பிலும் இல்லாதிருப்பது கவனித்தேன். அதை புகைப்படம் எடுத்த பதிவு மிக சிலாகிக்கக்கூடியது. உணவு ஊட்டல், குஞ்சுகள் அம்மா வாயிலிருந்து பிடுங்கிக்கொள்கின்றன. சிலசமயம் அம்மா ஊட்டி விடுகிறது. அம்மா அடுத்த வீதி குல்மோஹரில் அமர்ந்து ஒலி எழுப்ப இளையர் என் வீதி குல்மோஹர் கிளையிலிருந்து முதன்முதலாக இறக்கை விரித்து அம்மா இருக்கும் அடுத்த வீதி குல்மோஹருக்குபறந்ததும் நான் சந்தோஷத்தில் கைதட்டினேன். அடுத்த இளஞி ஒரு வாரம் கழித்து வானை அளக்கப்பறந்ததும் எனக்கு இரட்டை சந்தோஷம். வால்காக்கை கூட்டிலிருந்த குஞ்சுகளை கபளிகரம் பண்ணப்பார்த்த போது, பெற்றோர் பறவைகள் கத்த அது தயங்கி விலகியது. இந்த மாதிரி இடையூரிலும் வெற்றிகரமான வாழ்க்கை நிகழ்வது இறைவன் கிருபை.


Sunday, January 4, 2015


Diary on the nesting behavior of Indian Birds
           

Contact link: http://www.amazon.in Diary on the nesting behaviour of Indian Birds


Small Bee Eater pair- One bird excavates nest at the side of sand bund, another bird guard the place and gives caution while intruders approaching.

Diary on the nesting behavior of Indian Birds
           
இது ஒரு மாறுபட்ட ஆங்கிலப்பறவை நூல். ஐந்து வருடங்களாக குளம், ஆறு, கடல், காடு என அலைந்து திரட்டிய தகவல்கள். இது வரை அறியப்படாத பறவைகளின் கூடு ரகசியங்களை பதிவு செய்த நூல். இது நாள் வரை வெளி வராத அரிய புகைப்படங்கள் அலங்கரிக்கின்றன. நேரடியாக களத்தில், வெவ்வேறு புகைப்டக்கலைஞர்கள் எடுத்த 300 அரிய புகைப்படங்கள் உள்ளன. அது மட்டுமா!  50 கோட்டு ஓவியங்கள் பறவைகளின் ரகசிய வாழ் முறைளை வெளிக்கொணர்கின்றன. 223 பக்கங்கள் டயரி வடிவில் அத்தனையும் பளபளப்பான ஆர்ட் காகிதத்தில் தயாரித்த நூல். இதுவரை 1000 படிகள் விற்று சாதனை படைத்துள்ளது. Rajaram Mohan Roy Library Foundation, Calcutta, தேர்வு செய்து 340 நூல்களை வாங்கி இந்தியா முழுவதும் உள்ள நூலகங்களுக்கு கொடுத்துள்ளது, பெருமை தரக்கூடிய விஷயம்.
          Bombay Natural History Society, WWF, Salim Ali Centre for Ornithology and Natural History, India Birds விலைக்கு வாங்கி, மாணவர்களின் Reference-க்காகவும், Phd-மாணவர்களுக்காகவும் வைத்துள்ளது, இந்த நூலின் முக்கியத்துவத்தை பறை சாற்றுகிறது. The Hindu, Times of India, New Indian Express, Deccan Chronicle, India Birds என பத்திரிகை உலகு பாராட்டியுள்ளது. இத்தகைய ஒரு நூலை ஒவ்வொருவரும் பார்த்து ரசித்துப்படித்திட வந்து விட்டது on line amazon.in விற்பனையில்………..
          Small Green Bee Eater ஜோடியின் கூடு மண் திட்டினை இரண்டு அடிக்குக் குடைந்து முட்டைகளை வைக்கும். ஆண் Bee Eater மேல் சிமிறில் அமர்ந்து யாராவது வந்தால் எச்சரிக்கை செய்யும். இதை இந்தப்படம் நுணுக்கமாக சொல்லாமல் சொல்கிறது. இந்த நூலை வாங்கிப் படிக்க வேண்டுமென்ற ஆவலைத்தூண்ட வில்லையா?

