Showing posts with label மீன் பிடிப்பு. Show all posts
Showing posts with label மீன் பிடிப்பு. Show all posts

Monday, November 26, 2012


மீன் பிடிப்பு
மீன் பிடிப்பு


சூலூர் மற்றும் கோவையைச்சுற்றியுள்ள பகுதிகளில் உள்ள குளம், ஏரிகளில் மீன் பிடிப்பவர்கள் பரம்பரை மீனவர்களல்ல. அதனால் அடிப்படை மீன் பிடிப்பு அறிவு கூட இல்லாதவர்கள். அவர்களோடு கலந்து பேசித்தான் சொல்கிறேன்.  முன்பெல்லாம் படகு, பரிசல்களில் சென்று வலை வீசி மீன் பிடிப்பார்கள். இப்போது 5 அடி அகல வலைகளை நீரில் தட்டி மாதிரி மூழ்கடித்து குளத்தின் பரப்பு முழுதும் தெர்மக்கோல் துண்டுகள் மிதவைகளாகப்பயன் படுத்தி விரித்து விட்டு ஒரு நாள் கழித்து பரிசலில் தெர்மக்கோல் துண்டுகள் மிதவைகளோரமே சென்று நீரில் மூழ்கியிருந்த படல் (அ) தட்டியை எடுத்து வலையில் மாட்டிய மீன்களை ஒவ்வொன்றாக எடுத்து பரிசலில் போடுகின்றனர். நீரில் மறைந்திருக்கும் வலையில் நீர் காகம், முக்குளிப்பான், புள்ளி மூக்கு வாத்து, நாமக்கோழி, கூழைக்கடா போன்றவை நீரில் நீந்தி மீன், மற்றும் நீர் தாவரங்களை உண்ணும் போது மாட்டிக்கோள்கின்றன. வலையில் மாட்டி இறந்த இரண்டு நீர்காகங்கள் சுலூர் குளத்தின் வடகரையில் பார்த்தேன், பள்ளபாளையம் குளத்தில் வலையில் மாட்டிய முக்குளிப்பானைக்காப்பாற்றினேன். அமராவதி அணைப்பகுதி கரையில் அடிப்படை அறிவற்ற மீனவர்கள் பழுதான துண்டு வலையை காற்றில் விசிறி விட அதில் மாட்டிய கொண்டைக்குருவியை மீட்டேன். இது குறித்து மீன்வளத்துறைக்கு எழுதியும் எந்த நடவடிக்கையும் இல்லை. இதே போல துண்டு வலையில் மாட்டிய மாட்டுக்கொக்கை சூலூர் குளத்தில் மீட்டேன். SACON, SANF, NGOs மீன்வளத்துறையோடு பேசலாமே. மேலும் மீன்பிடிப்பாளர்கள் பறவைகள் சாப்பிட்டு மீன் குறைந்துவிடுமென குளத்தில் பறவைகள் தங்காதவாறு பார்த்துக்கொள்கின்றனர். குளத்திலிருக்கும் கருவேல மரங்களை வெட்டி விடுவது, குளத்தின் நடுவே திட்டுகள் இல்லாமல் பார்த்துக்கொள்வது என பறவைகளுக்கு தீங்கு செய்கின்றனர், வருசத்தில் 6 மாதம் மீன் பிடித்து மீதமுள்ள மாதம் மீன் வளர நேரம் கொடுக்க வேண்டும். வருடம் முழுதும் மீன் பிடிக்க, பறவைகள் பசியோடு ஓரமாக இந்த பேராசை மனிதர்களைப்பார்த்துக்கொண்டிருக்கின்றன. என்ன தான் செய்வது? இந்த தெர்மக்கோல் வலை விரிப்பால் வலசை வரும் வாத்து இனங்கள் இந்த வலசைப்பருவத்தில் நமது சாக்கடைக்குளங்களில் இறங்கவில்லை.