Friday, June 14, 2013


ரிஷி கொன்டா கடற்கரை,விசாகப்பட்டிணம்
Travel

யாத்திரை  







ரிஷி கொன்டா கடற்கரை,விசாகப்பட்டிணம்
ராஜாராணி கோவில், புவனேஷ்வர்


            சென்ற நாட்களில் மூவாயிரம் மைல்கள் கிழக்குக்கடற்கரை ஓரமாக யாத்திரை போனேன்விசாகப்பட்டிணம் மிகத்துரித ரயில்கோனார்க் விரைவு ரயில்மற்றும் கோரமண்டல் விரைவு ரயில் யாத்திரைக்கு உதவினநடந்துசைக்கிள் ரிக்ஷா, ஆட்டோ ரிக்ஷாகார்,பேருந்துசிற்றுந்துபடகுஎன நானும் நண்பரும் நகர்ந்து கொண்டே இருந்தோம்அந்தக்கால முனிவர்களும்சித்தர்களும்புத்தபிக்குகளும்ஜைனத்துறவிளும்சாதுக்களும் இப்படித்தான் காடு,மலை, கடற்கரைகிராமம்நகரம்என நகர்ந்து கிடைப்பதை உண்டு, போய்க்கொண்டே இருப்பார்கள்அவர்களுக்கென்ற நிரந்திர இருப்பிடம் இல்லைநானும் நண்பர் வஜ்ரவேலுவும் இருவேளை மட்டும் உண்டுசில வேளை ரொட்டித்துண்டுகள்கனிகளோடு பசியாற்றிநிறைய நடந்தோம்சில வேளைகளில் ஐந்து மைல் கூட நடப்போம்இயற்கையோடு கலந்திருந்தோம்கடற்கரைகளில் மணல்உப்புகாற்றுநீலவானம்ஓம் என்று ஒலித்து வந்த அலைகளுடன் பிரபஞ்சத்தின் பிரமாண்டத்தை வியந்திருந்தோம்.வங்காள விரிகுடா சமுத்திரத்தின் Classic beach, சில்க்கா ஏரி, Golden beach,புரி, Rishikonda beach, RK beach, விசாகப்பட்டிணம்,   என சுற்றித்திரிந்தோம்.


விசாகப்பட்டிணத்தில் ஒரு நாள்கோனார்க்கில் ஒரு நாள்புரியில் இரு நாள்ரயிலில் இரு நாள் என ஆன்மா பயணத்திலேயே இருந்ததுஅருகில் சொந்தம்நண்பர் குழாம்இல்லைமுற்றிலும் தெரியாத பாஷைமுகங்கள்பிரதேசம்சீதோஷ்ணம்உணவு என இருந்தாலும் யாதும் ஊரே யாவரும் கேளிர் என மனதை சமனப்படுத்திசில உடல் உபாதைகள்நித்திரை அசொளகரியங்கள் பொறுத்து யாத்திரை மேற்கொள்வது ஆன்மாவை பதப்படுத்தும்வீட்டைப்போல் வசதிகள் எதிர் பார்ப்பதும்அது இல்லாது போகும் போது கவலைஎரிச்சல்கோபம்சந்தோஷமின்மை வரக்கூடாதுஎந்த அசொளகரியங்களிலும் குதாகலமாக இருக்கப்பழகுதல் ஆன்மாவுக்கும்மனதுக்கும் பயிற்சிஉடலை வருத்தி யாத்திரை செல்வது அந்தக்காலத்தில் நிகழ்த்தப்பட்டதுபசியை எப்போதும் உணர்ந்திர்ந்தனர்உணவு கிடைக்கும் போது உண்டனர்பசியறியாத யோகிக்கு யோகம் கைகூடாது.