           இதுவரை எந்த நூலும் இது மாதிரி பறவை குணாதிசயங்களை வெளியிடவில்லை. இது 5 வருஷத்திய களப்பணி. தற்போது அகில உலக அளவில் முதலிடம் வகிக்கும் amazon.in நிறுவனம் இதை விற்பனை செய்ய முன் வந்துள்ளது, இந்த நூலின் தரத்தையும், வடிவத்தையும், தகவல் களஞ்சிய நிலையையும் பாராட்டும் விதமாக உள்ளது. பறவை ஆர்வலர்கள் ஒவ்வொருவர் புத்தக அலமாரியையும் அலங்கரிக்க இதோ வந்து விட்டது On line விற்பனையில்…………

Saturday, December 27, 2014


My book "Diary on the nesting behaviour of Indian Birds"-Author Chinna Sathan is now available in, on line shop amazon.in


சிட்டுக்குருவியைப்பற்றி சில உண்மைகள்


அம்பர் கோட்டை, பிகானிர் முன்புற வளாகத்தில் மாடப்புறாக்களும் சிட்டுக்குருவிகளும்

 ஜெய்ப்பூர் நகர வீதியில் சிட்டுக்குருவிகள்

            சிட்டுக்குருவி செல்போன் கோபுரத்தினால், அதன் ஜனத்தொகை குறைந்து விட்டது என்பதை விட அதற்கு கூடுகட்ட இடம் தற்போதைய RC கட்டிடங்களில் இல்லை என்பதும், அதற்கு உணவாகும் தானியங்கள் சிந்துவதில்லை என்பதும் தான் உண்மையான காரணங்கள். சூலூரில் உள்ள பஸ் ஸ்டாண்ட் அதாவது வெளியூர் பஸ்கள் நிற்கும் இடத்துக்கு தென்புறம் இரண்டு வேப்ப மரங்கள் உள்ளன. இதற்கு அருகில் உள்ள பெரிய மாடி காம்ளக்ஸ் மேலும் அதற்கு அருகில் உள்ள கட்டிடங்கள் மீதும் செல்போன் கோபுரங்கள் உள்ளன. இருந்தும் சூலூர் ஊர் குருவிகள் 50 ஜோடியாவது இரவு இங்கு தங்குகின்றன. மாலையில் சென்றால் ‘கிச்,கிச்’ என இதமான ஒலி, குருவிகள் தூங்கப்போகும் முன்னம் கேட்டு மகிழலாம்.
          இது போல அதிகாலையில் ‘கிச், கிச்’ ஒலி எழுப்பி ‘குழு குழு’வாக திசைக்கு ஒரு குழுவாக பறந்து சென்று, தோட்டி வேலை செய்வதில், தனது பசியை ஆற்றிக்கொள்கின்றன. தினமும் இதைப்பார்க்கலாம். செல்போன் கோபுர பாதிப்பு இல்லாததனால் தானே அங்கு தினமும்தங்குகின்றன. முன்பிருந்த ஓட்டு வீடுகள், குடிசை வீடுகள் இப்போது இல்லை. தாழ்வாரங்கள், ஓடு மற்றும் குடிசை பனை, தென்னை ஓலைகள் கூடுகட்ட இடமாயிருந்தது. இப்போது அவை எங்கே? கிராமத்தில் கூட RC வீடுகள். தானியம் சிந்தாத மாதிரி பிளாஸ்டிக் மூட்டைகள். அரிசியைத்தவிர மற்ற தானியங்கள் யாரும் உண்பதில்லை. குருவிகள் எண்ணிக்கை குறைந்து போனதற்கு இது தான் காரணம். தாளப்பறக்கும் பறவை இது. ஆனால் விண்முட்டும் கட்டிடங்களின் ஊடே எப்படிப்பறப்பது?

