Showing posts with label Destruction society. Show all posts
Showing posts with label Destruction society. Show all posts

Monday, April 4, 2016


இரக்கம் என்பது சிறிதும் இல்லையடா……!

Both Photo taken by Sri T.R.A. Arunthavaselvan

கொண்டலாத்தி (Hoopoe) 
 இரக்கம் என்பது சிரிதும் இல்லையடா……!
பொள்ளாச்சி, பணிக்கம் பட்டி மஹா சைவம் ஆசிரமத்துக்கு போயிருந்தேன். தோப்புகள்  மற்றும் வானம் பார்த்த நிலங்கள், மழை பெய்தால் புற்கள் தோன்றும் பூமியாகிப்போயின.அங்கு நானும் நண்பரும் உணவுக்காக ஸ்கூட்டரை உருட்டிப்போகும் மண் பாதை தெற்குப்புறம் தோகைகள் உதிர்ந்து போன மொட்டைத் தென்னை மரங்கள். அங்கு வேலை நடந்து கொண்டிருந்தது. விசாரித்துப்பார்த்த போது, வீட்டு மனைகள் பிரிப்பதாக சொன்னார்கள். எனக்கு ‘திக்’கென ஆயிற்று.
தென்னை காய்ந்து போன மரங்கள் தாம், ஆனால் அதன் உயரமான தண்டுகளின் துளைகளில்  புள்ளி ஆந்தை, பச்சைக்கிளி, பனங்காடை, மைனா, மரங்கொத்தி, கொண்டலாத்தி  என சாதாரணமாக நாம் பார்க்கக்கூடிய பறவைகள் முட்டைகள் வைத்து குஞ்சு பொரிக்கும்.  துளைகள் இப்பறவைகளால் ஏற்படுத்துவதல்ல, ஏனெனில் இதன் அலகுகள் அப்படியொன்றும் வலிவில்லை. காய்ந்த மரங்களின் தண்டுகள் வெய்யிலுக்கும், மழைக்கும் இளகிப்போய் துளை ஆவதுண்டு. இந்த பொந்துகளை இப்பறவைகள் பயன்படுத்திக்கொள்ளும். தற்போது மார்ச் (பங்குனி). இன்னும் ஒரு மாதத்தில் சித்திரை சுழி மழை வரும். பிறகு தென்மேற்குப்பருவ மழை. அப்போது நிறையப்பூச்சிகள் கிளம்பும். பிப்ரவரி நமக்கு வஸந்த பருவம். குளிர் முடிந்து கதிரவன் கதிர்கள் உக்கிரமாக எத்தனிக்கும் போது பழங்கள், மலர்கள் அரும்பி மலரும், காய்க்கும். எனவே இப் பறவைகளுக்கு இனப்பெருக்கம் செய்யும் காலமிது.
இந்த ரியல் எஸ்டேட் பேராசைக்காரகள் காய்ந்த தென்னை மரங்களை வெட்டத்தொடங்கினர். நானும் நண்பரும் உணவுக்குச்செல்லும் போது பேசிப்பார்த்த போது,குஞ்சோ அல்லது முட்டையோ இருந்தால் அந்த மரங்களை வெட்ட மாட்டோம் என்றார். ஆனால் மூன்று வாரம் கழித்து வெட்டி சாய்த்தார்கள். எமக்குத்தெரிந்து மூன்று கிளிக்குஞ்சுகள் மண்ணோடு மண்ணாகின.

பொள்ளாச்சிநெடுஞ்சாலை நான்கு வழிப்பாதை ஆகிக்கொண்டிருக்கிறது. நான் போன மாதம் சென்றிருந்த போது நானும் நண்பரும் நெடுஞ்சாலை ஓரம் மேற்குப்புறமாக நின்றிருந்த மழை மரத்தில் அதாவது தூங்க வாகை மரத்தின் கிளைகளில் நான்கைந்து காகத்தின் கூடுகள் பார்த்தோம். அப்போது இரு சிறுவர்கள் உண்டிவில்லில் கூட்டை அடிக்க, நாங்கள் அவர்களைத்துரத்தினோம். கைபேசி படம் எடுக்கப்பின்னால் ஓட, அவர்கள் பயந்து பாதம் பிடரியில் பட ஓடினர். அப்பாடா! நான்கு கூடுகள் காப்பாற்றி விட்டோம். சரி! கண்ணுகளா! நெடுஞ்சாலை அகலமாகிக்கொண்டிருக்கிறது, தெரியுமில்லே! இப்ப என்ன செய்வே மக்கா? மனிதன் சுயநலத்துக்காக என்ன வேண்டுமானாலும் செய்வான். செய்யத்தயங்கவும் மாட்டான். இயற்கை மவுனமாக கண்காணித்துக்கொண்டு தான் உள்ளது. இயற்கையின் பின் விளைவுகள் பயங்கரமாக இருக்கும்.  