 ஆதி சங்கரா இந்த மாதிரி ஊர்திவசதிவாய்ப்புகள் இல்லாத போது நான்கு முறை காலடிகேரளாவிலிருந்து இமயம் நடந்தே சென்றிருக்கிறார் என்றால் அவரது மன வலிமை எண்ணிப்பார்க்க வேண்டும்அப்போது காடுகளும்விலங்குகளும்விஷஜந்துக்களும்புயல்மழைபாலமில்லா ஆறுகள்கரடு முரடான பாதைகள்உயர்ந்த மலைகள்குளிர் என எப்படி வாட்டி எடுத்திருக்கும்அப்பர்இமயமலை சென்ற போது கால்களும்கைகளும் கிழிந்து இரத்தம் சொட்டினஅவர்களை விட நாம் இப்போது வாழும் வாழ்க்கை சொகுசு மயமானதுஇருந்தும் நாம் சலிப்புஎரிச்சல்மனவருத்தம் கொள்கிறோம்ஏன்இப்போதிருப்பது போல அப்போது வசதிவாய்ப்புகள் இல்லைஇருந்தும் நாம் நம் முன்னோரை விட சந்தோஷத்தில் இல்லைஏன்எதையோ எதிர் பார்த்துக்காத்திருக்கிறோம்திருப்தியற்ற மனநிலையில் உள்ளோம்.ஏன்எவனொருவன் மனதளவில் திருப்தியோடு இயற்கைக்கு நன்றி பகர்ந்து கிடைப்பதை உண்டுபிறரோடு பகிர்ந்து வாழ்கிறானோ அவனே செல்வந்தன்.






 ராஜாராணி கோவில் நடனமாதர்
          




           

Wednesday, May 29, 2013



பறவை விடு தூது










காலைக்கூட கையாகப்பயன் படுத்தும் அழகைப்பாருங்கள்.
கீ....கீ...எனக்கத்தித்திரியும் பச்சைக்கிளியை சுந்தரமூர்த்தி சுவாமிகள், தேவாரத்தில் சிவ பெருமானுக்கு தூது விடுகிறார். காலம் 9-ம் நூற்றாண்டு.

பறவை விடு தூது
பறக்குமெங் கிள்ளைகாள் பாடுமெம் பூவைகாள்
அறக்கண்என் னத்தகும் அடிகளா ரூரரை
மறக்ககில் லாமையும் வளைகள்நில் லாமையும்
உறக்கமில் லாமையும் உணர்த்தவல்லீர்களே
 
                                    பொருள்
                                    பறக்கின்ற கிளிகளே! பாடும்  இளம் பெண்களே!
                                    அறத்தைக்கண்ணாகக் கொண்டுள்ள ஆரூரை
                                    மறக்கமுடியாமல், உணவருந்த முடியவில்லை
                                    உறக்கமில்லாமல் இருக்கிறேன்! இதை அவருக்கு சொல்வீர்களா?



                            Conserve Birds
பாதைகளை விரிவு செய்து
மரத்தை வெட்டியதன் பலன்

                                                  சிரிக்கலாமே Bird watch Jokes

                   மனைவிஉங்க தம்பிமனையடி சாஸ்திரப்படி சமையலறை                
                                    இங்கிருக்கக்கூடாதுங்கறாரு.

                  Bird watcher (கணவர்) அவங்கிடக்கறான்காக்கைக்கும் குருவிக்கும் வித்தியாசம்            
                                         தெரியாத பயல்.


                 முக்குளிப்பான்(Little Grebe) ரயில் விடும் அழகை ரசித்திருக்கிறீர்களா? இதோ!









































கால் விரல்களுக்கிடையே ஜவ்வு இருந்தால் இப்படி நீர்ப்பரப்பின் மீது தட,தடவென  ஓடிப்பறக்கத்துவங்கும். ரயில் விடும் பறவைகள் நீர்காகம், நாமக்கோழி, கடற்காகம் முறையே
Cormorant, Coot and Gull.

Thanks to my associate friend  Radhakrishnan.N for beautiful  photographs

Answers Blog dated May 9th  ---- Recogize = Red Whiskered Bulbul/ செம்மீசைக்கொண்டைக்குருவி
                         12th ----Identify me = Blue Rock Thrush (Female)/நீலப்பூங்குருவி (பெண்)
                          21st---- Who am I = White Browed Bulbul/ வெண்புருவ சின்னான்


Monday, May 27, 2013

Amur falcon  நாகா! உண்ண உணவா இல்லை ?