          ராஜஸ்தானில் நான் ஜெய்சால்மிரிலிருந்து ஜோத்பூர் ரயிலில் வரும்போது, ரயிலில் சிந்திய தின்பண்டங்களை தின்ன குருவிகள் சில வந்து ரயில் பெட்டிக்குள் மேய்ந்து கொண்டிருந்தது பார்த்து வியந்து போனேன். ராஜஸ்தானில், மாடப்புறாக்களுக்கு மக்காச்சோளம் போன்ற தானியங்களை, காரில் வந்தும், மோட்டர் சைக்கிளில் வந்தும் மூட்டையில் விசிறி விடுகிறார்கள். பிகானிர், அம்பர் கோட்டை முன்பு இந்த மாதிரி தூவி விட்ட தானியங்களை மாடப்புறாக்களோடு சிட்டுக்குருவிகளும் கொத்தித்தின்கின்றன. ராஜஸ்தான் மக்கள் இப்படி தானியம் விசிறி விட்டிருப்பதைப் பல அரண்மனை முன்பு பார்த்தேன். அவர்கள் பறவைகளின் மேல் அன்பு வைத்துள்ளனர். மாடப்புறாக்கள் அபரிமிதமாக உள்ளன.அதே வேளையில் குருவிகளும் தமிழ் நாட்டை விட அதிகம் உள்ளன. மக்களை ஒட்டி வாழும் இந்தப் பறவை ராஜஸ்தானில் அதிகம் இருக்கும் போது இங்கு குறைவு பட்டது மனிதனின் தங்குமிடக் கட்டிடமும், உணவு முறையும் மாறிப்போனதால், நம்மை நம்பியிருந்த சிட்டுக்குருவிகள் எங்கோயோ தொலைந்து போயின. இவைகளை மீட்டு எடுக்க வேண்டும்.

Saturday, June 21, 2014


தினைக்குருவி தங்கும் விடுதி
Dormitory of Whitebacked Munia (Lonchura striata)
            
             
        மற்ற பறவைகளை ஒப்பிடும் போது வெண்முதுகு தினைக்குருவி இரவு தங்கும் விடுதி அலாதியானது. இப்பறவைகள் 3 () 4 அறைகள் கொண்ட கூடு வைக்கோல் மற்றும் காய்ந்த புற்களால் கட்டுகிறது. அது 5 அங்குலக் குறுக்களவும், ஒரு வட்ட குழாயமைப்புடனும் உள்ளது. இரண்டு அங்குல அளவுக்கு இரு முனைகளில் வழி அமைத்துள்ளது. பின்புற வழி முன்புற வழியை விட சற்று சிறியதுபின்புற வழி ஆபத்துக்காலத்தில் தப்பிச்செல்லும் வழி. யாராவது எதிரி கூட்டுக்குள் வந்தால் தப்பிச்செல்ல அது வழி கொடுக்கும். எந்த மாதிரி முன் ஜாக்கிரதை! பாருங்கள்இந்த கூட்டில் முட்டை வைத்து அடைகாத்து, குஞ்சு பொரித்த பிறகு உணவூட்டி அதைப் பிரிந்து விடும். இந்தக்கூடுகள் 6 () 8 அடி உயரத்தில் வேலமரத்தில் கட்டுமானம் செய்யும். குஞ்சுகள் வளர்ந்து சென்ற பிறகு இந்தக்கூடுகளை தங்கும் விடுதியாக உபயோகிக்கும் இப் பறவை.
            பல முறை இம்மாதிரியான கூடுகளைப் பார்த்துள்ளேன். ஒரு சூரிய அஸ்தமன நேரத்தில், நீரற்றுப்போன சூலூர் குளப்படுகையுள் நடந்து கொண்டிருந்தேன். ஆரஞ்சு சூரியன் கருநீல மலைப்பின்னே விழும் நேரம்அந்த இதமான நேரத்தில் நான் ஒரு தினைக்குருவியின் கூட்டினை அடையாளம் கண்டேன். அதற்குள் முட்டை அல்லது குஞ்சுகள் இருக்குமா எனப் பார்த்தேன். அந்த நேரம் பார்த்து ஒரு ஜோடி தினைக்குருவிகள் எங்கிருந்தோ வந்து என்னை ஆச்சர்யப்படவைத்தன. அவை நான் இருக்கிறேன் என கூட்டுக்குள் நுழையாமல் அருகிலிருந்த ஒரு வேல மரத்தில் அமர்ந்தன. தினைக்குருவிகள் நான் அந்த இடத்தை விட்டு நகர்ந்து போகக்காத்திருந்தன. நான் பத்தடி நகர்ந்து, ஒரு சிறு மரத்தின் பின்பு ஒளிந்து கொண்டேன். ஆனால் பறவைகள் கூட்டில் நுழையாமல் தயங்கின. சிறிது நேரத்தில், ஆதவன் மறைய இரவின் கருப்புத்துணி விரிய, ஜோடி தினைக்கருவிகள் மெதுவாக கூட்டுக்கருகில் வந்தமர்ந்தன. அவை இரவு தங்குவதற்கு காலியான கூட்டினை சில காலம் பயன் படுத்துவது எனக்கு வியப்பை வரவழைத்தது.