Saturday, September 6, 2014

பீரடிக்கும் இளைஞர்கள்
சமுதாயச்சீரழவு
            குடிமக்கள் என்றால் தங்களுடைய சமுதாயக்கடமைகளைச்செய்து, தானும் தன் குடும்பமும் வாழ்ந்து, பிறரையும் வாழ்வில் நல் வழிப்படுத்துவது தான் நல்ல குடிமகனுக்கு அழகு. மேலும் பிறருக்கு சேவை செய்வதில் தனது தெய்விக உள்ளத்தைப்பார்க்க வேண்டும். ஆனால் இப்போது அரசு வருமானத்துக்காக, சாராயம் விற்று சாதாரண மக்களை குடிகாரமகனாக உருவாக்குவது நியாயமற்ற செயல். இதற்குரிய தண்டனை இறைவன் நீதி மன்றத்து முன்பு மிகப் பெரிய தண்டனையாகக் கிடைக்கும். கள் குடிக்கக் கூடாது, அரசு மட்டுமே சாராயம் விற்று பணம் செய்யும் என்று ஏழை மக்களிடமிருந்து பணத்தை உருவி அவனுக்கு இலவசங்களைக்கொடுத்து கெடுப்பது அருவருப்பாக உள்ளது. உழைக்கும் வர்க்கம் இப்போது குறைவு பட்டதற்குக் காரணம் இலவசங்கள் அரசு கொடுப்பதால் தான். இது நிதர்ஷனமான உண்மை.
            எங்கள் வீட்டில் சிறு தோட்டம், மற்றும் பொது இடப் பராமரிப்புக்கு வேலையாள் கிடைப்பதில்லை. நான் அரசுக்கு சொந்தமான ஒரு ஏக்கர் ரிசர்வ் சைட்டை பராமரிப்பதால் எனக்கு வேலையாள் கிடைப்பதில்லை. நானே பாத்திகட்டுவது, களையெடுப்பது, நீர் ஊற்றுவது, மரம் வைப்பது,பிளாஸ்டிக் கேரிபேக்குளைப்பொருக்குவது என இருக்கிறேன். '62 வயதில் இது எனக்குத்தேவையா?' என மனம் நொந்து போகிறேன்.
 வேலையாளோடு பேசினால், அவன் போடும் சட்டங்களாவன;-
அரை நாள் தான் வேலை செய்வேன். காலை வந்தவுடன் போண்டாவோடு தேநீர், திரும்பும் போது வடையோடு தேநீர், சம்பளம் 500. இதற்கு ஒத்துக்கொண்டு அட்வானஸ் 100 கொடுத்தால் நாளை முடிந்தால் வருவேன்.’ என்கிறான்.
அரசு கட்டிலேறிய சாதாரண திராவிடஅரசியல்வாதிகள், சமுதாயத்தை எப்படி சீரழித்து விட்டனர் பாருங்கள். இப்படி ஒரு வேலையாள் சொல்வது எதனால்? 20 கி. அரிசி, சர்க்கரை, வேட்டி, சேலை, தொலை காட்சிப்பெட்டி, மிக்ஸி,ஃபேன், கிரைண்டர், சைக்கிள், பொங்கல் பரிசுகள் எனக்கொடுத்தால் அவன் வேலைக்குப்போகமாட்டான். மேலும் அன்னதானங்கள் என்ற பெயரில் அரசு,கோயில்கள், அறக்கட்டளைகள், மடாலயங்கள் இடும் சோற்றுடன் இலவசத்திருமணம், இலவசத்தாலி, கல்யாணத்துக்கு பணம், என வரிப்ணத்தை வாரி வழங்கினால் அவன் உழைப்பானா? அரசா? அல்லது அன்னமடமா? குடிகாரன் குடிப்பதற்கு இயற்கைச்சூழலைத்தேடி அமர்ந்து, குடித்துவிட்டு, பாட்டிலை உடைக்கிறான். அரசே! எந்த மாதிரி குடிமகன்களை உருவாக்குகிறீர்கள்? உங்கள் பதவி ஆசைக்காக பலியாகும் நாடே! நீ வாழ்வது எப்போது?