அழகுப்பறவை














வலசைப்பாதை
Conservation
Amur Falcon
(Falco amurensis)
செங்கால் லகுடு

          செங்கால் லகுடு வட சீனா, மற்றும் வட கிழக்கு சைபீரியாவில் வாழும் பறவை. பார்க்க புறா போல் உள்ள அழகான பறவை. வாழும் பகுதியில் பனிப்பொழிவு ஆரம்பித்தவுடன் வலசை தொடங்கும். நவம்பர்-டிசம்பர் பொழுது தென்ஆப்ரிக்காவில் இருக்கும். பிறகு மே மாதம் திரும்பு பயணம். வரும் போதும், திரும்பும் போதும் கொஞ்சம் மார்க்கம் மாறுபட்டாலும் இந்தியாவில் நாகாலாந்து, வங்கம், ஒடிசா, மத்யபிரதேசம், குஜராத் வழியாக பறக்கின்றன. 3000 கி.மி கடல் மார்க்கமாகப்பறப்பதாகவும், நீண்ட தொலைதூரம் வலசை போகும் லகுடு இனம் இது தான் என கண்டறியப்பட்டுள்ளது. எங்கும் தங்காமல் மூன்று நாட்கள் கூட பறந்து செல்லும் ஆற்றல் உடையது. இதற்குப்பூச்சிதான் முக்கிய உணவு. இத்தகைய பறவைகளை நாகாலாந்து மக்கள் காட்டுமிராண்டித்தனமாக வேட்டையாடி விற்பது வேதனையை அளிக்கிறது. உண்ண எவ்வளவோ இருக்கும் போது நாகரிகம் வந்தும் மனதளவில் நாகரிகமற்ற இந்த நாகா மக்கள் ஏன் தான் இப்படி இருக்கிறார்கள்? இதற்கு அந்த மாநிலம் செழிப்பு மிக்கது. விளைச்சல் உள்ளது. இவர்கள் இருவாச்சி, செங்கால் லகுடுகளைக்கொன்று தின்றுவிட்டு வீராதி வீரன் போல அவற்றின் இறகுகளை தலையில் சூடிக்கொள்வது இன்னும் நாகரிகமடையாத ஒழுங்கீனத்தைக்காட்டுகிறது. உண்ண எவ்வளவோ கிடைக்கும் போது இந்த கொடூரபுத்தி அவசியமில்லாதது. பட்டினியாகிடக்கிறாய்? வலசை போகும் போதும், திரும்பும் போதும் லட்சத்தில் வலையில் பிடிப்பதும், அதை இறகு உரித்து விற்று பணம் சம்பாதிப்பதும் மனிதன் திருந்தவே மாட்டானா என ஆதங்கம் வருகிறது. பறவைப்பாதுகாப்பு சட்டப்படி அவர்களை தண்டிக்க வேண்டும். ஒருசில பாதுகாப்பு நடவடிக்கைளும் எடுக்கப்பட்டுள்ளது. போதாது. வேட்டை உணர்வை மனிதன் தன்னிலிருந்து முற்றிலுமாக அழிக்கவேண்டும். பறவைகளுக்கு மனிதன் பாதுகாவலனாக இருக்கவேண்டும். வலைப்பூ படங்கள் பிரசுரிக்கப்படுவது மக்கள் மனதில் பரிதாப உணர்வை தட்டி எழுப்பி, மனிதன் குரூர புத்தியை கண்ணாடியில் பார்ப்பது போல பார்த்து, பறவை பாதுகாப்பில் தங்களை ஈடுபடுத்திக்கொள்ளத்தான்.

# Thank you very much to various web and blog site runners. The stills downloaded from various web sources are used here to involve Blog visitors for conservation of Birds.

Thursday, May 23, 2013




வாரம் ஒரு முறையாவது ஆந்தை நண்பனைக்கல்லுக்குழியில் பார்த்ததால், நானும் கொம்பனும் பழக்கமாகிவிட்டோம். கடைசியாகப்பார்த்தபோது,  எடுத்த புகைப்படம் இது. அப்போது நான் ஆந்தை கண்களில் உணர்ந்தது யாதெனில், 'என்னைக்காப்பாற்றுவாயா?  அல்லால் இதுவே நமது கடைசி சந்திப்பாக இருக்கும் நண்பா!. குட்பை!'



இனி இந்த ஏகாந்த இடம் இல்லை
காப்பாற்றுவாயா?
Conservation
இந்தியப்பெரியகொம்பன் ஆந்தையை விரட்டியடித்த கதை