            இன்னொரு முறை தில்லி முட்காடான ஊர்வேலங்காட்டில் இந்த மாதிரியான இரவு தங்கும் விடுதியாக உபயோகப்படுத்தும் கூட்டினைப்பார்த்தேன். இதை எப்படி முனைவர் சலீம் அலி விவரிக்கிறார் எனப்படித்து ஆனந்தப்படுங்கள். “ The nests are used as dormitories by the family till long after the young have flown.”

Tuesday, April 15, 2014


மாறுபட்ட நிழற்படங்கள்
Coot and chicks

            அரக்கோணம் பட்டிமேடு ஏரி கிழ மேற்காக அமைந்தது. இங்கு சில மாதங்களுக்கு முன்பு இந்த ஏரிக்குத் தெற்குப்புறமாகச்செல்லும் மோசூர் தார் சாலையில் நடந்தேன். காலை, மாலை என் மகள் வீட்டிலிருந்து ஒரு நடை இந்த ஏரிக்குப்போவேன். அது 2 கி.மீ-க்கு மேல் இருக்கும். மேற்குப்புறமாக சிறுவர்கள் விளையாடிக்கொண்டிருப்பர். அந்த புல்வெளி முழுவதும் மக்கள் விசிறி விட்ட காரி பேக்ஸ் ஏரி நீர் உள்வாங்கிவிட்ட நிலையில் வெள்ளை,வெள்ளையாகக் கிடக்கும். அந்த சுகாதாரக்கேட்டிலும், சிறுவர் விளையாடிக்கொண்டிருப்பர்.
          அப்படி ஒரு நாள், நடு ஏரியில் நாமக்கோழி நீர்ப்பரப்பின் மீது கூடு வைத்திருந்ததைக்கண்டேன். என் காமெராவுக்கு எட்டாத தூரம். சரியாக வரவில்லை. பறவை அடை காத்துக் கொண்டிருந்தது. இப்படிப்பட்ட பறவை வாழிடமான ஏரியை ஒரு பெரிய குப்பைத்தொட்டியாகக் கருதியிருப்பது வேதனை.டயர், நீர் குடுவை, பாலிதின் பை போத்தல் என எதுவானாலும்உபயோகி பின்னர் தூக்கி எறிஎன்ற கலாச்சாரத்தில் நீர் நிலைகளை சீரழிப்பது, அதை நிர்வாகம் கண்டு கொள்ளாமல் இருப்பது வேதனையிலும் வேதனை. மக்களுக்கு குழாயில் நீர் வினியோகிக்கப்போய் அவர்கள் வீட்டுக்குள் 5 குழாய்கள் அமைத்து சொகுசு வாழ்க்கை வாழ்கின்றனர்.அன்றைய காலங்களில் குடிநீருக்காக ஆறு, குளங்களை நம்பியிருந்தனர். சுத்தமாக வைத்திருந்தனர். இப்போது?
          பிறகு ஒரு மாலை நேரம் பட்டி மேடு ஏரிக்கு பைனாகுலர், காமெராவுடன்  சென்றேன். நாமக்கோழி தாயும், தந்தையும் பத்துக்குஞ்சுகளைக்கூட்டிக்கொண்டு ஏரி நீர்பரப்பில் போய்க்கொண்டிருப்பதைப்பார்த்தேன். என்ன அழகு! குஞ்சுகள் தலை சிகப்பு,நடு மண்டை சொட்டை, உடல் கருப்பு, இருந்து, நாமம் இன்னும் உருவாகவில்லை. ஏராளமான முக்குளிப்பான்கள் ஏரிப்பரப்பில் தட,தடத்தும்,குலவை விட்டுக்கொண்டும் இருந்தன. இவைகளும் இங்கு இனப்பெருக்கம் செய்கின்றன. இப்படிப்பட்ட ஏரியின் தெற்குப்புற மோசூர் சாலையில் கோழி இறகுகளை கரையோரமிட்டு தீ வைத்துக்கொலுத்துகின்றனர். பலர் மலம் கழிக்கின்றனர். நீர் நிலை, குளம், ஏரி களின் நிலை இதுவே. ஐம்பதாயிரம் ரூபாய் மோட்டர் பைக், ஐயாயிரம் ரூபாய் கைபேசி வைத்திருப்பவனும் ஏன் ஏரிமேட்டில் மலம் கழிக்கிறான். அவன் டாய்லட் கட்ட வசதி படைத்தவன் தானே!

