Showing posts with label காடு. Show all posts
Showing posts with label காடு. Show all posts

Friday, July 8, 2016

சூலூர் வனம்

சூலூர் வனம்-செங்கத்தறைப்பாதை கிழக்கு மேற்காகச்செல்கிறது

சொட்டு நீர்


சூலூர் வனம் சூலூர் சின்னக்குளம் (அ) செங்குளத்தின் வடபுறச்சரிவில் வனம் உருவாக்க முயற்சி செய்துள்ளனர். பொக்லைன் உதவியில் புதர்களை சுத்தம் செய்து வேலியிட்டு பத்தடிக்கு ஒரு மரநாற்று ஏன நட்டுள்ளனர். குழிகள் பொக்லைன் உதவி கொண்டு எடுக்கப்பட்டுள்ளன. மர நாற்றுகள் குறுக்கு மற்றும் நெடுக்கு என எப்படிப்பார்த்தாலும் பத்தடி தாம். இருபது அடிக்கு ஒன்றாக வைத்திருக்கலாம்.முழுமரத்தைப்பார்ப்பதற்கு இந்த இடைவெளி அவசியமானது.ஆனால் ஆர்வக்கோளாறில் பத்தடிக்கு ஒரு மரம் வைத்தது நன்றாக இராது.
அருகில் சின்னக்குளம் எப்போதும் வற்றாதிருப்பதால் சொட்டு நீர்இழுக்கப்பட்டுள்ளது, பாராட்டக்கூடியது. ஆடு, மாடுகள் மேயாமல் இருக்க கல், கால் வேளி போடப்பட்டுள்ளது அருமை. மர நாற்றுகள் பல வகையும் நடப்பட்டுள்ளது. இந்த முயற்சியில் ஈடுபட்டுள்ள இளவல் நண்பர்கள்; பசுமை நிழல் விஜயகுமார், தர்மராஜ், சக்திவேல் ஆகியோரைப்பாராட்டுகிறேன். 3 ஏக்கரில் 1008 மர நாற்றுகள் வைத்துள்ளனர். இன்னும் 7 ஏக்கர் நடவு பாக்கியுள்ளது. இது ஒரு பிரம்மிக்கத்தக்க முயற்சி. குளத்தை ஒட்டி நடவு செய்யப்பட்டதால் மழைநீர் கிடைக்கும், மேலும் நிலத்தடி நீர் கிடைக்கும். மரங்கள் வளர்ந்து விட்டால் குளுமையும், பசுமையும், நிறைய பிராணவாயுவும் கிடைக்கும். அதை ஒட்டிய செங்கத்துறை தார் சாலையில் நடை போனால் ரம்மியமாயிருக்கும்.
என் பங்காக, 25 கி.மீ-க்கு அப்பால் உள்ள வனம் இந்தியா பவுண்டேசனிலிருந்து எடுத்து வந்திருந்த நான்கு மர நாற்றுகள்,(மகோகனி=2+தாந்திரி= 2) அவர்கள் சின்னக்குளத்தை ஒட்டிய நாற்றுப்பண்ணையில் சேர்ப்பித்து விட்டேன். சூலூர் வன செயல் வீரர்கள் மூவரையும் வனம் பவுண்டேசனுக்கு,(பல்லடம்) ஒரு செவ்வாயன்று வாராந்திர கூட்டத்தில் அறிமுகப்படுத்தி மேலும் 300 மர நாற்றுகள் வேண்டினேன். சூலூர் வனத்தினர் வேண்டுதல் பொருத்து பொக்லைன், நாற்றுகள் என வனம் இந்தியா பவுண்டேசன் வழங்கும் என நம்புகிறேன். இவர்கள் சூலூர் ரிசர்வ் சைட்டுகளில் குழந்தைகள் விளையாட்டு பொருட்கள் மேலும் மரம் நடுதலில் ஈடுபடுவதை மெச்சுகிறேன்.

Protect Our Environment Trust, Sulur. Kindly donate to conserve our Environment, contact……e-mail: sukubird@gmail.com

Saturday, April 20, 2013




காடு எனது இன்னொரு தாய்
-சின்ன சாத்தன்
          

          ஒரு ஆடு மேய்க்கும் சிறுவன் ஆடுமேய்த்துக்கொண்டிருக்கும் போது தர்ம லிங்க சுவாமிமலைக்கு அடிவாரத்தில் அறிமுகமானான். அவன் பள்ளிக்கும் செல்கிறான். மழைக்குருவி வலைதளவாசகர்களுக்கு எறும்புச்சிங்கத்தை(Antlion) எப்படியும் காட்டிவிடுவதென எண்ணியிருந்தேன். மலை அடிவாரமுட்காட்டுக்குள் பறவை நோக்கலில் இருந்த போது எறும்புச்சிங்கவலைகள் இருந்ததைக்கண்டேன். அபிஷேக்சிறுவனை இது என்ன என்று கேட்டதற்கு அதைப்பற்றி உடனே விளக்குகிறான். காடுகள்; பூச்சி, விலங்கு, தாவரம், மண்தன்மை, மழை என இயற்கை அறிவை அவனுக்குக்கற்றுத்தருகின்றன. நகரச்சிறுவருக்கு அந்த அறிவு இல்லை. அவனைக்காடு, தையரியமாகவும், இயற்கை அறிவுடனும் வளர்த்தெடுக்கிறது. அவன் மரத்தண்டில் இருந்த சில்வண்டை (Cicada)இனம் கண்டு சொல்கிறான். சென்ற பதிவைப்படிக்காமல் வெறுமனே படம் பார்த்துச்செல்பவர்களுக்கு இப்போது என்ன விளங்கும்.படம் பார்ப்பது சிறுவர் வேலை.வளர்ந்தவர் நிறையப்படிக்க வேண்டும். சிக்கடாவுக்கு தமிழில் சில்வண்டு எனப்பெயர். நம்முன்னோர்,’ஏண்டா சில்வண்டு மாதிரி கத்தறே?’ என்று இயற்கையில் காணும் பூச்சியை உதாரணம் கொடுக்கின்றனர். அபிஷேக் தையரியமாக எறும்புச்சிங்க வலையை அடியோடு வாரியெடுத்துஉள்ளங்கை வைத்துக்காட்டுகிறான். சிக்கடா பிடித்துக்காட்டவா? என்கிறான். அந்த மலைஅடிவாரத்தில் யானை அடிக்கடி வரும். இரண்டுமுயல்கள்ஓடின.           

சின்னான்கள்(BulBuls)கீச்சான்(Shrike),செண்பகம்(Coucal),தேன்சிட்டுகள்(Sunbirds),கவுதாரி(Grey Partridge), ஈப்பிடிச்சான்கள்(Bee eaters) பரவசம் கூட்டின.

 ‘பள்ளியில் தேர்வு, மதியம் வருவேன்’ என அபிஷேக் விடைபெற்று இருபது நிமிஷப் பழக்கத்துக்குள் ஓடியேவிட்டான்.
            


ஒரு கோயிலோ, சர்ச்சோ, மசூதியோ சிறுவனுக்கு கற்றுக்கொடுப்பதை விட காடு நிறைய கற்றுக்கொடுக்கும்.


 -ஓஷோ



                                                                                                                                         
NB: There were  57 visitors visited my Blog “Mazhai kuruvi” on 16.4.13. Day by day more Blog readers like to visit my Blog. You are all requested to tell about my Blog to your friends. Mazhai kuruvi is an interesting informative entertainment to all.