கொம்பன் ஆந்தை பற்றி ஏற்கனவே நமது மழைகுருவி வலைதளத்தில் அளவளாவி மகிழ்ந்தோம். சூலூர், ஊர்வேலங்காடு அத்துவானமுட்காட்டில் ஒரு ஜோ,டி 2 அடி உயர கொம்பன் ஆந்தைகள் மகிழ்ந்திருப்பதற்கு மனிதன் பங்கம் விளைவித்து விட்டான். அவனைத்தவிர யார் காணுயுர்களுக்கு தொந்தரவு தருவார்? சுயநலக்காரனாயிற்றே! மேலும் பணப்பித்து பிடித்தவனாயிற்றே. பித்து பிடித்தவனிடம் பேசினால் நாம் சொல்வது ஏறாது. ஊர்வேலங்காட்டில் ஒரு கற்குழி, (Ravine) டைனமைட் வைத்து கருங்கல்லுக்காக பூமியைத்தகர்க்க உருவாகிப்போக, அதில் காட்டில் பெய்த மழை தேங்கியது. டைனமைட் ஒலி எங்கள் வீட்டுக்குக்கேட்கும். ‘தொம், தொம்என பூமி உதை வாங்கிக்கொள்ளும். பூமி அடுக்கு சீர்குழைவு, அதை ஒட்டி பூமி அதிர்வு வந்தாலும் பரவாயில்லை, கோடிகோடியாக சம்பாதிக்கணுமே, கருங்கற்கள் வீடுகட்ட வேணுமே, என அடித்த அடியில் வசீகரிக்கும் கற்குழி உருவாகிப்போனது. அடடே! மனைவி, குழந்தைகளோடு அமர்ந்து பேசும் வண்ணம் ஏகாந்த வனப்பில் அந்த இடம் உருவாகிப்போனது. உள்ளிருந்து பேசினால் எதிரொலிக்கும்.
ஏகாந்தம் என்றால் என்ன? ஏகாந்தம் எனில் ஈ, காகா கூட இராது இயற்கையோடு தனித்திருப்பது. மக்கள் குறைந்தபட்சம் ஒரு நாய், அல்லது டிவி அல்லது டெடிபியரோடாவது இருப்பார்கள். தனிமை ஒரு பயம். அவர்கள் மனத்தோடு அவர்கள் இருக்கவே பயம்.
ஆச்சர்யத்திலும் ஆச்சர்யமாக கொம்பன் ஆந்தை வந்து குடியேறியது எனது அதிஷ்டம் என நினைத்தேன். காட்டுத்தண்ணீர், மழை பெய்தால் பெரிய கற்குழியானதால் அதிகம் தேங்கிப்போக கற்குழி முதலாளி டைனமைட் வைத்து அடித்து தூள் பறத்த முடியவில்லை. பம்ப் வைத்து கொஞ்ச நாள் செய்து பார்த்தார். சரிப்பட்டுவரவில்லை. சரி! அந்த கற்குழியை மூடுவிழா செய்தால் அந்த இடத்தை பிளாட் போட்டு விற்றுவிடலாம் என தீர்மானமாகி, இப்போது முத்துக்கவுண்டன்புதூரிலிருக்கும் பவுண்டரியலிருந்துகாஸ்டிங்கழிவுகளை இட்டு நிரப்ப கொஞ்சம் கொஞ்சமாக லாரிகளில் கொண்டுவரப்பட்டு கொட்டப்படுகிறது. இந்த பவுண்டரிக்கழிவுகள் கொட்டப்படும் பேரொலியால் பயந்து அதிர்ந்து போய் கொம்பன் ஆந்தைகள் எத்திசை ஏகியதோ என் வலைதளநண்பர்களே! தெரியலையே!
இந்த காஸ்டிங் கழிவில் வேதியல் சமாச்சாரங்கள் உள்ளன, அதைக்கொண்டு இந்த கற்குழி நிரப்பப்பட்டால்உங்கள் ஆழ்குழாய் கிணற்றுநீர் மாசு அடையும் என அந்தப்பகுதி மக்களுக்கு சொல்லிப்பார்த்தேன். காதில் வாங்கிக்கொள்ளவில்லை. ஆந்தையைப்பற்றிப்பேசினால் ஆச்சர்யமாகக்கேட்கிறார்களே ஒழிய அதைக்காணவோ, அதை பாதுகாக்கவோ மக்களுக்கு ஆர்வமில்லாமல் பணத்தில் மட்டுமே ஆர்வம் காட்டுகிறார்கள். கற்குழி நாளை வீட்டுமனையாகும். அரசுகூட சிங்காநல்லூர் கற்குழி மேல் சிங்கை பேருந்து நிலையமே கட்டிவிட்டதே! குளங்களெல்லாம் பேருந்து டிப்போக்கள், மின்நிலையங்கள் ஆக்கிவிட்ட அரசு எவ்வழியோ மக்களும் அவ்வழியே!