          எப்படியாவது நாமக்கோழி தன் குஞ்சுக்கு இரை ஊட்டுவதை படம் எடுக்க அவா கொண்டு முப்பது படம் எடுத்தும் மாலை வெளிச்சம் கை விட்டது. மறு நாள் நான்கு மணி மாலையில் சென்று இருபது படங்கள் எடுக்க, நாமக்கோழி போஸ் கொடுத்து விடுமா, என்ன! உடனே குடும்ப்ப்பிள்ளைகளோடு ஏரி நடுவே நீந்தி கிழக்கே சென்றது. லென்ஸ் போதாது. இரண்டொரு படங்கள் கணனியில்  விரிக்கத் தேறின. மாறுபட்ட படங்களே பாராட்டுப்பெறும். ஜெயிக்கும். Face Book ID : Sukumar Arumugam

Thursday, September 5, 2013


பூநாரைகள் (Greater Flamingo)
(Phoenicopterus ruber)
 தமிழகத்தில் வருஷம் முழுவதும் இருக்கின்றனவா?


பூநாரைகள்-கருங்குளம், திருநெல்வேலிக்கருகில்
கைவிடப்பட்ட கூட்டுக்கருகில் பூநாரை கால்தாரை

பாதி அழிந்த கூடுகள்


          ஆம்! என்றே சொல்லத்தோன்றுகிறது. சென்னை,பள்ளிக்கரனை சதுப்புநில நீர்நிலையில் வருஷம் முழுவதும் பார்க்க முடிகிறது என்பது மிகையல்ல.கூந்தகுளம்,காடன்குளம்,கருங்குளம்,வடக்கு விஜயநாராயணம் அங்கிருந்து திருச்செந்தூர் செல்லும் சாலையோர நீர் குறைவான ஏரிகளில் வலசைப்பருவம் இல்லாதபோதும் பார்த்திருக்கிறேன். ரானா ஆஃப் கட்ச்(குஜராத்) பகுதி பூநாரைகளுக்கு சொந்த பிரதேஷம். அங்கு தான் இனப்பெருக்கம் நடைபெறுவது பதிவு செய்யப்பட்டுள்ளது. செப்-மார்ச் வலசைப்பருவம் வந்து பின் குஜராத்துக்குத்திரும்பிவிடும் என்பது பதிவு.
           
  ஒரு பருவத்தில் பூநாரைக்கூடுகள் பாதி கட்டப்பட்டு கைவிடப்பட்டவைகளை கூந்தகுளத்திலும், காடன்குளத்திலும் பார்த்தேன். பூநாரை ஒரடி போல குளத்தோரநீரில் சேற்றைக்கொண்டே குயவன் சட்டி போல் வளைந்த மூக்கால் ஒரடி உயரம் கட்டி அதன் மேல் ஒரு முட்டை வைத்து அடைகாக்கும். கூடுகளைக்காலனியாகப்பார்க்கலாம். இதற்கு உகந்த ஒரு அடி அளவிளான நீர் வற்றிவிட்டதாலும், அல்லது மிகையானதாலும் பூநாரையால் கூட்டை பாதுகாத்துக்கொள்ள முடியவில்லை. அதனால்பாதி உருவான கூடுகள் கைவிடப்பட்டன. நிழற்ப்படத்தில் காண்பது அத்தகையகூடுகள்தான்.

            நானும் சும்மாஇருக்காமல் கூந்தகுளத்திற்கு நீர் தரும் மணிமுத்தாறு பொதுப்பணித்துறைக்கு எழுதி சரியான அளவு நீரை கூந்தகுளத்தில் தேங்க விட்டால் தமிழகத்தில் கூட பூநாரைகள் இனப்பெருக்கம் செய்யும் என்றேன். இது தவிர BNHS, Mumbai-க்கு எழுதி இது குறித்து மேலிடத்துக்கு எடுத்துச்செல்ல வேண்ட,திரு. Asad R Rahmani,Director, BNHS, Mumbai எனக்கு ஒரு அழுவலகக்கடிதம் எழுதினார். அதில் இதனால் தான் BNHS, கூந்தகுளம் IBA (Important Bird Area) என பிரகடனப்படுத்தியுள்ளோம், என்று எழுதியதோடு சரி!